Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»3-வது நாளாக தொடரும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு
    தேசியம்

    3-வது நாளாக தொடரும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு

    adminBy adminJuly 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    3-வது நாளாக தொடரும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 3-வது நாளாக இன்றும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.

    நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கூட்டத் தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு இவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் வலியுறுத்தி வருகின்றன.

    எனினும், மக்களவையில் சபாநாயகரும், மாநிலங்களவையில் அதன் தலைவரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கேள்வி நேரம் உட்பட அவையின் பிற அலுவல்கள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

    இதனால், நேற்று முன்தினமும், நேற்றும் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியபோதும், எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். மக்களவையில் சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பதாகைகளை ஏந்தியவாறு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளிக்கு மத்தியில், சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடங்கினார். பிஹார் மாநில எம்பிக்கள், தங்கள் மாநிலத்துக்கான ரயில்வே திட்டங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.

    எனினும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி தொடர்ந்து நீடித்ததால், அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

    இதேபோல், மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. அங்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியில் கேள்வி நேரத்தைத் தொடங்கிய ஹரிவன்ஷ், உறுப்பினர்களை கேள்விகளை முன்வைக்க எழுப்பினார்.

    இலங்கை கடற்படையினரால் இந்திய மீனர்கள் கைது செய்யப்படுவது குறித்தும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்வது குறித்தும் கேள்வி எழுப்பிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இவ்விஷயத்தில் மத்திய அரசு இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், கச்சத் தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடர்ந்ததால், அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக ஹரிவன்ஷ் அறிவித்தார். இதனால், மழைக்காலக் கூட்டத் தொடரின் 3-ம் நாளான இன்றும் இரு அவைகளும் தொடங்கியவுடன் முடங்கின.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அகமதாபாத் விமான விபத்தில் இறந்தோர் உடல்களை ஒப்படைப்பதில் குளறுபடியா? – பிரிட்டன் ஊடக செய்திக்கு இந்தியா மறுப்பு

    July 23, 2025
    தேசியம்

    தர்மஸ்தலா கோயில் விவகாரம்: யூடியூப் நிறுவனத்தின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    July 23, 2025
    தேசியம்

    5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கான சுற்றுலா விசா சேவையை தொடங்குகிறது இந்தியா!

    July 23, 2025
    தேசியம்

    கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை திருவிழா: ஜூலை 27-ல் பிரதமர் மோடி பங்கேற்பு

    July 23, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்!

    July 23, 2025
    தேசியம்

    தொடர் அமளி எதிரொலி: ஜூலை 29-ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்

    July 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அகமதாபாத் விமான விபத்தில் இறந்தோர் உடல்களை ஒப்படைப்பதில் குளறுபடியா? – பிரிட்டன் ஊடக செய்திக்கு இந்தியா மறுப்பு
    • நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!
    • டெய்லர் ஸ்விஃப்ட்டின் காதலன் டிராவிஸ் கெல்ஸின் சகோதரர், கடலில் ஒரு சுறாவைக் கண்ட பிறகு மனைவியை விட்டு வெளியேறுவதை ஒப்புக்கொள்கிறார், பெருங்களிப்புடைய போட்காஸ்ட் தருணத்தில் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தர்மஸ்தலா கோயில் விவகாரம்: யூடியூப் நிறுவனத்தின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
    • நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ்ஸின் சொத்து விவரத்தை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.