Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 5 மடங்காகும்: சிஐஐ மற்றும் கேபிஎம்ஜி அறிக்கையில் தகவல்
    தேசியம்

    2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 5 மடங்காகும்: சிஐஐ மற்றும் கேபிஎம்ஜி அறிக்கையில் தகவல்

    adminBy adminMay 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 5 மடங்காகும்: சிஐஐ மற்றும் கேபிஎம்ஜி அறிக்கையில் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் 5 மடங்காக அதிகரிக்கலாம். அப்போது ராணுவத்துக்கு செலுவு செய்வதில் 3-வது பெரிய நாடாக இந்தியா மாறும் என இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் (கேபிஎம்ஜி) கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

    * இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2024-25-ம் ஆண்டில் ரூ.1.6 லட்சம் கோடியாக உள்ளது. இது 20147-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும்.

    * இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி ரூ.30,000 கோடியாக உள்ளது. இது ரூ.2.8 லட்சம் கோடியாக உயரும். அப்போது ராணுவ தளவாட துறையில் உலகளாவிய விநியோகஸ்தராக இந்தியா இருக்கும்.

    * இந்தியாவின் ராணுவ பட்ஜெட் தற்போது 6.8 லட்சம் கோடியாக உள்ளது. இது 2047-ம் ஆண்டுக்குள் ரூ.31.7 லட்சம் கோடியாக உயரும். ராணுவத்துக்கு செலவிடுவதில் தற்போது 4-வது பெரிய நாடாக இருக்கும் இந்தியா, 3-வது பெரிய நாடாக உருவெடுக்கும்.

    * கட்டமைப்பு மற்றும் நவீன சாதனங்களுக்கு இந்தியா செலவிடும் நிதி 27 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயரும்.

    * பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவு 4 சதவீதத்திலிருந்து 8 முதல் 10 சதவீதமாக அதிகரிக்கும்.

    * உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) ராணுவத்துறைக்கான பங்கு 2 சதவீதத்திலிருந்து 4 முதல் 5 சதவீதமாக அதிகரிக்கும்.

    * முக்கியமான ராணுவ தொழில்நுட்பங்களுக்கு இந்தியா தொடர்ந்து இறக்குமதியை சார்ந்து இருக்கும். சிக்கலான ராணுவ தளவாடங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கையாளும் நபர்களுக்கு பற்றாக்குறை உள்ளது.

    * எல்லைப் பிரச்சினைகள், பிராந்தியத்தில் நிலவும் பதற்றம், உலகளாவிய போட்டி நாடுகள் ஆகியவற்றால், அரசின் கவனம் நீண்டகால முதலீடுகளில் இருந்து, குறுகிய கால பதில் நடவடிக்கைகளுக்கு மாறலாம்.

    * அரசுத் துறை மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயல்படுவது முக்கியம். பாதுகாப்பு துறையில் தனியார் நிறுவனங்களை ஈர்க்க ஊக்கம் மற்றம் கொள்கையளவிலான ஆதரவு முக்கியம்.

    * வெளிநாடுகளுடனான தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அறிவுசார் சொத்து உரிமைகள் ஆகியவை உணர்வுபூர்வமான மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரலாற்று உதாரணம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை

    August 14, 2025
    தேசியம்

    ரேணுகாசுவாமி கொலை வழக்கு: ஜாமீன் ரத்தானதால் கன்னட நடிகர் தர்ஷன் மீண்டும் கைது

    August 14, 2025
    தேசியம்

    தமிழகத்தின் 32 பேர் உட்பட 1,090 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள்!

    August 14, 2025
    தேசியம்

    Bihar SIR: 65 லட்சம் வாக்காளர்கள் விவரத்தை நீக்கியதன் காரணத்துடன் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

    August 14, 2025
    தேசியம்

    நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸின் தாஜா செய்யும் கொள்கையே காரணம்: யோகி ஆதித்யாநாத்

    August 14, 2025
    தேசியம்

    பிஹார், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் தொடரும் கனமழை: டெல்லிக்கு ஆர்ஞ்ச் அலர்ட்

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னையில் கைதான 950 பேர் விடுவிப்பு
    • தசை வளர்ச்சி மற்றும் மீட்டெடுப்பை அதிகரிக்கக்கூடிய 5 இயற்கை சப்ளிமெண்ட்ஸ் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளதால்…” – பழனிசாமி பேச்சு
    • ஏர்போட்கள் காரணமாக சமூக ஊடக பயனர் தனது விசாரணையின் ஒரு பகுதியை இழக்கிறார்; நீண்டகால பயன்பாட்டிற்கு எதிரான எச்சரிக்கைகள்; ‘நான் என் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் ….’ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரலாற்று உதாரணம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.