Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»17 ஆண்டு வாழ்க்கையை அர்ப்பணித்து பாலத்தை கட்டிய ஆந்திர பெண் இன்ஜினீயர்: செனாப் ரயில் பாலம் உருவான கதை
    தேசியம்

    17 ஆண்டு வாழ்க்கையை அர்ப்பணித்து பாலத்தை கட்டிய ஆந்திர பெண் இன்ஜினீயர்: செனாப் ரயில் பாலம் உருவான கதை

    adminBy adminJune 8, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    17 ஆண்டு வாழ்க்கையை அர்ப்பணித்து பாலத்தை கட்டிய ஆந்திர பெண் இன்ஜினீயர்: செனாப் ரயில் பாலம் உருவான கதை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஆந்திராவை சேர்ந்த பெண் இன்ஜினீயர் மாதவி லதா, தனது 17 ஆண்டு கால வாழ்க்கையை அர்ப்பணித்து உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை வடிவமைத்து, பிரம்மாண்டமாக கட்டி எழுப்பி உள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தால் பக்கால்- கவுரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திறந்துவைத்தார். இது, உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஆகும். பூகம்பம், வெடிகுண்டு தாக்குதலை சமாளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், இன்ஜினீயரிங் அதிசயம் என்று போற்றப்படுகிறது. செனாப் பாலம் உருவான பின்னணி கதை தற்போது வெளியாகி இருக்கிறது.

    செனாப் நதியின் குறுக்கே பாலம் கட்டும் பணி கடந்த 2004-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சிமென்ட் தூண்களால் கட்டப்பட்ட இந்த பாலத்தின் உறுதித்தன்மையில் கேள்வி எழுந்ததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் சிவில் இன்ஜினீயரிங் துறை பேராசிரியை மாதவி லதாவின் உதவி கோரப்பட்டது.

    பாறை கட்டுமானத் துறை நிபுணரான அவர், செனாப் நதி பகுதிக்கு தனது குழுவினருடன் சென்று விரிவான ஆய்வு நடத்தினார். அங்குள்ள பாறைகளின் தன்மையை ஆய்வு செய்த மாதவி இரும்பு தூண்களால் பாலத்தை கட்ட பரிந்துரை செய்தார். பாறைகளின் இடுக்குகள், பிளவுகளை அஸ்திவாரமாக பயன்படுத்தி கட்டுமான வரைபடத்தை அவர் தயார் செய்தார். இதன்படி பாறைகளின் இடுக்குகளில் பிரம்மாண்ட இரும்பு தூண்கள் நிறுவப்பட்டு பிரத்யேக சிமென்ட் கலவையால் மூடப்பட்டன. சில இடங்களில் பாறைகள் மிக ஆழமாக துளையிடப்பட்டு இரும்பு தூண்கள் பொருத்தப்பட்டன. இதன்காரணமாக உலகின் மிகவும் வலுவான பாலங்களில் ஒன்றாக செனாப் ரயில் பாலம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

    ரிக்டர் அலகில் 8 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால்கூட பாலத்துக்கு சிறுசேதம்கூட ஏற்படாது. 40 கிலோ வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தினால்கூட தகர்க்க முடியாது. பாலத்தின் சில தூண்கள் சேதமடைந்தாலும் பாலம் உடையாது. 266 கி.மீ. வேகத்தில் காற்று வீசினால்கூட பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாது. இந்த பாலம் 120 ஆண்டுகள் நீடித்து நிலைத்து நிற்கும் என்று தரச்சான்று அளிக்கப்பட்டிருக்கிறது.

    நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான அப்கான்ஸ், பெண் இன்ஜினீயர் மாதவி லதாவின் கட்டுமான வரைபடம், தொழில்நுட்பங்களைப் பின்பற்றி செனாப் பாலத்தை பிரம்மாண்டமாக கட்டி எழுப்பி உள்ளது. இந்த பாலத்துக்காக மாதவி லதா தனது 17 ஆண்டு கால வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளார். இதற்காக இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளது.

    ஐஐஎஸ்சி நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “செனாப் பாலத்தை கட்ட மாதவி லதாவும் அவரது குழுவினரும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளனர். மிகவும் சவாலான மலைப் பகுதிகளில் பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. சரிவான மலைகளில் பாறைகளையே அஸ்திவாரமாக பயன்படுத்தி பிரம்மாண்ட இரும்பு பாலத்தை கட்டி உள்ளனர். மாதவி லதா, அவரது குழுவினரின் சாதனைக்காக பெருமிதம் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    யார் இந்த மாதவி லதா? – ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், ஏடுகுண்டலபாடு என்ற சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் மாதவி லதா பிறந்தார். அங்குள்ள அரசு பள்ளியில் அவர் கல்வி பயின்றார். மருத்துவராக வேண்டும் என்பது அவரது கனவு. ஆனால் போதிய பண வசதி இல்லாததால் பெற்றோரின் அறிவுரைப்படி இன்ஜினீயரிங் துறையை அவர் தேர்வு செய்தார். ஆந்திராவில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அவர் பிடெக் படித்தார். பின்னர் வாரங்கலில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்தில் எம்டெக் படிப்பை நிறைவு செய்தார். அதன்பிறகு சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பாறை பொறியியல் துறையில் பிஎச்டி பட்டம் பெற்றார்.

    கடந்த 2003-ம் ஆண்டு முதல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் சிவில் இன்ஜினீயரிங் துறை பேராசிரியையாக மாதவி லதா பணியாற்றி வருகிறார். உலகின் மிக உயரமான, வலுவான செனாப் ரயில் பாலத்தை வடிவமைத்து ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் இந்தியாவின் பக்கம் அவர் திரும்ப வைத்துள்ளார்.

    பாலம் கட்ட உதவிய குதிரை, கழுதைகள்: செனாப் பாலத்தை கட்​டிய அப்​கான்ஸ் நிறுவன செய்​தித் தொடர்​பாளர் கூறிய​தாவது: பாலம் கட்​டு​மான பணி​கள் தொடங்​கிய​போது பெரும் சவால்​களை சந்​தித்​தோம். பொறியாளர், தொழிலா​ளர்​களை குதிரைகள், கழுதைகள் மூலம் அழைத்து சென்​றோம். கட்​டு​மான உபகரணங்​கள், கட்​டு​மான பொருட்​களை எடுத்​துச் செல்​ல​வும் குதிரைகள், கழுதைகளை பயன்​படுத்​தினோம்.

    இதன்​மூலம் முதல்​கட்​ட​மாக கட்டுமான பணி​யிடத்​துக்கு செல்ல தற்​காலிக​மாக சாலைகளை அமைத்​தோம். அதன்​ பிறகே கட்டு​மான பணி​கள் வேகம் பெற்​றன. எங்​களோடு இணைந்து உழைத்த குதிரைகள், கழுதைகளுக்​கும் நன்​றிக்​கடன் செலுத்த கடமைப்​பட்​டிருக்​கிறோம். இவ்​வாறு அப்​கான்ஸ் நிறுவன செய்​தித் தொடர்​பாளர் தெரி​வித்​தார்.

    அப்​கான்ஸ் துணைத் தலை​வர் கிருஷ்ண​மூர்த்தி சுப்​பிரமணி​யன் கூறும்​போது, “செ​னாப் ரயில் பாலம், பொறியியலின் அதிச​யம் ஆகும். கட்​டு​மான துறை​யில் இந்​தி​யா​வால் எதை​யும் சாதிக்க முடி​யும் என்​ப​தற்கு இந்த பாலம் உதா​ரணம் ஆகும். உலகின் மிக உயர​மான கிரேன்​கள், அதிநவீன கட்​டு​மான கருவி​களை பாலம் கட்​டும் பணிக்கு பயன்​படுத்​துகிறோம்’’ என்றார்.

    அப்​கான்ஸ் நிறுவன துணை நிர்​வாக இயக்​குநர் கிரிதர் ராஜகோ​பாலான் கூறும்​போது, “காற்​றின் அழுத்​தம், பாலத்​தின் பாரத்தை தாங்​கும் வகை​யில் வளைவு வடி​வில் இரும்பு தூண்​கள் அமைக்​கப்​பட்டு உள்​ளன. ரயில்வே கட்​டு​மானத்​தில் இந்த தொழில்​நுட்​பம் முதல்​முறை​யாக பயன்​படுத்​தப்​பட்டு இருக்​கிறது’’ என்று தெரி​வித்​தார்.

    அப்​கான்ஸ் நிர்​வாக இயக்​குநர் பரமசிவன் கூறும்​போது, “பொறியியல் துறை​யில் செனாப் பாலம் மிகப்​பெரிய சாதனை ஆகும். இந்த சாதனையை இந்​திய பொறியாளர்​களுக்கு அர்ப்​பணிக்​கிறோம்’’ என்று தெரி​வித்​தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘வாக்கு திருட்டு’ மோசடி விவகாரம்: ராகுல் காந்திக்கு கர்நாடகா தேர்தல் ஆணையர் நோட்டீஸ்

    August 10, 2025
    தேசியம்

    இந்தியா வல்லரசாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது: ட்ரம்ப் வரிக்கு ராஜ்நாத் சிங் பதிலடி

    August 10, 2025
    தேசியம்

    5 ஆண்டுகளில் ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடியை எட்டியது

    August 10, 2025
    தேசியம்

    பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அட்டை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

    August 10, 2025
    தேசியம்

    பெண் மருத்துவர் கொலையை கண்டித்து கொல்கத்தாவில் பெரும் ஆர்ப்பாட்டம்

    August 10, 2025
    தேசியம்

    அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்

    August 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மருனல் தாக்கூர் 8 முறை வளைவில் தீ வைத்தார்
    • கவின் படுகொலையை கண்டிக்காத திமுக, அதிமுக, பாஜகவை ஒரே தட்டில் வைத்து தான் பார்க்க வேண்டும்: கிருஷ்ணசாமி
    • கோப்வெபிங் என்றால் என்ன: மக்களுக்கு இறுதியாக வாழ்க்கையில் முன்னேற உதவும் முறிவு போக்கு – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘வாக்கு திருட்டு’ மோசடி விவகாரம்: ராகுல் காந்திக்கு கர்நாடகா தேர்தல் ஆணையர் நோட்டீஸ்
    • களைகட்டிய பாம்பன் ‘கடல் ஓசை’ சமுதாய வானொலி 10-ம் ஆண்டு தொடக்க விழா!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.