Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»வரலாறு படைத்த மிக்​-21 போர் விமானங்களுக்கு ஓய்வு: பிரியாவிடை நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பெருமிதம்
    தேசியம்

    வரலாறு படைத்த மிக்​-21 போர் விமானங்களுக்கு ஓய்வு: பிரியாவிடை நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பெருமிதம்

    adminBy adminSeptember 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வரலாறு படைத்த மிக்​-21 போர் விமானங்களுக்கு ஓய்வு: பிரியாவிடை நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பெருமிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சண்​டிகர்: இந்தியா – ரஷ்யா இடையே நில​வும் நீண்ட கால உறவுக்கு ஓய்வு பெறும் மிக்​-21 போர் விமானங்​களே சாட்​சி​யாக உள்ளன என பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பெரு​மிதத்​துடன் கூறி​னார். ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை அமெரிக்கா விமர்​சித்​து, இந்​தியா மீது 50 சதவீத வரி​வி​தித்​தது. இந்​நிலை​யில் விமானப்​படை​யில் கடந்த 1960-ம் ஆண்டு இணைந்து 60 ஆண்​டு​களுக்கு மேல் பணி​யாற்​றிய மிக்​-21 போர் விமானங்​களுக்கு பிரி​யா​விடை அளிக்​கும் நிகழ்ச்சி சண்​டிகரில் நேற்று நடை​பெற்​றது.

    இதில் சிறப்பு விருந்​தின​ராக பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கலந்து கொண்​டார். முப்​படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவு​கான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்​திர திவே​தி, கடற்​படைத் தளபதி தினேஷ் கே.​திரி​பா​தி, விமானப்​படை தளபதி ஏ.பி.சிங் உட்பட பலர் கலந்து கொண்​டனர்.

    இந்​நிகழ்ச்​சி​யில் இந்​தி​யா​வின் போர்​களில் மிக்​-21 போர் விமானங்​கள் முக்​கிய பங்​காற்​றியது குறித்து எடுத்​துரைக்​கப்​பட்​டன. 1965 மற்​றும் 1971-ம் ஆண்டு நடை​பெற்ற பாகிஸ்​தான் போர், 1999-ம் ஆண்டு கார்​கில் போர், 2019-ல் நடத்​தப்​பட்ட பால​கோட் தாக்​குதல் ஆகிய​வற்​றில் மிக்​-21 போர் விமானங்​கள் முக்​கிய பங்​காற்​றின.

    பல ஆண்​டு​காலம் சேவை புரிந்து பழமை​யான​தால் இந்த விமானங்​களில் அடிக்​கடி தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்டு விபத்தை சந்​தித்​தன. இதனால் மிக்​-21 போர் விமானத்​துக்கு ‘பறக்​கும் சவப்​பட்​டி’ என்ற பெயர் கிடைத்​தது. இந்த போர் விமானங்​களை நவீன காலத் தேவைக்​கேற்ப மேம்​படுத்​து​வ​தி​லும் சிக்​கல்​கள் ஏற்​பட்​டன.

    ஜாக்​கு​வார், மிராஜ், சுகோய், தேஜஸ், ரஃபேல் என அடுத்த தலைமறை போர் விமானங்​கள் விமானப்​படை​யில் இணைக்கப்பட்டதால், பழமை​யான மிக்​-21 போர் விமானங்​களுக்கு ஓய்வு அளிக்க விமானப்​படை முடிவு செய்​தது. இந்​தி​யப் போர்களில் முக்​கிய பங்​காற்​றிய மிக்​-21 போர் விமானங்​களுக்கு கவுர​வ​மான முறை​யில் பிரி​யா​விடை அளிக்​க​வும் மத்​திய அரசு முடிவு செய்​தது. இதற்​கான பிரி​யா​விடை நிகழ்ச்சி சண்​டிகரில் நேற்று நடை​பெற்​றது. இதில் மிக்​-21 போர் விமானங்​களின் அணி வகுப்பும் நடை​பெற்​றது.

    இந்​நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பேசி​ய​தாவது: இந்​தி​யா​வின் வரலாற்று சிறப்பு மிக்க போர்​களில் எல்​லாம், மிக்​-21 ரக போர் விமானங்​கள் பங்​கேற்று நமது நாட்​டின் பெரு​மையை உயர்த்​தின. கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்​தானுடன் நடை​பெற்ற போரை யாரால் மறக்க முடி​யும்? தாகா​வில் உள்ள ஆளுநர் இல்​லத்​தின் மீது மிக்​-21 போர் விமானம் துல்​லிய தாக்​குதல் நடத்​தி, அதே நாளில் வெற்றி கிடைக்க வழி​வகுத்​தது.

    பல தருணங்​களில் மிக்​-21 போர் விமானம் தனது திறனை நிரூபித்​துள்​ளது. அதனால் இந்த பிரி​யா​விடை நிகழ்ச்சி நமது நாட்​டின் பெரு​மை, வலிமை, தியாகம், சிறப்பு ஆகிய​வற்​றையெல்​லாம் நினைவு கூர்​கின்​றன. மிக்​-21 வெறும் வி​மானம் மட்​டும் அல்ல. இது இந்​தியா – ரஷ்யா இடையி​லான நீண்​ட மற்​றும்​ ஆழமான உறவுக்​கு சான்​றாக உள்​ளன. இவ்​வாறு மத்திய அமைச்சர் ராஜ்​நாத்​ சிங் கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி கொடுத்த இந்திய அதிகாரி: யார் இந்த படால் கெலாட்?

    September 27, 2025
    தேசியம்

    அயோத்தியை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: பாஜக-வின் வினய் கட்டியார் அறிவிப்பால் சர்ச்சை

    September 27, 2025
    தேசியம்

    திருப்பதி | சிறையில் இருந்தபடியே 7 பட்டங்கள் பெற்ற கைதி

    September 27, 2025
    தேசியம்

    போலி என்கவுன்ட்டர் புகாரால் மாவோயிஸ்ட் கமாண்டர் உடலை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    September 27, 2025
    தேசியம்

    உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத மதரசாவில் 40 சிறுமிகள் கழிப்பறைக்குள் அடைப்பு

    September 27, 2025
    தேசியம்

    பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 – புதிய திட்டத்தை தொடங்கி வைத்த மோடி பேசியது என்ன?

    September 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘அபிஷேக்கை விரைவில் வீழ்த்தினால் இந்தியா திணறும்’ – பாக். அணிக்கு அக்தர் அட்வைஸ்
    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகேயுள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகையில் நவராத்திரி விழா
    • திரைப்படம், நாடகத்துறையில் புகழ்பெற்ற ஜெய்சங்கர், எஸ்.வி.வெங்கட்ராமன் பெயர்களில் சாலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
    • மாரடைப்பு காரணங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை அல்லது தவறாக கண்டறியப்படுகின்றன, ஆய்வை வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி கொடுத்த இந்திய அதிகாரி: யார் இந்த படால் கெலாட்?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.