Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»வாரணாசியில் இன்று புதிதாக காசி தமிழ்ச் சங்கம் துவக்கம்!
    தேசியம்

    வாரணாசியில் இன்று புதிதாக காசி தமிழ்ச் சங்கம் துவக்கம்!

    adminBy adminAugust 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வாரணாசியில் இன்று புதிதாக காசி தமிழ்ச் சங்கம் துவக்கம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று காசி தமிழ்ச் சங்கம் துவக்கப்படுகிறது. இதற்கான விழா வாரணாசி மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம் தலைமையில் நடைபெறுகிறது.

    காசி எனும் வாரணாசிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்தும் வகையில் அங்கு காசி தமிழ் சங்கமங்கள் (கேடிஎஸ்) நடைபெறுகின்றன. தனது மக்களவைத் தொகுதி என்பதால் பிரதமர் நரேந்திர மோடியும் கேடிஎஸ் நிகழ்ச்சியை மத்திய, மாநில அரசுகளால் நடத்தி ஆதரவளிக்கிறார்.

    எனினும், உ.பி.யின் இந்த புண்ணியத்தலத்தில் தமிழர்களுக்கு எனத் தனியாக ஒரு அமைப்பு இல்லை. இதன் காரணமாக, காசி தமிழ் சங்கம் எனும் பெயரில் வாராணசியில் வசிக்கும் தமிழர்கள் ஒரு சங்கத்தை துவக்குகின்றனர். இன்று ஆகஸ்ட் 27 புதன்கிழமை மாலை அதற்கான துவக்க விழா நடைபெறுகிறது.

    இது அனுமன் காட்டிலுள்ள காஞ்சி சங்கர மடத்தின் கிளையான காஞ்சி காமக்கோடி பீடத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. இத்துடன், இன்று விநாயகர் சதூர்த்தி என்பதால் அந்நாளுக்கான விழாவும் இணைந்து நடைபெறுகிறது. விழாவின் விருந்தினர்களாக வாராணசியில் பணியாற்றும் தமிழர்களான இரண்டு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில், மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம் ஐஏஎஸ் மற்றும் நகர காவல்துறை இணை ஆணையரான டி.சரவணன் ஐபிஎஸ் ஆகியோர் உரையாற்றவும் உள்ளனர்.

    காசி தமிழ்ச் சங்கத்தின் தலைவராக காஞ்சி காமகோடி பீடத்தின் மேலாளரான வி.எஸ்.சுப்பரமணியம், பொதுச்செயலாளராக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவின் உதவி பேராசிரியர் த.ஜெகதீசன் தேர்வாகி உள்ளனர். துணைத் தலைவர்களாக காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையின் முன்னாள் உறுப்பினர் கி.வெங்கட் ரமண கணபாடிகள் மற்றும் எஸ்.கோபால கிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

    துணைப் பொதுச் செயலாளர்களாக கு.தவசி முருகன் மற்றும் சு.சிவசுப்பரமணியன் இணைந்துள்ளனர். சிவசங்கரி சோமசுந்தரம் பொருளாளராகவும், துணைப் பொருளாளராக பண்டிதரான சந்திரசேகர் திராவிட் ஆகியோர் உள்ளனர். நிர்வாக உறுப்பினர்களாக எட்டு பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவராக மகா கவி பாரதியாரின் கொள்ளுப் பேத்தியான ஜெயந்தி முரளியும் உள்ளார்.

    இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பொதுச் செயலாளரான த.ஜெகதீசன் கூறும்போது, ‘வாரணாசி மாவட்ட ஆட்சியராக இருந்து தற்போது மண்டல ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ள எஸ்.ராஜலிங்கம் அவர்களது அறிவுறுத்தலின் பேரில், காசியில் வாழும் தமிழர்களை ஒரு குடையின்கீழ் ஒருங்கிணைக்கவும் அவர்களது நலன்களைப் பாதுகாக்கவும் ‘காசி தமிழ்ச் சங்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பைப் பதிவுசெய்துள்ளோம். இங்குள்ள தமிழ்க் குடும்பத்தின் குழந்தைகளுக்குத் தமிழ்மொழியைக் கற்பித்தல், திருக்குறள் வகுப்புகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கவுள்ளன’ எனத் தெரிவித்தார்.

    வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்துக்களின் முக்கியப் புண்ணியத்தலமான இங்கு பல நூற்றாண்டுகளாகப் பல்லாயிரம் தமிழர்கள் வந்து செல்கின்றனர். இந்த வகையில், வந்துசென்ற தமிழர்கள் வாராணசியிலேயே தங்கி உள்ளனர். இங்கு தமிழர்கள் அதிகமாகத் தங்கியுள்ளப் பகுதியாக வாரணாசியின் கங்கை கரைகளில் ஒன்றான அனுமன் காட் உள்ளது. தமிழர்கள் சார்பில் குமாரசாமி மடம் மற்றும் ஸ்ரீகாசி நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரம் என இருபெரும் மடங்களும் வாரணாசியில் உள்ளன. மகாகவி பாரதியார் வாரணாசியில் தங்கியிருந்த அவரது சகோதரி வீடும் இந்த அனுமன் காட்டில் உள்ளது நினைவுகூரத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    டெல்லி முன்னாள் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

    August 27, 2025
    தேசியம்

    காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு – இந்தியா கண்டனம்

    August 27, 2025
    தேசியம்

    திருப்பதி தேவஸ்தானத்தில் 4 வேற்றுமத ஊழியர் சஸ்பெண்ட்

    August 27, 2025
    தேசியம்

    பிஹார் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை ஏற்க ராகுல் தயங்குவது ஏன்?

    August 27, 2025
    தேசியம்

    கேரளா பல்கலை.யில் திருநங்கைகளுக்காக விடுதி திறப்பு

    August 27, 2025
    தேசியம்

    இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதிப்பு: எவ்வளவு நெருக்கடி வந்தாலும் கவலையில்லை –  விவசாயிகளை காப்பேன் என பிரதமர் மோடி உறுதி

    August 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெல்லி முன்னாள் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
    • ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு: பிற டி20 லீக்கில் விளையாட ஆர்வம்!
    • ‘ரவி மோகனின் அனைத்து திறமைகளையும் உலகம் பார்க்க வேண்டும்’ – கெனிஷா நெகிழ்ச்சி!
    • விநாயகர் சதுர்த்தி: 4 டன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்த புலியகுளம் முந்தி விநாயகர்
    • டெய்லர் ஸ்விஃப்ட்டின் வளையத்திற்கான வைரம் இந்தியாவிலிருந்து இருக்கலாம் என்று இன்ஸ்டாகிராம் பயனர் கூறுகிறார்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.