Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»விமான பயணிகள் எண்ணிக்கை 50 கோடியாக உயரும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
    தேசியம்

    விமான பயணிகள் எண்ணிக்கை 50 கோடியாக உயரும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

    adminBy adminJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விமான பயணிகள் எண்ணிக்கை 50 கோடியாக உயரும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: நாடு முழுவதும் ஓராண்டில் 24 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்கின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும். அதாவது 2030-ம் ஆண்டு முதல் ஓராண்டில் 50 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்வர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் 81-வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மற்றும் உலக விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விமான போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக விண்வெளி மற்றும் விமான போக்குவரத்தில் உலகளாவிய தலைமையாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

    தற்போது விண்வெளியில் உள்ள பல்வேறு கோள்களுக்கு பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இனிமேல் பூமியில் உள்ள நகரங்களுக்கு மட்டுமல்ல, பூமியில் இருந்து பல்வேறு கோள்களுக்கும் பயணம் மேற்கொள்ளப்படும். இதற்கு இந்தியா தயாராக உள்ளது.

    தற்போதைய சூழலில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய உள்நாட்டு விமான சந்தையாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. இது இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் பொற்கால அத்தியாயம் ஆகும்.

    இந்தியாவில் தற்போது ஓராண்டில் 24 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்கின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும். அதாவது 2030-ம் ஆண்டு முதல் ஓராண்டில் 50 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்வர்.

    இந்தியாவில் ஆண்டுதோறும் 35 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகள் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இது விரைவில் ஒரு கோடி மெட்ரிக் டன்களாக அதிகரிக்கும். பயணிகள், சரக்கு போக்குவரத்து கணிசமாக அதிகரித்து வருவதால் இந்திய விமான நிறுவனங்கள் தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன.

    கடந்த 2014-ம் ஆண்டில் நாட்டில் 74 விமான நிலையங்கள் இருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது 162 ஆக அதிகரித்துள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் 2,000- க்கும் மேற்பட்ட புதிய பயணிகள் விமானங்களை வாங்க ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளன. இன்றைய சூழலில் விமானங்கள் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்கான மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

    இந்தியாவில் பணியாற்றும் விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இது சர்வதேச சராசரியைவிட அதிகம் ஆகும். இந்திய விமான போக்குவரத்து துறையில் பணியாற்றும் பெண் இன்ஜினீயர்களும் கணிசமாக அதிகரித்து வருகின்றனர்.

    சர்வதேச அளவில் ட்ரோன் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த துறையிலும் இந்தியா கோலோச்சி வருகிறது. சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் , விவசாயம் மற்றும் விநியாகம் சார்ந்த பணிகளுக்கு ட்ரோன்களை இயக்கி வருகின்றனர். இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகி வருகிறது. பெண்களின் வருவாய் அதிகரித்து வருகிறது.

    இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் உள்நாட்டில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் விமானங்களை தயாரிக்க வேண்டும். இதற்கு விமான உற்பத்தி நிறுவனங்கள் அதிதீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் விமான பயணத்தை மேற்கொள்ள வழிவகைகளை செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    முதல் கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் 1 முதல் தொடக்கம்

    June 30, 2025
    தேசியம்

    ஒடிசாவின் புரி ரதயாத்திரை கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள்  உயிரிழப்பு

    June 30, 2025
    தேசியம்

    கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: முக்கிய குற்றவாளி மனோஜித் ஒரு சைக்கோ என குற்றச்சாட்டு

    June 30, 2025
    தேசியம்

    மாணவ, மாணவியரின் உடல்நலன், மனநலனை மேம்படுத்த கடும் எதிர்ப்பை மீறி கேரள பள்ளிகளில் ஜும்பா நடன பயிற்சி

    June 30, 2025
    தேசியம்

    ஹரியானாவில் முன்னாள் காங். எம்எல்ஏ-வின் ரூ.557 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

    June 30, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா இழந்த விமானம் குறித்து காங்கிரஸ் மீண்டும் கேள்வி

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கல்விக்கு உதவும் ‘சமூக வலைதளம்’
    • அமித் ஷா குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம்
    • மறைந்த இளவரசி டயானா ஒருபோதும் கையுறைகளை அணியவில்லை என்பதற்கான தொடுகின்ற காரணம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பரந்தூரில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான விலை: ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.2.51 கோடி வரை நிர்ணயம்
    • இந்த பருவமழை தாய் மங்கூர் மீன் சாப்பிட வேண்டாம்: இது தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.