Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான பயணத்தை இளைஞர்கள் வழிநடத்த வேண்டும்” – பியூஷ் கோயல்
    தேசியம்

    “வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான பயணத்தை இளைஞர்கள் வழிநடத்த வேண்டும்” – பியூஷ் கோயல்

    adminBy adminJuly 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான பயணத்தை இளைஞர்கள் வழிநடத்த வேண்டும்” – பியூஷ் கோயல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கிய நாட்டின் பயணத்தை இளைஞர்கள் வழிநடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்தியாவின் சர்வதேச ஐக்கிய நாடுகள் இயக்கம் -2025 மாநாட்டை நொய்டாவில் தொடங்கி வைத்து உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல், “2022 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அடுத்த 25 ஆண்டுகள் நாட்டுக்கு மிக முக்கியமான காலகட்டம் என்றும், இந்த அமிர்த காலத்தில் நாம் அனைவரும் இணைந்து 2047க்குள் இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதை கருத்தில் கொண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு இளைஞர்கள் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும்.

    இந்தியா ஒரு பெரிய மாற்றத்தின் உச்சத்தில் நிற்கிறது. அமிர்த காலத்திற்கான ஐந்து உறுதிமொழிகளின்படி, 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு இளைஞர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். ஐந்து உறுதிமொழிகளில் முதலாவது, இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான உறுதிமொழி. இரண்டாவது உறுதிமொழி, காலனித்துவ மனநிலையை கைவிடுவது. பல நூற்றாண்டுகளாக காலனித்துவ அடிமைத்தனம் நமது நம்பிக்கையை அழித்து, கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த காலத்தின் கட்டுப்பாடுகளால் நாம் கட்டுப்படக்கூடாது.

    மூன்றாவது உறுதிமொழி இந்தியாவின் பாரம்பரியத்தில் பெருமை கொள்வது. வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதை நோக்கி நாம் நகரும்போது இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம், மரபுகள் மற்றும் மதிப்புகள் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. நான்காவது, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு. ஒற்றுமையே இந்தியாவின் மிகப்பெரிய பலம். ஒற்றுமையை நாம் ஒவ்வொரு மட்டத்திலும் வளர்க்க வேண்டும். வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான நாட்டின் பயணத்துக்கு இந்தக் கூட்டு மனப்பான்மை அடிப்படையானது.

    ஐந்தாவது உறுதிமொழி, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான 140 கோடி இந்தியர்களின் கூட்டுத் தீர்மானத்தின் மீது உறுதி கொள்வது. அனைத்து மக்களும் ஒரு குடும்பத்தைப் போல, பகிரப்பட்ட பொறுப்புடன் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக முடியும். தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை இளைஞர்கள் ஒரு கடமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், ஒவ்வொரு பணியையும் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்.

    இளைஞர்கள் பொது வாழ்வுக்கு அதிக அளவில் வர வேண்டும். 2024 சுதந்திர தினத்தன்று பிரதமர் தனது உரையில், மாற்றத்தின் முகவர்களாக மாற ஒரு லட்சம் இளைஞர்களும் பெண்களும் அரசியலிலும் பொது சேவையிலும் நுழைய அழைப்பு விடுத்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கருணை, அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையுடன் கொள்கை வகுப்பதில் பங்களிக்க திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள நபர்கள் தேவை.

    நாளைய இந்தியாவின் மாற்றத்தை உருவாக்குபவர்களாகவும், இயக்குபவர்களாகவும் இளைஞர்கள் இருக்க வேண்டும். கூட்டு உறுதியுடன், நாம் ஒவ்வொரு சவாலையும் கடந்து நமது நாட்டை உயர்ந்த உச்சத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்” என தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அடுத்த வீரர் உள்நாட்டு விண்கலத்தில் பயணம் செய்வார்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

    July 18, 2025
    தேசியம்

    “மோடியின் தலைமை இல்லையெனில் பாஜக 150 இடங்களில் கூட வென்றிருக்காது” – நிஷிகாந்த் துபே

    July 18, 2025
    தேசியம்

    இஸ்லாம்பூரின் பெயர் ஈஷ்வர்பூர் என மாற்றப்படும்: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் அறிவிப்பு

    July 18, 2025
    தேசியம்

    நீதிபதி வர்மா பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவருவது அரசு அல்ல: மத்திய அமைச்சர் விளக்கம்

    July 18, 2025
    தேசியம்

    குருகிராம் நில விவகார வழக்கில் ராபர்ட் வதேரா மீது அமலாக்க துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

    July 18, 2025
    தேசியம்

    “பிஹாரில் 20 லட்சம் பெண்கள் இப்போது லட்சாதிபதிகள்” – பிரதமர் மோடி பெருமிதம்

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதுரையில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் வேகம் எடுக்குமா?
    • 19 மதிப்பிடப்பட்ட ஆரோக்கியமான உணவுகள் நீங்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் திமுகவினர்” – ஆர்.பி.உதயகுமார் சாடல்
    • ஆப்டிகல் மாயை சவால்: இந்த கடற்கரையில் மறைக்கப்பட்ட சீஸ் துண்டுகளை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்கவும்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திருவள்ளூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தமிழிசை சரமாரி கேள்வி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.