Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»1,400 டன் சிமென்ட் மூட்டைகளுடன் செனாப், ஆஞ்சி பாலங்களை கடந்து முதல் சரக்கு ரயில் காஷ்மீர் சென்றது
    தேசியம்

    1,400 டன் சிமென்ட் மூட்டைகளுடன் செனாப், ஆஞ்சி பாலங்களை கடந்து முதல் சரக்கு ரயில் காஷ்மீர் சென்றது

    adminBy adminAugust 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    1,400 டன் சிமென்ட் மூட்டைகளுடன் செனாப், ஆஞ்சி பாலங்களை கடந்து முதல் சரக்கு ரயில் காஷ்மீர் சென்றது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சமீபத்​தில் திறக்​கப்​பட்ட செனாப் பாலம் வழி​யாக 1,400 டன் சிமென்ட் மூட்​டைகளு​டன் முதல் சரக்கு ரயில் ஜம்மு காஷ்மீர் சென்​றடைந்​தது. ஜம்மு காஷ்மீர் மலைப் பகுதி என்​ப​தால் அங்கு வலு​வான தரைவழி போக்​கு​வரத்து வசதி​கள் இல்​லாமல் இருந்​தது. அதனால் அங்கு பிரம்​மாண்ட கட்​டிடங்​கள் அமைப்​ப​தில் பல சிக்​கல்​கள் ஏற்​பட்​டன. தற்​போது ஜம்மு காஷ்மீரில் ரயில்வே கட்​டமைப்​பு​கள் நவீனப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

    ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்​டத்​தில் செனாப் ஆற்​றின் குறுக்கே 4315 அடி நீளத்​தில், ஆற்​றில் இருந்து 1,178 அடி உயரத்​தில் இரும்பு மற்​றும் கான்​கிரீட் ரயில் பாலம் கடந்த 3 ஆண்டு கால​மாக அமைக்​கப்​பட்டு வந்​தது. இந்த பாலம் கடந்த ஜுன் 6-ம் தேதி திறக்​கப்​பட்​டது.

    அதே​போல் செனாப் ஆற்​றில் கிளை நதி​யான ஆஞ்சி ஆற்​றின் குறுக்கே 2380 அடி நீளம், 1086 அடி உயரத்தில் கேபிள் ரயில் பாலம் அமைக்​கப்​பட்​டது. இந்த ரயில் பாதைகள் வழி​யாக ரயில்​கள் இயக்​கப்​பட்டு பல கட்ட சோதனை​கள் நிறைவடைந்​தன. இந்​நிலை​யில் முதல் சரக்கு ரயில் பஞ்​சாப்​பில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு கடந்த வெள்ளி கிழமை இயக்​கப்​பட்​டது. சரக்கு ரயி​லின் 21 பெட்​டிகளில் 1,400 டன் சிமென்ட் மூட்​டைகள் ஏற்​றப்​பட்​டன.

    மின்​சார என்​ஜின் பொருத்​தப்​பட்ட இந்த சரக்கு ரயில் 18 மணி நேரத்​துக்​குள் 600 கி.மீ பயணம் செய்து கடந்த சனிக்​கிழமை காலை ஜம்மு காஷ்மீர் சென்​றடைந்​தது. இந்த சரக்கு ரயில் செனாப் மற்​றும் ஆஞ்சி ரயில் பாலங்​களை கடந்து சென்​றது, அந்த பாலத்​தின் வலிமை​யை​யும், இந்திய ரயில்​வே​யின் நவீன கட்​டமைப்​பையும் பறை​சாற்​றுகிறது.

    ஜம்மு காஷ்மீருக்கு அதி​களவி​லான சிமென்ட் மூட்​டைகள் கொண்டு செல்​லப்​படு​வது, அங்கு நடை​பெறும் கட்டமைப்புதிட்டங்களுக்கு மிக முக்​கிய​மானது என ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் சரக்கு மைய​மும் தற்​போது செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ள​தால், காஷ்மீருக்கு குறைந்த போக்​கு​வரத்து செல​வில் சரக்​கு​களை கொண்டு செல்​வது மேம்​படும். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர்​ மாநிலத்​தின்​ வளர்ச்​சி இனி வேகம்​ எடுக்​கும்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    சீன எல்லையில் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.30 ஆயிரம் கோடியில் ரயில் பாதை

    September 15, 2025
    தேசியம்

    கண் இமையில் பசையை ஊற்றி பள்ளி விடுதி மாணவர்கள் குறும்பு

    September 15, 2025
    தேசியம்

    சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் எம்.பி. மிமி சக்கரவர்த்தி, நடிகை ஊர்வசிக்கு அமலாக்கத் துறை சம்மன்

    September 15, 2025
    தேசியம்

    காங்கிரஸுக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

    September 15, 2025
    தேசியம்

    எல்லையில் மக்கள்தொகையை மாற்றும் சதியை முறியடிக்க விரைவில் நடவடிக்கை – பிரதமர் மோடி

    September 14, 2025
    தேசியம்

    அசாமில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம்: பூடானில் நில அதிர்வு

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சீன எல்லையில் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.30 ஆயிரம் கோடியில் ரயில் பாதை
    • விரைவில் 3 எம்எல்ஏக்கள் என்னுடன் வருவார்கள்: ராமதாஸ் நம்பிக்கை
    • ரெட்ரோ புடவைகள் ஜெமினி AI உடன் வைரலாகி செல்கின்றன: உங்கள் சொந்த சேலை திருத்தத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது இங்கே | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஸ்பேஸ்எக்ஸ் நார்த்ரோப் க்ரம்மன் சிக்னஸ் எக்ஸ்எல் ஐ.எஸ்.எஸ். – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கண் இமையில் பசையை ஊற்றி பள்ளி விடுதி மாணவர்கள் குறும்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.