Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
    தேசியம்

    வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி

    adminBy adminJuly 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாட்னா: வளர்ச்சி அடைந்த மாநிலமாக பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, நேற்று பிஹார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிஹார் சென்ற பிரதமர் மோடியை, முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    இதைத் தொடர்ந்து மோதிஹரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமார் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    மேலும், பாட்னாவில் இருந்து டெல்லி, மோதிஹரியில் இருந்து டெல்லி, தர்பாங்காவில் இருந்து லக்னோ, மால்டா நகரில் இருந்து லக்னோவுக்கு இடையிலான அம்ரித் பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

    முன்பு இருந்த காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள அரசுகள் பிஹார் மாநிலத்தைப் புறக்கணித்தன. இதனால் அந்த மாநிலத்துக்கு நிதி ஒதுக்குவதில் அந்த அரசுகள் சுணக்கம் காட்டின. பிஹாரில் நிதிஷ்குமார் அரசு அமைந்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை. பாரபட்சமாக நிதி ஒதுக்கியது. ஆனால் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தபோது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பிஹார் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து நிதி உதவியையும் செய்து கொடுத்தோம். இதனால் பிஹார் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    பிஹார் மாநிலத்தை வளர்ச்சி பெற்ற பிஹாராக நாம் மாற்றவேண்டும். தற்போது பிஹாரில் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து செயல்படுவதே காரணம். காங்கிரஸ் தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது பிஹாருக்கு ரூ.2 லட்சம் கோடி நிதி மட்டுமே கிடைத்தது.

    பிஹார் வளமாக இருந்தால், நாடு வளமாக இருக்கும். பிஹார் இளைஞர்கள் வளமாக இருந்தால், பிஹார் வளமாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டே மத்திய அரசுக்கு ஆதரவாக முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு செயல்படுகிறது. இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு செப்.22-ல் புதிதாக தொடங்கும்: சித்தராமையா அறிவிப்பு

    September 12, 2025
    தேசியம்

    மணிப்பூரில் கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

    September 12, 2025
    தேசியம்

    நாடு முழுவதும் அல்லாமல், டெல்லியில் மட்டும் ஏன் பட்டாசு வெடிக்க தடை? – உச்ச நீதிமன்றம் கேள்வி

    September 12, 2025
    தேசியம்

    “பிரதமர் மோடி இப்போது மணிப்பூர் செல்வது நல்லது, ஆனால்…” – ராகுல் காந்தி கருத்து

    September 12, 2025
    தேசியம்

    டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் அறைகளில் சோதனை

    September 12, 2025
    தேசியம்

    பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்: ரூ.7,300 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை: பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர்
    • ஹோண்டுரான் மீன் மழை: இந்த நகரம் ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான ‘மீன் மழையை’ காண்கிறது; அறிவியல் அல்லது புராணக்கதை? | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நேபாளத்தின் முதல் பெண் பிரதமரானார் சுஷிலா கார்கி!
    • ‘ஜனநாயகன்’ vs ’பராசக்தி’ – பொங்கல் ரேஸ் உறுதியானது!
    • ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலமாக ஒரு கோடி குடும்பங்கள் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.