Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“யாருடைய தாயையும் அவதூறாக பேசக் கூடாது; ஆனால், பிரதமர் மோடி…” – தேஜஸ்வி யாதவ் கருத்து
    தேசியம்

    “யாருடைய தாயையும் அவதூறாக பேசக் கூடாது; ஆனால், பிரதமர் மோடி…” – தேஜஸ்வி யாதவ் கருத்து

    adminBy adminSeptember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “யாருடைய தாயையும் அவதூறாக பேசக் கூடாது; ஆனால், பிரதமர் மோடி…” – தேஜஸ்வி யாதவ் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், யாருடைய தாயையும் அவதூறாகப் பேசக் கூடாது என்றும், அதை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

    பிரதமர் மோடியின் தாய் குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து பிஹாரில் நாளை (செப்.4) முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ளது. இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் விரக்தி காரணமாக அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வருவதாக மத்திய அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி விமர்சித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பிஹார் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், “யாருடைய தாயாரையும் அவதூறாகப் பேசக் கூடாது. இதை நாங்கள் ஆதரிக்கவில்லை. இது நமது கலாச்சாரமல்ல. ஆனால், சோனியா காந்தி குறித்து பிரதமர் மோடி அவதூறாகப் பேசி இருக்கிறார். நிதிஷ் குமாரின் டிஎன்ஏ குறித்தும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    பாஜக எம்எல்ஏக்கள் பலர் எனது தாயாரை, சகோதரிகளை சட்டப்பேரவையிலேயே அவதூறாகப் பேசி இருக்கிறார்கள். பாஜக செய்தித்தொடர்பாளர்கள், தொலைக்காட்சி நேரலையிலேயே பெண்களை அவதூறாகப் பேசுகிறார்கள். பிஹார் மக்களுக்கு அனைத்தும் தெரியும். வெளிநாட்டில் பல நாட்கள் இருந்த பிரதமர் மோடி, நாடு திரும்பிய பிறகு அழத்தொடங்கி இருக்கிறார். ஆனால், வெளிநாட்டில் இருந்தபோது சிரித்துக்கொண்டிருந்தார்” என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, பிஹார் மாநிலத்​தில் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் ‘வாக்​காளர் அதி​கார யாத்​திரை’ நடை​பெற்றது. தர்​பங்கா நகரில் சமீபத்​தில் நடை​பெற்ற பேரணி​யின்​போது, அடை​யாளம் தெரி​யாத நபர் ஒரு​வர் பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் அவரது மறைந்த தாயார் குறித்து அவதூறான கருத்து தெரி​வித்​துள்​ளார். இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவியது. இதற்கு பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார் மற்​றும் பாஜக​வினர் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

    இந்​நிலை​யில், பிஹாரில் நேற்று நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில் காணொலி மூலம் பங்​கேற்ற பிரதமர் நரேந்​திர மோடி, “பாரம்​பரியமிக்க பிஹாரில் சில தினங்​களுக்கு முன்பு நிகழ்ந்​ததை என்​னால் கற்​பனை செய்​து​கூட பார்க்க முடிய​வில்​லை. பிஹாரில் ஆர்​ஜேடி – ​காங்​கிரஸ் சார்​பில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் என் தாய் பற்றி அவதூறாக பேசி உள்​ளனர்.

    அந்த அவதூறு கருத்து என் தாய்க்கு மட்​டும் அவமானம் அல்ல. நாட்​டில் உள்ள தாய்​மார்​கள், சகோதரி​கள் மற்​றும் மகள்​கள் உள்​ளிட்ட அனை​வருக்​கும் அவமானம். இதைக் கேட்​டு, பார்த்த பிறகு ஒவ்வொரு தாயும் எப்​படி மனம் வருந்தி இருப்​பீர்​கள் என்​பது எனக்​குத் தெரி​யும். என் இதயத்​தில் எவ்​வளவு வலி இருக்​கிறதோ அதே வலி பிஹார் மக்​களுக்​கும் இருக்​கும் என்​பது எனக்​குத் தெரி​யும்.

    உங்​களைப் போன்ற கோடிக்​கணக்​கானவர்​களுக்கு நான் சேவை செய்ய வேண்​டும் என்​ப​தற்​காக என் தாய் என்னை அவரிட​மிருந்து பிரித்​தார். என் தாய் இப்​போது உயிருடன் இல்லை என்​பது உங்​களுக்கு தெரி​யும். அரசி​யலுடன் எந்​தத் தொடர்​பும் இல்​லாத, அவரைப் பற்றி காங்​கிரஸ், ஆர்​ஜேடி நிகழ்ச்​சி​யில் அவதூறாக பேசி உள்​ளனர். சகோ​தரி​களே, தாய்​மார்​களே நீங்​கள் உணர்ந்த வலியை என்​னால் உணர முடிகிறது. இது மிக​வும் வேதனை​யானது. ராயல் குடும்​பத்​தில் பிறந்த இளவரச​ரால் ஏழைத்தா​யின் வலியை புரிந்​து​கொள்​ள முடி​யாது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    டெல்லியின் பல பகுதிகளில் கனமழை – யமுனை நதியில் அபாய அளவை தாண்டி கரைபுரளும் வெள்ளம்

    September 3, 2025
    தேசியம்

    விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஜெய்சங்கர் நம்பிக்கை

    September 3, 2025
    தேசியம்

    அனைத்து நக்சல்களும் சரணடையும்; பிடிபடும்; கொல்லப்படும் வரை மோடி அரசு ஓயாது: அமித் ஷா

    September 3, 2025
    தேசியம்

    பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா ராஜினாமா: விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என அறிவிப்பு

    September 3, 2025
    தேசியம்

    ​காங்கிரஸ், ஆர்ஜேடி நிகழ்ச்சியில் என் தாய் பற்றி அவதூறாக பேசியது எனக்கு மட்டுமல்ல, அனைத்து தாய்மாருக்கும் அவமானம்: பிரதமர் மோடி

    September 3, 2025
    தேசியம்

    பிஹார் பேரணியில் ‘பைக்’ இழந்தவருக்கு புதிய ‘பல்சர்’ பரிசளித்த ராகுல் காந்தி

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வைட்டமின் மின் எண்ணெய் உங்கள் முடி வளர்ச்சி, உச்சந்தலையில் ஆரோக்கியம் மற்றும் பிரகாசிக்க உதவுகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘நான் அவரை இழந்துவிட்டேன் என்று நினைத்தேன்’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இர்விங் உணவகத்தில் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தமிழக ஹோட்டல்களில் பெப்சி, கோக் முதலான அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க முடிவு
    • 5 இருதயநோய் நிபுணர்கள் தங்கள் இதயங்களை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தங்களை பின்பற்றும் அன்றாட பழக்கங்கள்
    • ‘இந்தியாவிலிருந்து மக்களுக்கான விசாக்கள் போன்ற எதுவும் இல்லை’: தொழில்முனைவோர் இனவெறி பதவிக்கான மாகா வர்ணனையாளரை வெடித்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.