Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி; பலர் படுகாயம்
    தேசியம்

    ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி; பலர் படுகாயம்

    adminBy adminMay 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி; பலர் படுகாயம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புகழ்பெற்ற சார்மினார் நினைவுச் சின்னம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது.

    இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அதிகாலை 6,30 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் வந்தது. உடனடியாக அங்கு விரைந்தோம். தீயணைப்பில் 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. பலர் உயிரிழந்தனர். சிலரைக் காயங்களுடன் மீட்டோம். அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.” என்றார்.

    மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, “சார்மினார் நினைவுச் சின்னம் அருகே நகைக் கடைகள் அதிகம் நிறைந்த குல்சார் ஹவுஸ் பகுதியில் ஒரு நகைக் கடைக்கு மேல் உள்ள வீட்டில் உள்ளோர் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நான் நேரில் சந்தித்தேன். இது ஒரு துயரச் சம்பவம். இந்த விபத்து தொடர்பாக நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை. ஆனால் காவல்துறையினர், நகராட்சி, தீயணைப்புத் துறையினர் என அனைவரும் எப்போதும் முழு பலத்துடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இன்று இந்த விபத்தில் வேகமாக செயல்பட, தீயணைப்புத் துறையிடம் போதிய உபகரணங்கள் இல்லை என்ற தகவலை அறிந்தேன். எதிர்காலத்தில் இதுபோன்ற துறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி பெற்றுத் தருவது குறித்து நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசவிருக்கிறேன்.” என்றார்.

    முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்த விபத்து குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிட உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

    தெலங்கானா அமைச்சர் பொன்னம் பிரபாகர், “விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விரைவில் முழுத் தகவலையும் அரசு பகிரும்.” என்றார்.

    பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஹைதராபாத் தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து வேதனை அடைகிறோம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தோர் விரைவில் குணமடையட்டும். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பரிந்துரைக்கப்பட்ட வரம்பைவிட செல்போனில் 2 மடங்கு நேரம் செலவிடும் இந்திய குழந்தைகள்!

    July 10, 2025
    தேசியம்

    தீவிரவாதி ரானாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    July 10, 2025
    தேசியம்

    கடையடைப்பு, பைக் பேரணிகள் முதல் சாலை, ரயில் மறியல் வரை – எப்படி இருந்தது பாரத் பந்த்?

    July 9, 2025
    தேசியம்

    வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்: பாட்னாவில் ராகுல் காந்தி சீற்றம்

    July 9, 2025
    தேசியம்

    ஏமனில் கேரள நர்ஸுக்கு ஜூலை 16-ல் மரண தண்டனை: கடைசி முயற்சியில் ‘சேவ் நிமிஷா பிரியா கவுன்சில்’

    July 9, 2025
    தேசியம்

    “இதுதான் எங்கள் பாணி…” – கேன்டீன் ஊழியரை தாக்கிய சிவசேனா எம்எல்ஏ விளக்கம்

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பரிந்துரைக்கப்பட்ட வரம்பைவிட செல்போனில் 2 மடங்கு நேரம் செலவிடும் இந்திய குழந்தைகள்!
    • நமீபியா கலைஞர்களுடன் இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி
    • கடலூரில் தொழிற்சங்கத்தினர் 15 இடங்களில் மறியல் போராட்டம்; 1500 பேர் கைது
    • காபி நன்மைகள்: தினமும் 3 கப் காபி கொழுப்பு கல்லீரலின் அபாயத்தை 20% குறைக்கும், மற்றும் நாள்பட்ட கல்லீரல் நோயிலிருந்து இறப்பு 49% | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தீவிரவாதி ரானாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.