Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»100 நாள் வேலை திட்டத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை அனுமதிக்க முடியாது: மத்திய அரசு
    தேசியம்

    100 நாள் வேலை திட்டத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை அனுமதிக்க முடியாது: மத்திய அரசு

    adminBy adminMay 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    100 நாள் வேலை திட்டத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை அனுமதிக்க முடியாது: மத்திய அரசு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: 100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் அனுமதிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

    கேரளாவின் குட்டநாடு பகுதியில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வெங்காயத் தாமரை எனப்படும் ஆகாயத் தாமரையை (Water hyacinth) அகற்றுவதை 100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் நடவடிக்கையாக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து எம்.பி கொடிகுன்னில் சுரேஷ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இதற்கு மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நீர்நிலைகளை பாதிக்கும் நீர்வாழ் களையான ஆகாயத் தாமரையை அகற்றுவதை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் அனுமதிக்கப்படும் பணிகளின் பட்டியலில் சேர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் உள்ள சட்டக் கட்டுப்பாடுகளை மேற்கோள் காட்டியுள்ள சிவராஜ்சிங் சவுகான், “ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஆகாயத் தாமரையை அகற்றுவது அனுமதிக்கப்படவில்லை. இந்த விஷயத்தை அமைச்சகம் பரிசீலித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) சட்டம், 2005 இன் அட்டவணை 1, பத்தி 4(3) இன் படி, புல், கூழாங்கற்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் போன்ற உறுதியற்ற, அளவிட முடியாத மற்றும் மீண்டும், மீண்டும் நிகழும் பணிகள் மேற்கொள்ளப்படக்கூடாது.

    நீர்நிலைகளில் இருந்து ஆகாயத் தாமரையை அகற்றுவது அட்டவணை 1 பத்தி 4(3) இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வேலை வகைகளைப் போன்றது என்பதால், இத்திட்டதின் கீழ் அனுமதிக்கப்பட்ட பணிப் பட்டியலில் அதைச் சேர்க்க முடியாது.” என்று விளக்கமளித்துள்ளார்.

    அமைச்சகத்தின் விளக்கம் மற்றும் பதில் குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள எம்.பி கொடிகுன்னில் சுரேஷ் “குட்டநாட்டில் ஆகாயத் தாமரை ஒரு கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார சவாலாக மாறியுள்ளது. இது விவசாயிகள் மற்றும் மீனவர்களைப் பாதிக்கிறது மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்தை கடுமையாக பாதிக்கிறது. இது விவசாயம் மற்றும் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் இந்த அச்சுறுத்தலை நீக்குவதற்கான வேலை வாய்ப்புகளை மறுப்பது கிராமப்புற சமூகங்களுக்கு பெரும் அநீதியாகும்.

    மத்திய அரசு இந்த வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்து, ஆகாயத் தாமரையை அகற்றுதல் போன்ற சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைச் சேர்க்க அனுமதிக்கும் அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீர்வாழ் களைகளை கைமுறையாக அகற்றுவது ஆயிரக்கணக்கான கிராமப்புற தொழிலாளர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை வழங்கும். மேலும் குட்டநாட்டின் சிதையக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கவும் உதவும்” என்று கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு

    September 24, 2025
    தேசியம்

    மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டம்: 4 பேர் உயிரிழப்பு, 50+ காயம் – வன்முறையால் பதற்றம்

    September 24, 2025
    தேசியம்

    விமானத்தின் கியர் பெட்டியில் ஒளிந்து ஆப்கனிலிருந்து டெல்லி வந்த சிறுவன்

    September 24, 2025
    தேசியம்

    “திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்க வேண்டும்” – தமிழிசை

    September 24, 2025
    தேசியம்

    மாநில அந்தஸ்து கோரி லடாக் பாஜக அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை

    September 24, 2025
    தேசியம்

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: டெல்லியில் பிரபல சாமியார் தலைமறைவு

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தொப்பை கொழுப்பை குறிவைத்து எடை இழப்பு இலக்குகளை அடைய இந்த பழங்களுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு
    • புதுமுக இயக்குநர் இயக்கத்தில் விக்ரம்
    • பொதுக்கூட்டங்கள் நடத்தும் கட்சிகளிடம் டெபாசிட்: விதிமுறைகள் வகுக்க அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்
    • உங்களுக்கு பிடித்த கோல்கப்பா உங்கள் இதயத்திற்கு ஆபத்தானதா? வல்லுநர்கள் எடையுள்ளவர்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.