Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»20% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
    தேசியம்

    20% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    adminBy adminSeptember 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    20% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: நாடு முழுவதும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டுக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    தற்போது செயல்பாட்டில் உள்ள பல வாகனங்கள் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்படாத சூழலில், வாகன ஓட்டிகள் எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இன்று தள்ளுபடி செய்தது.

    எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவில், ‘அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் எத்தனால் இல்லாத பெட்ரோல் கிடைப்பதை உறுதி செய்ய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துக்கு உத்தரவிடவேண்டும். நுகர்வோருக்கு தெளிவாகத் தெரியும் வகையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எத்தனால் கலப்பு குறித்து தெரியப்படுத்த வேண்டும்.

    எரிபொருள் விநியோகத்தின்போது அவர்களின் வாகனங்களின் எத்தனால் பொருந்தக்கூடிய தன்மை குறித்து நுகர்வோருக்குத் தெரிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 2019-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு காரணமாக வாகன இயந்திரச் சிதைவு மற்றும் செயல்திறன் இழப்பு குறித்த நாடு தழுவிய தாக்கம் குறித்த ஆய்வு நடத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணையின்போது, மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷதன் ஃபராசத், “எத்தனால் கலந்த பெட்ரோல் எந்தவொரு முறையான அறிவிப்பு மற்றும் பொது விழிப்புணர்வு இல்லாமல் கிடைக்கக்கூடிய ஒரே கட்டாய விருப்பமாக மாறிவிட்டது. எத்தனால் கலந்த பெட்ரோல் முற்றிலும் வேண்டாம் என நாங்கள் கேட்கவில்லை. ஆனால், எங்களுக்கு இதர தேர்வுக்கான விருப்பமும் வேண்டும்” என்று அவர் வாதிட்டார்.

    இதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், வழக்கின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அவர், “இந்த மனுதாரர் யார்?. இவற்றின் பின்னால் ஒரு பெரிய லாபி உள்ளது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அரசாங்கம் உரிய ஆய்வுகளை மேற்கொண்டது. நாம் எந்த பெட்ரோலைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நாட்டுக்கு வெளியில் இருந்து யாராவது ஆணையிடுவார்களா?” என்று கூறினார். மேலும், எத்தனால் கலப்பதால் கரும்பு விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிட்டார். இறுதியில், உச்ச நீதிமன்றம் இந்த மனுவை ஏற்க மறுத்து, எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காமல் தள்ளுபடி செய்தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பை வீதிகளில் போராடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு

    September 1, 2025
    தேசியம்

    “வாக்கு திருட்டு… பாஜகவுக்கு எதிராக ஹைட்ரஜன் குண்டு வருகிறது!” – பிஹார் பேரணியில் ராகுல் காந்தி தகவல்

    September 1, 2025
    தேசியம்

    “வாக்காளர் அதிகார யாத்திரைக்கு மிகப் பெரிய வரவேற்பு!” – தேஜஸ்வி யாதவ் விவரிப்பு

    September 1, 2025
    தேசியம்

    21-ம் நூற்றாண்டை வரையறுக்க வல்லது இந்தியா – அமெரிக்கா உறவு: அமெரிக்க தூதரகம்

    September 1, 2025
    தேசியம்

    கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவால் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழப்பு

    September 1, 2025
    தேசியம்

    Bihar SIR: செப்.1-க்கு பின்னரும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் கோரலாம்: தேர்தல் ஆணையம் தகவல்

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட வந்த பாஜகவினர் – நகர் முழுவதும் கடும் நெரிசல்
    • ஆஸ்துமாவுக்கு சிறந்த மற்றும் மோசமான தாவரங்கள்: உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பாதுகாப்பான சுவாசத்திற்கான வழிகாட்டி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தமிழகத்தில் 17 பல்கலை.கள் தேசிய கல்வி கொள்கையை பின்பற்றுவதாக தமிழக பாஜக தகவல்
    • இந்தியாவில் பாஸ்போர்ட்ஸ் விளக்கினார்: சாதாரண, இராஜதந்திர, அதிகாரப்பூர்வ, ஈ.சி.ஆர் vs அல்லாத ஈ.சி.ஆர்
    • “பிரதமர் மோடியின் சீனப் பயணம் ஏற்றுக்கொள்ள முடியாதது…” – ஜோதிமணி எம்.பி விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.