Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி மீண்டும் பொதுநல மனு: உச்ச நீதிமன்றம் அதிருப்தி
    தேசியம்

    ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி மீண்டும் பொதுநல மனு: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

    adminBy adminMay 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி மீண்டும் பொதுநல மனு: உச்ச நீதிமன்றம் அதிருப்தி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி மீண்டும் பொதுநல மனு தாக்கல் செய்ததற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

    மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் 8,000-க்கும் மேற்பட்டோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் நாடு கடத்தப்படுவதை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், தீபங்கர் தத்தா, என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 8-ம் தேதி விசாரித்தது. அப்போது மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், கோலின் கான்சால்வ்ஸ் ஆகியோரின் வாதங்களுக்கு பிறகு ரோஹிங்கியாக்கள் நாடு கடத்தப்படுவதற்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

    அப்போது நீதிபதிகள், “ரோஹிங்கியாக்கள் இந்திய குடிமக்கள் அல்ல. நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை” என்று கூறினர்.

    சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், “ஐ.நா. அகதிகள் மாநாட்டில் இந்தியா கையெழுத்திடவில்லை. மேலும் ரோஹிங்கியாக்களுக்கு ஐ.நா. ஆணையர் வழங்கிய அகதி அந்தஸ்தின் செல்லுபடித்தன்மையை இந்தியா ஏற்கவில்லை” என்றார்.

    இந்நிலையில் ரோஹிங்கியா அகதிகள் நாடு கடத்தப்படுவதை நிறுத்தக் கோரி மீண்டும் பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீண்டும் அதே அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஒரே பிரச்சினையில் புதிதாக எந்தவொரு காரணமும் இன்றி மீண்டும் மனு தாக்கல் செய்ததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். “கடந்த 8-ம் தேதி மியான்மருக்கு நாடு கடத்தப்பட்ட ரோஹிங்கியா அகதிகள் அங்கு தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக டெல்லியில் உள்ள தங்கள் உறவினர்களின் தெரிவித்துள்ளனர்” என்றார்.

    இதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “நாடு தற்போது இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய மனுக்களை நீங்கள் தாக்கல் செய்ய முடியாது” என்றனர். வழக்கு விசாரணையை ஜூலை 31-ம் தேதி தள்ளி வைத்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடக்கம்

    June 28, 2025
    தேசியம்

    வங்கதேசத்துடனான கங்கை நீர் பகிர்வை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை

    June 28, 2025
    தேசியம்

    ஈரான், இஸ்ரேலில் இருந்து இதுவரை 4,400+ இந்தியர்கள் மீட்பு!

    June 27, 2025
    தேசியம்

    மேற்கு வங்கத்தில் மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லை: பாஜக குற்றச்சாட்டு

    June 27, 2025
    தேசியம்

    எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சு

    June 27, 2025
    தேசியம்

    ஆர்எஸ்எஸ் ஒருபோதும் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிமுக – பாஜக கூட்டணிக்கு தவெக வருமா? – ‘நல்லதே நடக்கும்’ என நயினார் நாகேந்திரன் விளக்கம்
    • அது வெறும் நெஞ்செரிச்சல் என்று அவளிடம் கூறப்பட்டது -இப்போது அவளுக்கு அரிய மற்றும் ஆக்கிரமிப்பு வயிற்று புற்றுநோயுடன் வாழ 12 மாதங்கள் உள்ளன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடக்கம்
    • உஸ்பெகிஸ்தான் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்!
    • சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வோம்: ட்ரம்ப் சூசகம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.