Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ரசாயன ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு: தலா ரூ.1 கோடி நிதி உதவி
    தேசியம்

    ரசாயன ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு: தலா ரூ.1 கோடி நிதி உதவி

    adminBy adminJuly 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரசாயன ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு: தலா ரூ.1 கோடி நிதி உதவி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஹைதராபாத்: தெலங்​கா​னா​ மாநிலத்தில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலை​யில் உள்ள ரியாக்​டர் நேற்று முன்தினம் வெடித்துசிதறியது. இந்த விபத்​தில் சம்பவ இடத்​தில் 5 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த 60-க்​கும் மேற்​பட்​டோர் அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர்.

    இதில் பலர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தனர். சிகாச்சி ஆலை​யின் துணை தலை​வர் எல்​.எஸ் கோஹன் உட்பட இது​வரை 36 பேர் உயி​ரிழந்துள்​ளனர். தெலங்​கானா மாநில முதல்​வர் ரேவந்த் ரெட்டி நேற்று விபத்து நடந்த ஆலையை ஆய்வு செய்​தார். பின்னர், மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரும் தொழிலா​ளர்​களை சந்​தித்து ஆறு​தல் கூறி​னார்.

    அதன் பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விபத்து தொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களிடம் ஆலோ​சனை நடத்​தினேன். உயி​ரிழந்​தவர்​களின் சடலங்​களை சொந்த ஊர்​களுக்கு அனுப்பி வைப்​பது, காயமடைந்​தவர்​களுக்கு சிறந்த முறை​யில் சிகிச்சை அளிப்​பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்​தர​விட்​டுள்​ளேன். இந்த சம்​பவம் மிக​வும் துர​திருஷ்ட​வசமானது. இதில் பலர் உயி​ரிழந்​துள்​ளனர்.

    உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தில் உள்ள பிள்​ளை​களின் கல்வி செலவு முழு​வதை​யும் அரசே ஏற்​கும். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு உடனடி​யாக ரூ.1 லட்​சம் நிதி உதவி வழங்​கப்​படும். மேலும், தலா ரூ.1 கோடி நிதி உதவி​யும் வழங்​கப்​படும். உடல் உறுப்புகளை இழந்து சிகிச்சை பெற்று வரு​வோருக்கு தலா ரூ.10 லட்​ச​மும், சாதாரண காயம் அடைந்​தோருக்கு தலா ரூ.1 லட்​ச​மும் நிதி உதவி அளிக்​கப்​படும். விபத்து நடந்​த​போது 143 தொழிலா​ளர்​கள் பணி​யில் இருந்​துள்​ளனர். இவர்​களில் 36 பேர் இது​வரை இறந்துள்ளனர்.

    17 பேரை காண​வில்லை என அதி​காரிகள் தெரிவிக்​கின்​றனர். இடி​பாடு​களில் இன்​ன​மும் யாரேனும் சிக்கி இருக்​கலாம் என அஞ்சப்​படு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். ஆலை விபத்​தில் உயி​ரிழந்​தோரின் உடல்​கள் அடை​யாளம் காண முடி​யாத நிலை​யில் உள்​ளன. எனவே டிஎன்ஏ பரிசோதனை நடத்தி உடல்​களை உறவினர்​களிடம் ஒப்​படைக்க அதி​காரி​கள் முடிவு செய்துள்ளனர்.

    இளம் தம்​பதி உயி​ரிழப்பு: ஆந்​தி​ரா​வின் கடப்பா மாவட்​டம் ஜம்​மலமடுகு பகு​தியை சேர்ந்த நிகில் ரெட்​டி​யும் அதே பகு​தியை சேர்ந்த ரம்​யா​வும் காதலித்து வந்​தனர். குடும்​பத்​தினர் எதிர்ப்பை மீறி கடந்த 2 மாதங்​களுக்கு முன்​னர் இரு​வரும் திரு​மணம் செய்து கொண்​டனர்.

    பின்​னர் இந்த இளம் தம்​ப​தி, சிகாச்சி ஆலை பணி​யில் சேர்ந்​துள்​ளனர். இந்நிலையில் வெடி விபத்​தில் இரு​வரும் உயிரிழந்துள்ளனர். இவர்​களின் காதல் திரு​மணத்தை தொடர்ந்து இரு வீட்​டாரும் இணைந்து புது மணத் தம்​ப​திக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்​திருந்​தனர்​. அதற்​குள்​ இரு​வரும்​ விபத்​தில்​ சிக்​கி உயி​ரிழந்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    புதிய குற்றவியல் சட்டங்கள் ‘குழப்பம் தரும் வீண் வேலை’ – ப.சிதம்பரம் முன்வைக்கும் காரணம்

    July 2, 2025
    தேசியம்

    அசாமில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழப்பு; 44 பேர் பாதிப்பு

    July 2, 2025
    தேசியம்

    பாஜகவில் மீண்டும் ஆர்எஸ்எஸ் செல்வாக்கு: புதியவர்களுக்கு பதவிகள் இல்லையா?

    July 2, 2025
    தேசியம்

    தேசிய பொது ஒத்துழைப்பு, குழந்தை மேம்பாட்டு நிறுவனத்தின் பெயர் மாற்றம்: சாவித்ரிபாய் புலே கவுரவிப்பு

    July 2, 2025
    தேசியம்

    மக்களின் தனிநபர் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ் கண்டனம்

    July 2, 2025
    தேசியம்

    இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: 10 பேர் பலி; 34 பேரை காணவில்லை

    July 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘வார் 2’ ரிலீஸால் ரஜினியின் ‘கூலி’ படத்துக்கு சிக்கல்?
    • சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? – உயர் நீதிமன்றம் கேள்வி
    • உங்கள் தூக்கத்தை பால் எவ்வாறு சீர்குலைக்கக்கூடும் என்பதை புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ராம்சரண் குறித்த கருத்தால் சர்ச்சை: தயாரிப்பாளர் விளக்கம்
    • அஜித்குமார் கொலை வழக்கு பரபரப்புக்காகவே சிபிஐ-யிடம் அரசு ஒப்படைப்பு: கிருஷ்ணசாமி விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.