ராஞ்சி: ஜார்க்கண்டின் கும்லா மாவட்டம், சங்கபாடி உபர் டோலி பகுதியில் நக்சலைட்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாதுகாப்பு படையினர் – நக்சலைட்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பிறகு அப்பகுதியில் நக்சலைட் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இவர், பிஎல்எப்ஐ என்ற நக்சலைட் அமைப்பின் தலைவர் மற்றும் பிராந்திய கமாண்டர் மார்ட்டின் கெர்கெட்டா என அடையாளம் காணப்பட்டார்.
மார்ட்டின் மீது ஜார்க்கண்டின் 7 மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் 72 வழக்குகள் உள்ளன. அவரை பற்றிய தகவலுக்கு ரூ.15 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
9 நக்சலைட் சரண்: சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் 9 நக்சலைட்கள் நேற்று காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்தனர்.