Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என்ற நவரோவின் வாதம் தவறானது: இந்தியா
    தேசியம்

    ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என்ற நவரோவின் வாதம் தவறானது: இந்தியா

    adminBy adminSeptember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என்ற நவரோவின் வாதம் தவறானது: இந்தியா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறிய கருத்து தவறானது என்றும் அதை நிராகரிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

    வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மொரிஷயஸ் பிரதமர் நவீன் சந்திர ராம் குலாம் அரசுமுறைப் பயணமாக வரும் 9-ம் தேதி இந்தியா வருகிறார். 16ம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். தற்போதைய அவரது பதவிக் காலத்தில் அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவர் தனது வருகையின்போது டெல்லி மட்டுமல்லாது, மும்பை, வாரணாசி, அயோத்தி, திருப்பதி ஆகிய நகரங்களுக்கும் செல்கிறார். இதற்கு முன் 2014-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மொரிஷியஸ் பிரதமர்இந்தியா வந்திருந்தார்.” என ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரந்திர் ஜெய்ஸ்வால், அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

    ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களுக்கு எதிராக அந்நாட்டில் நடந்த போராட்டங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்ஸ்வால், “ஆகஸ்ட் 31 அன்று ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் இத்தகைய போராட்டங்கள் நடைபெற்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்த விவகாரத்தை ஆஸ்திரேலிய அரசின் கவனத்துக்கும் எதிர்க்கட்சிகள் கவனத்துக்கும் இந்திய தூதரகம் கொண்டு சென்றது. அவர்கள், ஆஸ்திரேலியாவின் பன்முகத்தன்மையை ஆதரிப்பதாகவும், அதை வலுப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவில் உள்ள சுமார் 10 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டின் வளர்ச்சிக்கு அளித்து வரும் பங்களிப்பையும் அவர்கள் அங்கீகரித்துள்ளனர்” என குறிப்பிட்டார்.

    ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, “தவறான அறிக்கைகள் சிலவற்றை அவர் வெளியிட்டிருப்பதைப் பார்த்தோம். அவற்றை நாங்கள் நிராகரிக்கிறோம்.” என கூறினார்.

    முன்னதாக, அமெரிக்காவின் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “குறைந்த விலையில் புடின் மோடிக்கு கச்சா எண்ணெயை கொடுக்கிறார். அதை இந்தியா சுத்தகரிப்பு செய்து ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் பணம் ஈட்டுகிறது. நான் இந்திய மக்களுக்குச் செல்ல விரும்புவதெல்லாம், என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்திய மக்களின் செலவுகளில் இருந்து பிராமணர்கள் பயனடைகிறார்கள்” என தெரிவித்திருந்தார்.

    மேலும் அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர இந்தியாதான் நிதி உதவி அளிக்கிறது என்றும், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது சரியான நடவடிக்கையே என்றும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அயோத்தி ராமர் கோயிலில் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே வழிபாடு

    September 5, 2025
    தேசியம்

    45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்

    September 5, 2025
    தேசியம்

    குடியுரிமைக்கு முன்பாகவே வாக்காளர் ஆனதாக சோனியா காந்திக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு

    September 5, 2025
    தேசியம்

    வாக்குச்சீட்டுகள் மூலம் உள்ளாட்சி தேர்தல்: கர்நாடக அமைச்சரவை உத்தரவு

    September 5, 2025
    தேசியம்

    காவல் நிலையங்களில் சிசிடிவி இயங்கவில்லை: தாமாக வழக்கு பதிவு செய்தது உச்ச நீதிமன்றம்

    September 5, 2025
    தேசியம்

    இந்தியாவில் 2013-ல் 40 ஆக இருந்த சிசு மரணம் 25 ஆக குறைந்தது

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பட்டியலின பணியாளரை திமுகவினர் காலில் விழச் செய்வதுதான் சமூக நீதியா? – தலைவர்கள் கண்டனம்
    • “கச்சத்தீவை திரும்ப பெறுவது சரிவராது!” – கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து
    • ஜிஎஸ்டி 2.0 தாக்கம்: நோட்டு புத்தகங்கள் விலை குறையும்; காலண்டர், டைரி விலை உயரும்!
    • முன்னாள் பெண் அமைச்சரை தொந்தரவு செய்தோர் மீது நடவடிக்கை: புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர்
    • GIS: சொத்து மதிப்பீட்டுக்கு உதவும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.