புதுடெல்லி: விகாஸ் திரிபாதி என்பவர் டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை, டெல்லி மாவட்ட கூடுதல் தலைமை நீதிமன்ற நீதிபதி வைபவ் சவுராசியா நேற்று முன் தினம் விசாரித்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சோனியா காந்தி இந்திய குடியுரிமையை 1983-ம் ஆண்டு ஏப்ரலில் பெற்றுள்ளார். ஆனால், அவரது பெயர் டெல்லி சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பட்டியலில் 1980-ம் ஆண்டே இடம்பெற்றுள்ளது.
1980-ம் ஆண்டே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க போலி ஆவணங்களை அளித்திருக்கக் கூடும். எனவே, சோனியா காந்திக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதி இந்த மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில், “தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை இந்த நீதிமன்றம் எடுத்துக் கொள்ள முடியாது. தேர்தல் ஆணையம், மத்திய அரசின் அதிகார வரம்பு சார்ந்த குடியுரிமை விவகாரத்தைப் புகார் அளித்து விசாரிக்க கோர முடியாது” என்று தெரிவித்தார்.