Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் மே 28-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைப்பு
    தேசியம்

    ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் மே 28-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைப்பு

    adminBy adminMay 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் மே 28-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் வரும் 28-ம் தேதி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ரஷ்ய கடற்படையில் அட்மிரல் கிரிகோரோவிச் போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இதே ரகத்தை சேர்ந்த 2 போர்க்கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு போர்க்கப்பல்களின் விலை ரூ.8,000 கோடி ஆகும்.

    இதன்படி கடந்த ஆண்டு டிசம்பரில் முதல் போர்க்கப்பலை இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைத்தது. இந்த போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் துஷில் என்று பெயரிடப்பட்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து இரண்டாவது போர்க்கப்பலை வரும் 28-ம் தேதி இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைக்க உள்ளது. புதிய போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் தமால் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த போர்க்கப்பல் உடனடியாக இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் புதிய போர்க்கப்பலின் வருகை இந்தியாவின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து இந்திய கடற்படை வட்டாரங்கள் கூறியதாவது: ரஷ்யாவின் கலினின்கிராத் நகரின் கப்பல் கட்டுமான தளத்தில் ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த போர்க்கப்பலின் அனைத்து சோதனை ஓட்டங்களும் நிறைவு பெற்றுள்ளன.

    இந்திய கடற்படையை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், வீரர்கள் தற்போது ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பலில் முகாமிட்டு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர். மே 28-ம் தேதி இந்திய கடற்படையிடம் போர்க்கப்பல் ஒப்படைக்கப்பட உள்ளது. வரும் ஜூன் மாதம் புதிய போர்க்கப்பல் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படும்.

    கர்நாடகாவின் கர்வார் கடற்படைத் தளத்தை மையமாகக் ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் செயல்படும். இது 3,900 டன் எடை, 125 மீட்டர் நீளம், 15.2 மீட்டர் அகலம் கொண்டதாகும். இதை ரேடாரில் கண்டுபிடிப்பது கடினம்.

    ஐஎன்எஸ் துமால் போர்க்கப்பலில் அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. அதோடு ஸ்டில் ரக ஏவுகணைகள், தானியங்கி துப்பாக்கிகள், நீர்மூழ்கி குண்டுகள், நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ராக்கெட்டுகள் உள்ளிட்டவை போர்க்கப்பலில் பொருத்தப்பட்டு உள்ளன.

    ரஷ்யாவின் அட்மிரல் கிரிகோரோவிச் போர்க்கப்பலை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை இந்தியாவிடம் அந்த நாடு வழங்கியிருக்கிறது. இதன்படி இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் ஐஎன்எஸ் திரிபுத், ஐஎன்எஸ் தவஸ்யா என்ற பெயர்களில் புதிதாக 2 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இதில் ஐஎன்எஸ் திரிபுத் போர்க்கப்பல் அடுத்த ஆண்டு அக்டோபரில் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். இதேபோல ஐஎன்எஸ் தவஸ்யா போர்க்கப்பல் வரும் 2027-ம் ஆண்டில் கடற்படையில் இணைக்கப்படும். இவ்வாறு இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    18 அடி நீள ராஜநாகத்தை பிடித்த பெண் அதிகாரி

    July 8, 2025
    தேசியம்

    26/11 தாக்குதலை மேற்பார்வையிட மும்பையில் இருந்த தீவிரவாதி ராணா – விசாரணையில் புதிய தகவல்

    July 7, 2025
    தேசியம்

    “அரசிடம் இருந்து இந்துக்களைவிட அதிக பலன் பெறுவது சிறுபான்மையினரே” – கிரண் ரிஜிஜு

    July 7, 2025
    தேசியம்

    “சிறுபான்மையினருக்கு கிட்டுவது அடிப்படை உரிமை; நன்கொடை அல்ல” – ரிஜிஜுவுக்கு ஒவைசி பதிலடி

    July 7, 2025
    தேசியம்

    கேரளாவில் செவ்வாய்க்கிழமை தனியார் பேருந்துகள் ஸ்டிரைக், புதன்கிழமை பொது வேலை நிறுத்தம்!

    July 7, 2025
    தேசியம்

    கேரள அரசின் சுற்றுலாத்துறை பிரச்சாரத்தில் ஜோதி மல்ஹோத்ரா: காங்கிரஸ், பாஜக கண்டனம்

    July 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காரைக்​கால் அம்​மை​யார் மாங்​கனி திரு​விழா: மாப்​பிள்ளை அழைப்​புடன் இன்று தொடக்​கம்
    • ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது: சென்னையில் நிர்வாகிகளுடன் அன்புமணி போட்டி கூட்டம்
    • இஸ்ரேல்-அமெரிக்கா பேசுகிறது: ‘நாங்கள் பேசும்போது சமாதானத்தை டிரம்ப் மோசடி செய்கிறார்’ என்று நெதன்யாகு கூறுகிறார்; அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதியை பரிந்துரைக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 18 அடி நீள ராஜநாகத்தை பிடித்த பெண் அதிகாரி
    • ரூ.15 லட்சம் அபராதம்: அமைச்சர் நேருவின் சகோதரர் மீதான வழக்கு நிபந்தனையுடன் ரத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.