Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»விமானங்களுக்கு ஆயுட்காலம் விதிக்காதது ஏன்? – சமூக வலைதளங்களில் வைரலாகும் விவாதங்கள்
    தேசியம்

    விமானங்களுக்கு ஆயுட்காலம் விதிக்காதது ஏன்? – சமூக வலைதளங்களில் வைரலாகும் விவாதங்கள்

    adminBy adminJune 14, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விமானங்களுக்கு ஆயுட்காலம் விதிக்காதது ஏன்? – சமூக வலைதளங்களில் வைரலாகும் விவாதங்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: சாலைகளில் ஓடும் வாகனங்களுக்கு இருப்பதை போல், விமானங்களுக்கான ஆயுட்காலம் விதிக்காதது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. குஜராத் விமான விபத்தை அடுத்து சாலை வாகனங்களுடன் ஒப்பிட்டு ஆயுட்காலம் மீதான விவாதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    சுற்றுச்சூழலைக் கணக்கில் கொண்டு உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை ஆணையத்தால் டீசல் வாகனங்களுக்கு 10 வருடமும், பெட்ரோல் வாகனங்களுக்கு 15 வருடங்கள் என ஆயுட்காலம் விதிக்கப்பட்டுள்ளது. இவை 2015 மற்றும் 2018 -ல் விதிக்கப்பட்டன. 10, 15 வருடங்களுக்கு பிறகும் சில வாகனங்கள் மாசுகட்டுப்பாடு விதிகளுக்கும் குறைவானப் புகைகளை வீசுகின்றன அந்த வாகனங்களுக்கும் சாலைகளில் ஓட அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்தவகையில், ஆகாயங்களில் பறக்கும் விமானங்களுக்காக எந்தவிதமான ஆயுட்காலமும் அரசு விதிக்கவில்லை எனத் தெரிகிறது.

    எனினும், இந்த விமானங்களைத் தயார் செய்யும் நிறுவனங்கள் அதற்கான ஆயுட்காலத்தை நிர்ணயித்துள்ளன. ஆனால், அந்த ஆயுட்காலம் வரையிலும் அவை வானில் பறக்கின்றனவா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. குஜராத்தில் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானம் 12 வருடங்கள் பழமையானது. இது, விபத்திற்குள்ளன பின் சமூகவலைதளங்களில் இதன் மீதான விவாதங்கள் எழுந்துள்ளன. இதனால், விமானங்களின் ஆயுளை ஆய்வு செய்து மத்திய அரசு அதற்கான விதிமுறைகளை நிர்ணயிக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    வானில் பறக்கும் விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கும் அமைப்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) மற்றும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ஐடிஏஒ) உள்ளன. இதன் விதிமுறைகளின் கீழ், இந்தியாவில் விமானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு எதுவும் இல்லை எனக் கருதப்படுகிறது. இதற்கு ஈடாக விமானங்களின் பறக்கும் தகுதியை, அவற்றின் தொழில்நுட்ப நிலை, பராமரிப்பு மற்றும் வழக்கமான ஆய்வுகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதன் பின்னணியில், விமானப் போக்குவரத்தில், வயதை விட பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தரநிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது காரணம்.

    அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான போயிங் 787-8 வகை விமானம் 11.5 ஆண்டுகள் பழமையானது. இருப்பினும் அதன் வடிவமைப்பு தயாரிப்பு நிறுவனம் அளித்த ஆயுட்காலத்திற்குள் இருந்தது. இந்த விமானத்தை தயாரித்த நிறுவனம் அதற்கு 44,000 விமான சுழற்சிகள் அல்லது 30 முதல் 50 ஆண்டுகள் என அதன் ஆயுட்காலத்தை நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒரிரு குறிப்பிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தும் விமானங்கள் 10 முதல் 20 ஆண்டுகள் பழமையானவை எனப் புகார்கள் உள்ளன.

    விமானத் தயாரிப்புகளின் தொழில்நுட்பக் கருத்துக்களின்படி, வானில் பறக்கும் அனைத்து விமானங்களுக்கும் டிஜிசிஏ மற்றும் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எப்ஏஏ) ஆகியவை வழக்கமான தணிக்கைகளை நடத்துகின்றன. சி வகை சோதனையை ஒவ்வொரு 18 முதல் 24 மாதங்களுக்கு நடத்தப்படுகிறது. டி வகை சோதனை ஒவ்வொரு 6 முதல் 10 வருடங்களுக்கு செய்யப்படுகிறது.

    இது குறித்து ’இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் சாலை வாகனத் தயாரிப்பாளர்கள் வட்டாரம் கூறுகையில், ‘சாலையின் வாகனங்களுக்கு தடை செய்வதன் மூலம் அதன் தயாரிப்பு நிறுவனங்கள் பயனடைகின்றன. இதன்மூலம், வாகனங்களின் உற்பத்தி பெருகுகிறது. அதிக விலையுள்ள விமானங்களின் வயதை நிர்ணயிப்பதால் விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கின்றன. இதன்மூலம், வாகனம் மற்றும் விமானத் தயாரிப்பாளர் என இரு தரப்பினருக்கும் லாபமே முக்கியம்.’ எனத் தெரிவித்தனர்.

    விமானங்களை காருடன் ஒப்பிட்டும் சமூகவலைதளங்களில் சில விவாதங்கள் எழுந்துள்ளன. இதன்படி, ஒரு காரின் சராசரி ஆயுட்காலம் 20 முதல் 25 ஆண்டுகள் எனக் கருதப்படுகிறது. ஆனால் அதிக சதவீத வாகனங்கள் பத்து ஆண்டுகளில் கூட 1 லட்சம் முதல் 2 லட்சம் கிலோமீட்டர் வரை ஓட்ட முடியாதவர்களால் இயக்கப்படுகின்றன. ஓய்வு பெற்ற பிறகு எப்போதாவது மட்டுமே கார்களைப் பயன்படுத்துபவர்களும் உள்ளனர். இத்துடன், அவர்களிடம் இன்னொரு கார் வாங்க பணமும் இல்லை, வங்கிகளில் கடன் வாங்கத் தகுதியும் இல்லை.

    இந்தநிலையில், அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் வான்வழிப் பயணங்கள் மீது பொதுமக்களின் நம்பிக்கை குறையும் வாய்ப்புகள் உள்ளன. பழைய விமானங்கள் குறைபாடுகளுக்கு உள்ளானால், அதன் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். அவற்றின் வயது வரம்பு கார்களின் வயது வரம்புடன் சமமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசும் நீதிமன்றமும் பழைய விமானங்களுக்கான வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் குஜராத் விபத்திற்கு பின் எழத் துவங்கி உள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தை – 2வது இடத்தில் தமிழ்நாடு

    September 8, 2025
    தேசியம்

    பயங்கரவாத சதி வழக்கு: தமிழகம் முதல் ஜம்மு காஷ்மீர் வரை 22 இடங்களில் என்ஐஏ சோதனை

    September 8, 2025
    தேசியம்

    காஷ்மீரில் தேசிய சின்னம் சேதப்படுத்தியதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம்

    September 8, 2025
    தேசியம்

    கேரள கோயிலில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் மலர் கம்பளம்: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு

    September 8, 2025
    தேசியம்

    பாலியல் வன்கொடுமையை மறைக்க ஒடிசா மதரஸாவில் படிக்கும் மாணவன் கொலை: சக மாணவர்கள் 5 பேர் கைது

    September 8, 2025
    தேசியம்

    திருமணமான மகள்களுக்கும் சொத்தில் சமபங்கு: சட்டம் இயற்ற தயாராகும் உத்தர பிரதேச அரசு

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் விலகல் – அதிக ஆண்டுகள் தலைவராக இருந்தவர்!
    • எந்தவொரு தொந்தரவு இல்லாமல் நவீன வீடுகளுக்கு பசுமையைச் சேர்க்கும் 10 சிறந்த செயற்கை தாவரங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தை – 2வது இடத்தில் தமிழ்நாடு
    • மதுரை விமான நிலைய பெயர் சர்ச்சை: இபிஎஸ்-க்கு டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்
    • 2025 வி.எம்.ஏக்களில் லிசா சிறந்த கே-பாப்பை வென்றார், பி.டி.எஸ்ஸின் ஜிமின் மற்றும் பிளாக்பிங்க் இசைக்குழு வீரர்கள் ஜென்னி, ரோஸ் மற்றும் ஜிசூவை வீழ்த்தினார்; எக்ஸ் சீற்றத்துடன் வெடிக்கிறது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.