Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»1,198 நாட்கள் போராடிய விவசாயிகளிடம் பணிந்த அரசு – கர்நாடகாவில் 1,777 ஏக்கர் நிலம் எடுப்பு கைவிடல்!
    தேசியம்

    1,198 நாட்கள் போராடிய விவசாயிகளிடம் பணிந்த அரசு – கர்நாடகாவில் 1,777 ஏக்கர் நிலம் எடுப்பு கைவிடல்!

    adminBy adminJuly 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    1,198 நாட்கள் போராடிய விவசாயிகளிடம் பணிந்த அரசு – கர்நாடகாவில் 1,777 ஏக்கர் நிலம் எடுப்பு கைவிடல்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: பெங்களூரு அருகே 1777 ஏக்கர் விவசாய நிலத்தை விண்வெளி பூங்காவுக்காக கையகப்படுத்தும் முடிவை கைவிடுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இதனை எதிர்த்து 1198 நாட்கள் தொடர்ந்து போராடிய விவசாயிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்துள்ள தேவனஹள்ளியில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என அம்மாநில அரசு கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தது. இதற்காக தேவனஹள்ளியை சுற்றியுள்ள 13 கிராமங்களில் 1,777 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்துவதாக அறிவித்தது. இதற்காக விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு, வேலை வாய்ப்பு, மாற்று நிலம் ஆகியவற்றை வழங்குவதாக தெரிவித்தது.

    இதனை எதிர்த்து விவசாய சங்க கூட்டமைப்பினர் 1198 நாட்களாக உண்ணாவிரதம், சாலை மறியல், பேரணி என தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். கடந்த 12-ம் தேதி பெங்களூருவில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து நிலம் கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்நிலையில் முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாய சங்க பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று, விண்வெளி பூங்கா அமைப்பதற்காக 1777 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிடுகிறது. அதற்கான அனைத்து செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். அதேவேளையில் சில விவசாயிகள் தங்களின் நிலத்தை தாமாக முன்வந்து வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அந்த நிலங்களை கையகப்படுத்தி, அதனை தொழில் வளர்ச்சிக்கு அரசு பயன்படுத்தும்.

    விண்வெளி பூங்காவில் தங்கள் நிறுவனங்களை அமைக்க விரும்பிய பல தொழிலதிபர்கள் தற்போது அண்டை மாநிலங்களுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் விவசாயிகளின் நலன் கருதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதியாக முதல்வருடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் கூறுகையில், “இது 1198 நாட்களாக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி ஆகும். இதற்காக சில விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்ற போது

    போலீஸாரின் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். சமரசமற்ற போராட்டத்தின் விளைவாகவே இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. எங்களின் கோரிக்கையை ஏற்றுகொண்ட கர்நாடக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுவோருக்கு ‘துன்புறுத்தல்’ நடப்பதாக மம்தா கண்டன பேரணி!

    July 16, 2025
    தேசியம்

    ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்

    July 16, 2025
    தேசியம்

    மத்திய அரசின் அதிதீவிர முயற்சியால் நிமிஷாவின் மரண தண்டனை தள்ளிவைப்பு

    July 16, 2025
    தேசியம்

    மாநிலங்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையில் விரைவில் சதம் அடிக்கும் பாஜக: பெரும்பான்மையை தாண்டியது என்டிஏ கூட்டணி

    July 16, 2025
    தேசியம்

    மணிப்பூர் சோதனையில் 86 ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீஸார்

    July 16, 2025
    தேசியம்

    ‘நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்’ – தீக்குளித்த ஒடிசா மாணவியின் தந்தைக்கு ராகுல் காந்தி ஆறுதல்

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பட்ஜெட் விலையில் ரியல்மி C71 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
    • சவுதி புரோ லீக் சீசனின் சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ: ரசிகர்கள் தேர்வு!
    • காமராஜர் குறித்து நான் பேசியதை விவாதப் பொருளாக்க வேண்டாம்: திருச்சி சிவா எம்.பி
    • ஜெஃப் பெசோஸின் டெய்லி டயட்: ஆக்டோபஸிலிருந்து நாஸ்டால்ஜிக் மெக்டொனால்டு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தமிழகம் முழுவதும் மது, போதைக்கு எதிராக 100 கருத்தரங்கு: கிருஷ்ணசாமி அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.