Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘வாக்கு திருட்டு’ விழிப்புணர்வு பிரச்சாரம்: பிஹாரில் ஆக.17 முதல் 15 நாட்களுக்கு ராகுல் காந்தி நடைபயணம்
    தேசியம்

    ‘வாக்கு திருட்டு’ விழிப்புணர்வு பிரச்சாரம்: பிஹாரில் ஆக.17 முதல் 15 நாட்களுக்கு ராகுல் காந்தி நடைபயணம்

    adminBy adminAugust 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘வாக்கு திருட்டு’ விழிப்புணர்வு பிரச்சாரம்: பிஹாரில் ஆக.17 முதல் 15 நாட்களுக்கு ராகுல் காந்தி நடைபயணம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ‘வாக்கு திருட்டு’ தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் 17-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு பிஹாரில் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பெகல் தெரிவித்துள்ளார்.

    ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பெகல், “கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். எனினும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 250 எம்பிக்கள் கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். எனினும், அவர்களை டெல்லி போலீசார் பாதி வழியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    ராகுல் காந்தியின் கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த கேள்வி ஜனநாயகத்தின் சாரம். நாம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், வாக்குகள் திருடப்படுவதை நிறுத்த வேண்டியது அவசியம். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். தற்போது, இந்த பிரச்சினை மக்களைச் சென்று சேர்ந்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி பிஹாரில் வரும் 17-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு பாத யாத்திரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி மிகப் பெரிய பேரணி நடைபெற உள்ளது. இதில், இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

    பிஹாரில் நடைபெற உள்ள தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் பிஹாரின் சாசரம் நகரில் இன்று நடைபெற்றது. கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிஹார் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கே.சி.வேணுகோபால், “ஜனநாயகத்துக்கான போராட்டம் தெருக்களில் நடைபெற இருக்கிறது. வரும் 17-ம் தேதி முதல் ராகுல் காந்தியும் இண்டியா கூட்டணி கட்சிகளும் இணைந்து வாக்கு அதிகார யாத்திரை என்ற பெயரில் பிஹார் முழுவதும் பிரச்சாரங்களை மேற்கொள்ள உள்ளனர். சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராகவும், வாக்கு திருட்டுக்கு எதிராகவும் மிகப் பெரிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சார இயக்கமாக இது இருக்கும்.

    சாசராமில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் வட்டார அளவிலான தலைவர்கள் கலந்து கொண்டார்கள். விழிப்புணர்வு யாத்திரை நேர்த்தியாக நடப்பதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதில் கீழ்மட்ட அளவிலான நிர்வாகிகள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். பிரச்சார இயக்கத்தின் முதல் நாள் முதல் அனைத்தும் வெற்றிகரமாக நடப்பதை உறுதிப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முக்கிய அறிவிப்பாக, “வாக்கு திருட்டுக்கு எதிராக நாளை (ஆக.14) இரவு 8 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்படும். செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்படும். 5 கோடி கையெழுத்துக்கள் பெறப்பட்டு, தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘வாக்கு திருட்டுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்’ – பொது மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு

    August 13, 2025
    தேசியம்

    டெல்லியில் தெரு நாய்கள், மும்பையில் புறாக்கள்… – பிரச்சினையும் பின்னணியும்

    August 13, 2025
    தேசியம்

    “எங்களிடம் பிரம்மோஸ் உள்ளது” – பாகிஸ்தான் பிரதமருக்கு ஒவைசி பதிலடி

    August 13, 2025
    தேசியம்

    “ரேவந்த் மூலம் சந்திரபாபு நாயுடுவுடன் ‘தொடர்பில்’ இருக்கிறார் ராகுல்” – ஜெகன் மோகன் ரெட்டி பகீர்

    August 13, 2025
    தேசியம்

    மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் வங்கியில் பட்டப்பகலில் 15 கோடி தங்கம், பணம் கொள்ளை

    August 13, 2025
    தேசியம்

    ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தகர்ப்போம்: பாக். ராணுவ தளபதி அசிம் எச்சரிக்கை

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடந்தால் அரசியல் ரீதியில் எதிர்கொள்வோம்: திமுக
    • உங்கள் மூளையை எவ்வாறு அவிழ்ப்பது: கவனம் கூர்மைப்படுத்துவதற்கும் மன தெளிவை அதிகரிப்பதற்கும் 5 பயனுள்ள படிகள்
    • 50 ஆண்டு கால சினிமா பயணம்: ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து
    • தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவு: கைது செய்ய காவல் துறை ஆயத்தம் – ரிப்பன் மாளிகையில் பரபரப்பு
    • அவளுடைய நீண்ட ஆயுள் ரகசியம்? 87 வயதான ஷீலா ஐசக்ஸ் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஒரு உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.