Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»விமான விபத்தில் உயிரிழந்த குகி, மைதேயி பணிப் பெண்கள்: இன பாகுபாடு இல்லாமல் மணிப்பூர் மக்கள் ஒன்று சேர்ந்து இரங்கல்
    தேசியம்

    விமான விபத்தில் உயிரிழந்த குகி, மைதேயி பணிப் பெண்கள்: இன பாகுபாடு இல்லாமல் மணிப்பூர் மக்கள் ஒன்று சேர்ந்து இரங்கல்

    adminBy adminJune 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விமான விபத்தில் உயிரிழந்த குகி, மைதேயி பணிப் பெண்கள்: இன பாகுபாடு இல்லாமல் மணிப்பூர் மக்கள் ஒன்று சேர்ந்து இரங்கல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கொல்கத்தா: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் விமான விபத்​தில் விமானப் பணிப் பெண்​கள் 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். அவர்​கள் இனக் கலவரத்​தால் பாதிக்​கப்​பட்​டுள்ள மணிப்​பூரைச் சேர்ந்த குகி மற்​றும் மைதேயி இனத்​தைச் சேர்ந்​தவர்​கள் என்​பது தெரிய வந்​துள்​ளது.

    ஏர் இந்​தியா விமானத்​தில் மொத்​தம் 10 பணிப்​பெண்​கள் இருந்​துள்​ளனர். அவர்​களில் மணிப்​பூர் மாநிலத்​தின் குகி இனத்தை சேர்ந்த லாம்​நந்​தி​யம் சிங்​சன் மற்​றும் மைதேயி இனத்தை சேர்ந்த கந்​தோய் சர்மா காங்​பிரெய்​லாக்​பம் ஆகிய இரு​வரும் அடங்​கு​வர். இவர்​களும் விமான விபத்​தில் உயி​ரிழந்​தனர். அகம​தா​பாத்​தில் விமானம் விபத்​துக்​குள்​ளான தகவல் அறிந்​ததும் இவர்​களது குடும்​பத்​தினர் அதிர்ச்சி அடைந்​தனர். லாம்​நந்​தி​யம், கந்​தோய் இரு​வரும் உயி​ரிழந்த தகவல் அறிந்​தவுடன் சமூக அமைப்​பினர், மணிப்​பூர் மக்​கள் என அனை​வரும் தங்​கள் இன வேறு​பாட்டை மறந்து அந்​தக் குடும்​பத்​தினருக்கு இரங்​கல் தெரி​வித்​தனர். குகி – மைதேயி இனங்​களை மறந்து அரசி​யல் கட்​சி​யினரும் குடிமக்​களும் பல்​வேறு அமைப்​பினரும் ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். அத்​துடன் சோக​மான இந்த நேரத்​தில் 2 குடும்​பத்​தினருக்​கும் ஆதர​வாக இருப்​போம் என்று தெரி​வித்​துள்​ளனர்.

    தவிர சமூக வலை​தளங்​களில் அந்த 2 விமானப் பணிப்​பெண்​களின் ஆத்மா சாந்​தி​யடைய ஆழ்ந்த இரங்​கல்​கள் குவிந்​தன. இதுகுறித்து டெல்​லி​யில் உள்ள மைதேயி பாரம்​பரிய சொசைட்​டி​யின் செய்​தித் தொடர்​பாளர் கூறும்​போது, ‘‘மணிப்​பூர் மக்​கள் அனை​வருமே இதயம் நொடிந்து போயுள்​ளனர். குகி, மைதேயி இனத்தை பொருட்​படுத்​தாமல், அனை​வருமே இறந்த அந்த இளம்​பெண்​களுக்​காக பிரார்த்​தனை செய்​தனர். இரங்​கல் தெரி​வித்து வரு​கின்​றனர். கடந்த 2 ஆண்​டு​களாக மணிப்​பூரில் நடை​பெற்று வரும் குக்கி – மைதேயி இனக் கலவரம், இந்த 2 இளம்​பெண்​களின் இறப்​பால் மங்​கி​யுள்​ளது. அவர்​கள் வானத்​தின் தேவதைகள். அந்த 2 பெண்​களின் மரணம், 2 இனங்​களை ஒன்​றிணைக்க உதவி​யுள்​ளது. இந்த மனித உயிர் எத்​தனை அரியது என்​பதை அவர்​களுக்கு உணர்த்தி உள்​ளது. வாழும் வரை அமை​தி​யாக ஒன்​றிணைந்து வாழ வேண்​டும் என்​பதை அவர்​களு​டைய மரணங்​கள் உணர்த்தி உள்​ளது’’ என்​றார்.

    இதற்​கிடை​யில், லாம்​நந்​தி​யம் மற்​றும் கந்​தோய் ஆகியோரின் குடும்​பத்​தினர் அகம​தா​பாத் விரைந்து சென்​றனர். அங்கு உடல்​களை அடை​யாளம் காண, டிஎன்ஏ பரிசோதனைக்​காக தங்​கள் ரத்த மாதிரி​களை வழங்​கினர். உயி​ரிழந்த விமான பணிப்​பெண்​களின் ஆத்மா சாந்​தி​யடைய டெல்​லி​யில் உள்ள குகி இன மாணவர் சங்​கம் மெழுகு​வர்த்தி ஊர்​வலத்​துக்கு ஏற்​பாடு செய்​துள்​ளது. உயி​ரிழந்த லாம்​நந்​தி​யம் சிங்​சன் குடும்​பத்​தில் அவர் மட்​டும்​தான் வரு​வாய் ஈட்​டு​பவ​ராக இருந்​துள்​ளார். இவரது குடும்​பத்​தினர் காங்​போக்பி என்ற பகு​தி​யில் வாடகை வீட்​டில் வசிக்​கின்​றனர். எக்ஸ் வலை​தளத்​தில் ஒரு​வர் கூறும்​போது, ‘‘உ​யிருடன் இருக்​கும்போது குகி – மைதேயி என பிரி​வினை பார்க்​கிறோம். ஆனால், மரணத்​தில் அனை​வரும் ஒரே விதி​யைத்​தான் சந்​திக்​கிறோம் என்​பதை 2 விமான பணிப்​பெண்​களும் உணர்த்தி உள்​ளனர்’’ என்று தெரி​வித்​து உள்​ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

    July 1, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு 52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் பணி தீவிரம்

    July 1, 2025
    தேசியம்

    உளவாளியாக செயல்பட ரஷ்யாவிடமிருந்து நிதியுதவி பெற்ற 150 காங்கிரஸ் எம்.பி.க்கள்: பாஜக எம்.பி. குற்றச்சாட்டு

    July 1, 2025
    தேசியம்

    ஓமன் சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ: மீட்புப் பணிக்கு விரைந்தது இந்திய கடற்படை

    July 1, 2025
    தேசியம்

    கடந்த 10 ஆண்டுகளில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பயனடைவோர் 64.3% அதிகரிப்பு

    July 1, 2025
    தேசியம்

    வேலை இல்லாததால் இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “அஜித்குமார் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து நீதியை நிலைநாட்டுக” – விஜய்
    • வெறும் 365 நாட்களில் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்க 7 வழிகள்
    • திருப்புவனம் காவல்நிலைய கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி
    • லூயிஸ் உய்ட்டன் ஆட்டோ ரிக்ஷா பை: ஆட்டோரிக்ஷா பைக்கு வழிவகுக்கவும்: எல்வியின் தைரியமான அஞ்சலி இன்னும் இந்தியாவுக்கு! | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சி.என்.எஸ்.ஏ பூமி மற்றும் சந்திரனின் படங்களை டயான்வென் -2 ஆல் 590,000 கி.மீ ஆழத்தில் வெளியிடுகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.