Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஹெலிகாப்டர் தோற்றத்தில் கார் – அனுமதி பெறாத வடிவம் என்பதால் பறிமுதல் செய்த உ.பி போலீஸார்
    தேசியம்

    ஹெலிகாப்டர் தோற்றத்தில் கார் – அனுமதி பெறாத வடிவம் என்பதால் பறிமுதல் செய்த உ.பி போலீஸார்

    adminBy adminMay 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஹெலிகாப்டர் தோற்றத்தில் கார் – அனுமதி பெறாத வடிவம் என்பதால் பறிமுதல் செய்த உ.பி போலீஸார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் தோற்றத்தில் இருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்புக்கான அனுமதி பெறவில்லை என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் பட்டி காவல் நிலையப் பகுதியில் போலீஸார் ஒரு தனித்துவமான காரை பறிமுதல் செய்துள்ளனர். இது, ஜோன்பூர் மாவட்டம் மஹராஜ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள லோஹிந்தாவைச் சேர்ந்த ராஜ் நாராயண் என்பவருக்கு சொந்தமானது. இவர் தனது காரை ஹெலிகாப்டர் போன்ற தோற்றத்தில் மாற்றியமைத்துள்ளார். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்த இந்த கார், திருமணங்களில் மணமகனுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்துள்ளது.

    பட்டி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் குமார் தீட்சித் பத்வா பிரதாப்கரின் கடைவீதி பஜாரில் ரோந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்துகொண்டிருந்த இந்த ஹெலிகாப்டர் வடிவிலான கார், அவரது கண்களில் தென்பட்டுள்ளது. இந்த காரை ரோஹிடாவைச் சேர்ந்த தினேஷ் குமார் படேல் என்ற ஓட்டுநர் ஒட்டி வந்தார். முதலில் ஹெலிகாப்டர் காரை பார்த்து வியந்துள்ளார், உதவி ஆய்வாளரான குமார் தீட்சித். இதன் பிறகு அவர் உடனடியாக காரை நிறுத்தி விசாரித்துள்ளார்.

    பின்னர் அவர் காரை காவல் நிலையத்திற்கு கொண்டு வரக் கூறிவிட்டு, அதைப் பறிமுதல் செய்தார். மேலும், காருக்கு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இது குறித்து உதவி ஆய்வாளர் குமார் தீட்சித் கூறுகையில், ’இதுபோன்ற மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். முன்னதாக, வெவ்வேறு வகையான ஒலியை உருவாக்கும் சைலன்சர்களைக் கொண்ட 18 முதல் 20 புல்லட் பைக்குகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’எனத் தெரிவித்தார்.

    இந்த கார் மீது, மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 207-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. போலீஸார் காரை நிறுத்தியபோது, காரைப் பார்க்க ஒரு பெரும் கூட்டம் கூடியது.ஏனெனில், காரின் பின்பகுதியில் ஹெலிகாப்டரைப் போன்ற நீண்ட வால்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹெலிகாப்டரின் தலை மீது அமைந்துள்ள காத்தாடியும் இந்த காரில் பொறுத்தப்பட்டுள்ளது.

    இந்த ஹெலிகாப்டர் காரால், பிரதாப்கர் நகரக் காவல் நிலையம் ஒரு சுற்றுலா பகுதியாக மாறிவிட்டது. கொளுத்தும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் பிரதாப்கரை சுற்றியுள்ள கிராமத்தினரும் ஹெலிகாப்டரைக் காரைக் காண காவல் நிலையத்திற்கு கூடத் துவங்கிவிட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    உத்தராகண்ட் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாப உயிரிழப்பு

    July 28, 2025
    தேசியம்

    ‘ஞான பாரத இயக்கம்’ திட்டத்துக்கு வித்திட்ட தஞ்சை மணிமாறன்: பிரதமர் மோடி புகழாரம்

    July 27, 2025
    தேசியம்

    பெங்களூரு நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை

    July 27, 2025
    தேசியம்

    ஹரித்வார் மானசா தேவி கோயிலில் கடும் நெரிசல்: 6 பேர் உயிரிழப்பு

    July 27, 2025
    தேசியம்

    கர்நாடகாவில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உண்டு உறைவிட பள்ளிகள் தொடக்கம்

    July 27, 2025
    தேசியம்

    ராணுவத்தினருக்கு சட்ட உதவிகள் அளிக்கும் திட்டம் தொடக்கம்

    July 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தீர்ந்த சிக்கல்கள் – ‘அடங்காதே’ 8 ஆண்டுக்குப் பின் ஆக.27-ல் ரிலீஸ்!
    • தமிழக மக்கள் ‘கூட்டணி ஆட்சி’க்கு வாக்களிக்க உள்ளனர்: தினகரன் கருத்து
    • உத்தராகண்ட் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாப உயிரிழப்பு
    • ராமேசுவரத்தில் அப்துல் கலாமின் 10-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை: பொதுமக்கள் அஞ்சலி
    • பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் திருமாவளவன் | கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.