Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»வடகிழக்கு மாநிலங்களுக்கு இரட்டை போனஸ்: அருணாச்சலில் ரூ.5,100 கோடி திட்டங்களை தொடங்கி பிரதமர் பெருமிதம்
    தேசியம்

    வடகிழக்கு மாநிலங்களுக்கு இரட்டை போனஸ்: அருணாச்சலில் ரூ.5,100 கோடி திட்டங்களை தொடங்கி பிரதமர் பெருமிதம்

    adminBy adminSeptember 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வடகிழக்கு மாநிலங்களுக்கு இரட்டை போனஸ்: அருணாச்சலில் ரூ.5,100 கோடி திட்டங்களை தொடங்கி பிரதமர் பெருமிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இடாநகர்: அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் நேற்று நடை​பெற்ற நலத்​திட்ட விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.5,100 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். குறிப்​பாக அருணாச்சல பிரதேசத்​தில் இரு நீர் மின் திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். மேலும் அருணாச்சல பிரதேசத்​தின் தவாங்​கில் 9,820 அடி உயரத்​தில் அதிநவீன மாநாட்டு மையம் அமைக்​க​வும் அவர் அடிக்​கல் நாட்டினார்.

    விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: நாட்​டில் முதல் சூரியோத​யம் அருணாச்சல பிரதேசத்​தில் தொடங்​கு​கிறது. ஆனால் காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் மாநில மக்​களின் வாழ்க்​கை​யில் விடியல் பிறக்​க​வில்​லை. கடந்த 2014-ம் ஆண்​டில் பிரதம​ராக பதவி​யேற்​றது முதல் வடகிழக்கு மாநிலங்​களுக்கு முன்​னுரிமை அளித்து வரு​கிறேன். இதன்​காரண​மாக ஒட்​டு மொத்த வடகிழக்​கும் அபரித​மாக வளர்ச்சி அடைந்​திருக்​கிறது. என்னை பொறுத்​தவரை மக்​களே கடவுள்.

    கடந்த 10 ஆண்டு கால காங்​கிரஸ் ஆட்​சி​யில் அருணாச்சல பிரதேசத்​தின் வளர்ச்​சிக்​காக ரூ.6,000 கோடி மட்​டுமே செல​விடப்​பட்​டது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் 10 ஆண்டு கால ஆட்​சி​யில் அருணாச்சல பிரதேசத்​தின் வளர்ச்சி திட்​டங்​களுக்​காக ரூ.1 லட்​சம் கோடி செல​விடப்​பட்டு இருக்​கிறது. காங்​கிரஸை​விட பாஜக ஆட்​சிக் காலத்​தில் 16 மடங்கு அதி​க​மாக நிதி வழங்​கப்​பட்டு இருக்​கிறது.

    சில ஆண்​டு​களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்​தில் சேலா சுரங்​கப் பாதை திறக்​கப்​பட்​டது. இந்த சுரங்​கப்​பாதை மாநிலத்​தின் அடை​யாள​மாக மாறி​யிருக்​கிறது. மக்​களின் போக்​கு​வரத்து எளி​தாகி உள்​ளது. சுற்​றுலா துறை வளர்ச்சி அடைந்​திருக்​கிறது. இடாநகர் விமான நிலை​யத்​தில் புதிய முனை​யம் கட்​டப்​பட்டு உள்​ளது. வடகிழக்​கின் 8 மாநிலங்​களை​யும் அஷ்டலட்​சுமி​யாக வழிபடு​கிறேன்.

    வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு இருக்​கிறது. அந்த லட்​சி​யத்தை எட்ட ஒவ்​வொரு மாநில​மும் முன்​னேற வேண்​டும். தற்​போது ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் நாடு முழு​வதும் சேமிப்பு திரு​விழா தொடங்கி உள்​ளது. இதனால் அருணாச்சல பிரதேச பெண்​கள் பெரிதும் பயன் அடை​வார்​கள்.

    உங்​களது மாதாந்​திர செலவு கணிச​மாக குறை​யும். இந்த நேரத்​தில் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும். ஒவ்​வொரு கடைக்​காரரும் சுதேசி பொருட்​களை மட்​டுமே விற்​பனை செய்ய வேண்​டும். அனைத்து ஒன்​றிணைந்து சுதேசி இயக்​கத்தை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும்.

    வடகிழக்கு மக்​களுக்கு பண்​டிகை காலம் ஒரு போனஸாக அமைந்​துள்​ளது. அதோடு ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்​றொரு போனஸாக கிடைத்​திருக்​கிறது. எனவே ஒட்​டுமொத்த வடகிழக்கு மாநிலங்​களுக்​கும் இரட்டை போனஸ் கிடைத்​திருக்​கிறது. இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

    திரிபுரா மாநிலத்​தின் கோமதி மாவட்​டம், உதய்​பூரில் திரிபுர சுந்​திர கோயில் அமைந்​துள்​ளது. 51 சக்தி பீடங்​களில் ஒன்​றான இந்த கோயில் வளாகம் ரூ.52 கோடி​யில் புனரமைக்​கப்​பட்டு உள்​ளது. புதுப்​பிக்​கப்​பட்ட கோயில் வளாகத்தை பிரதமர்​ நரேந்​திர நேற்​று திறந்​து வைத்​தார்​. திரிபுர சுந்​தரி கோயி​லில்​ சிறப்​பு பூஜை, வழி​பாடுகளை நடத்​தி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    நாகா தீவிரவாத அமைப்பு மீதான தடை 5 ஆண்டுக்கு நீட்டிப்பு

    September 23, 2025
    தேசியம்

    கொல்கத்தாவில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    September 23, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணனின் முதல் நிகழ்ச்சி: பிரதமர் மோடியின் உரை குறித்த 4 புத்தகங்கள் வெளியீடு

    September 23, 2025
    தேசியம்

    16 மாநிலங்களின் வருவாய் உபரியாக உள்ளது: உ.பி. முதலிடம் வகிப்பதாக சிஏஜி அறிக்கையில் தகவல்

    September 23, 2025
    தேசியம்

    அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணம்: ஹிண்டன்பர்க் அறிக்கை நிராகரிப்பு பற்றி கவுதம் அதானி கருத்து

    September 23, 2025
    தேசியம்

    பாடகர் ஜுபின் கார்க்குக்கு நினைவிடம் அமைக்கிறது அசாம் அரசு

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தனிக்கட்சி ஆரம்பிக்கப் போகிறேனா? – அண்ணாமலை சொன்ன ஷாக் பதில்!
    • ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வந்ததால் பொதுமக்கள், ஊழியர்கள், கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி
    • எரிவாயு மட்டுமல்ல: வயிற்று வலியுடன் தொடங்கும் 5 ஆபத்தான சுகாதார நிலைமைகள் – இந்தியாவின் காலங்கள்
    • நாகா தீவிரவாத அமைப்பு மீதான தடை 5 ஆண்டுக்கு நீட்டிப்பு
    • த்ரிஷ்யம் 3 படப்பிடிப்பு கொச்சியில் தொடக்கம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.