Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»10 ஆண்டுகளில் கடத்தலில் பிடிபட்ட தங்கம் எவ்வளவு? – மத்திய அரசு தகவல்
    தேசியம்

    10 ஆண்டுகளில் கடத்தலில் பிடிபட்ட தங்கம் எவ்வளவு? – மத்திய அரசு தகவல்

    adminBy adminAugust 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    10 ஆண்டுகளில் கடத்தலில் பிடிபட்ட தங்கம் எவ்வளவு? – மத்திய அரசு தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் கடத்தலில் பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு வெளியாகி உள்ளது. இந்த தகவலை, நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித் துறையின் இணை அமைச்ச பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மக்களவையில் எழுந்த ஒரு கேள்விக்கான எழுத்துபூர்வமாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்துள்ள்ளார். அதில், ”உலகில் அதிகம் கடத்தப்படும் பொருட்களில் தங்கம் ஒன்றாகும். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் தங்கம் அதிக அளவில் கடத்தப்படுகிறது. அதைப் பிடிக்க நிறுவனங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளன.

    2024-25-ம் ஆண்டில் மொத்தம் 3,005 வழக்குகளில் தங்கத்தை புலனாய்வு அமைப்புகள் பறிமுதல் செய்துள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு முந்தைய ஆண்டை விட பாதிக்கு மேல் குறைந்துள்ளது. இதன்படி, 2023-24-ம் ஆண்டில், 6,599 கடத்தல் வழக்குகளில் சுமார் 4,972 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது, இதுவரை கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பில் அதிகபட்ச தொகையாகும். இதுவே 2024-25-ம் ஆண்டில், இது 2,600 கிலோவாகக் குறைந்துள்ளது.

    2023 நிதியாண்டில், 4,343 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2022 நிதியாண்டில் மற்றும் 2021 நிதியாண்டில், இந்த பறிமுதல் முறையே 2,172 கிலோ மற்றும் 1,944 கிலோவாக இருந்தது. விலை அடிப்படையில், தங்கம் இறக்குமதி 2024ம் ஆண்டில் 58 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது, 2023-ம் ஆண்டில் 42.58 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2022-ம் ஆண்டில், இந்த விலை மதிப்பற்ற மஞ்சள் உலோகமான தங்கத்தின் இறக்குமதி 36.59 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2021-ம் ஆண்டில் இது 55.78 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

    கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் பெருவிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இது முறையே 5.21 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 4.37 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. இந்தியாவில் தங்க சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் வரும் ஆண்டுகளில் அதன் இறக்குமதி மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    எல்லையில் மக்கள்தொகையை மாற்றும் சதியை முறியடிக்க விரைவில் நடவடிக்கை – பிரதமர் மோடி

    September 14, 2025
    தேசியம்

    அசாமில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம்: பூடானில் நில அதிர்வு

    September 14, 2025
    தேசியம்

    பாகிஸ்தான் பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

    September 14, 2025
    தேசியம்

    இந்தி, இந்திய மொழிகளின் நண்பன்; போட்டி அல்ல: அமித் ஷா

    September 14, 2025
    தேசியம்

    பஹல்காமில் பலியான 26 பேரை விட பணம் முக்கியமா? – இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டி குறித்து ஒவைசி விமர்சனம்

    September 14, 2025
    தேசியம்

    ”நயன்தாரா வந்தால் இதைவிட இரண்டு மடங்கு கூட்டம் வரும்” – விஜய்யை சீண்டிய சீமான்

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் நாளை முதல் செப்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
    • முதுநிலை மேலாண்மை படிப்புக்கான ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.20 வரை அவகாசம் நீட்டிப்பு
    • இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: 2026 மார்ச்சில் பொதுத் தேர்தல்
    • வடபழனி முருகன் கோயில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அக்.13-ம் தேதி கடைசி நாள்
    • ஜிஎஸ்டி 13% வரை குறைக்கப்படுவதால் 140 கோடி மக்களுக்கும் பலன் கிடைக்கும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.