Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ம.பி.யில் மதம் மாற மறுத்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை
    தேசியம்

    ம.பி.யில் மதம் மாற மறுத்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை

    adminBy adminAugust 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ம.பி.யில் மதம் மாற மறுத்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புர்ஹான்பூர்: மத்​திய பிரதேச மாநிலம் நவாரா பகு​தி​யில் நேபா நகர் போலீஸ் நிலைய எல்​லைக்குட்​பட்ட பகு​தி​யில் வசித்​தவர் பாக்யஸ்ரீ நம்தே தனுக் (35). இவரை முஸ்​லிமாக மதம் மாறி தன்னை திரு​மணம் செய்துகொள்ள வேண்​டும் என்று ஷேக் ரயீஸ் (42) என்​பவர் கட்​டாயப்​படுத்தி வந்​துள்​ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இந்​நிலை​யில், பாக்​யஸ்ரீ வீட்​டில் இருந்தபோது ஷேக் ரயீஸ் நேற்​று​முன்​தினம் இரவு திடீரென உள்ளே நுழைந்​தார். பின்​னர் கத்தியால் அவரது கழுத்தை அறுத்​தார். அத்​துடன் பல முறை கத்​தி​யால் குத்​தி​விட்டு தப்​பியோடி​னார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீ​ஸார் உடலை கைப்​பற்றி பிரதேச பரிசோதனைக்​காக அனுப்பி வைத்​தனர். பின்​னர் தீவிர தேடு​தல் வேட்டை நடத்தி சில மணி நேரங்​களில் ஷேக் ரயீஸை கைது செய்​தனர்.

    இதுகுறித்து புர்​ஹான்​பூர் போலீஸ் கூடு​தல் எஸ்பி அன்​தர் சிங் கனேஷ் கூறுகை​யில், ‘‘கைது செய்​யப்​பட்ட ஷேக் ரயீஸ் மீது கொலை, சித்​ர​வதை உட்பட பல பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. தற்​போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்​டுள்​ளார்’’ என்​றார்.

    இதுகுறித்து பாக்​யஸ்ரீ சகோ​தரி சுபத்ரா பாய் கூறும்​போது, ‘‘என் சகோ​தரி பாக்​யஸ்ரீ​யின் தலை​முடியை இழுத்து சென்று ஷேக்ரயீஸ் அடித்து உதைத்​தார். மதம் மாற சொல்லி கட்​டாயப்​படுத்​தி​னார். அத்​துடன் திரு​மணம் செய்து கொள்ள வேண்​டும் என்று நீண்ட நாட்​களாகவே சித்​ர​வதை செய்து வந்​தார். அதற்கு பாக்​யஸ்ரீ ஒப்​புக் கொள்​ள​வில்​லை’’ என்​றாா்.

    இந்நிலையில், பாக்​யஸ்ரீக்கு நியா​யம் கிடைக்க வேண்​டும். குற்​ற​வாளி தண்​டிக்​கப்பட வேண்​டும் என்று வலி​யுறுத்தி இந்​துக்​கள் போராட்​டம் நடத்​தினர். அதற்கு தலைமை வகித்த அமித் வருடே கூறும்​போது, ‘‘இது லவ் ஜிகாத் சம்​பவம். கடந்த 4 நாட்​களுக்கு முன்பே ஷேக் ரயீஸ் சித்​ர​வதை குறித்து பாக்​யஸ்ரீ போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளார்.

    ஆனால், போலீ​ஸார் நடவடிக்கை எது​வும் எடுக்​க​வில்​லை. மேலும், குற்​றம் சாட்​டப்​பட்ட ஷேக் ரயீஸை போலீ​ஸார் விடு​வித்துள்ளனர். எனவே, அலட்​சி​ய​மாக இருந்த போலீஸ் அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். குற்​ற​வாளி ஷேக்கைதூக்கி​லிட வேண்​டும்’’ என்று கூறி​னார்.

    ம.பி. முன்​னாள் கேபினட் அமைச்​சர் அர்ச்​சனா சிட்​னிஸ், பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்​தார். அத்துடன், அலட்​சி​ய​மாக செயல்​பட்ட போலீஸ் அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​னார். இதற்கிடை​யில், ஷேக் ரயீஸ் அரசு நிலத்தை ஆக்​கிரமித்​திருப்​பதும், சட்​ட​விரோத செயல்​களில் ஈடு​பட்டு வந்​ததும் கண்​டு பிடிக்கப்​பட்​டுள்​ளது. ஆக்​கிரமித்​துள்ள இடங்​களை பறி​முதல்​ செய்​ய அதி​காரி​கள்​ நடவடிக்​கை எடுத்​து வருகின்​றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இரட்டை வாக்காளர் அட்டை விவகாரம்: தேஜஸ்வி யாதவ் மீது போலீஸில் புகார்

    August 5, 2025
    தேசியம்

    ப.சிதம்பரம் கருத்து தவறானது: தலைமை தேர்தல் ஆணையம் தகவல்

    August 5, 2025
    தேசியம்

    குடும்பத்தினர் சம்மதிக்காத காதல் திருமணங்களுக்கு தடை விதித்த பஞ்சாப் கிராமம்!

    August 5, 2025
    தேசியம்

    உ.பி.யில் பெயரை மாற்றி கோயில் பூசாரியாக பணியாற்றிய முஸ்லிம் கைது! 

    August 5, 2025
    தேசியம்

    ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவு – தலைவர்கள் அஞ்சலி

    August 5, 2025
    தேசியம்

    ரயில் பாதைகளை கடந்தபோது 186 யானைகள் அடிபட்டு உயிரிழப்பு

    August 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜீரா வாட்டர் Vs ச un ன்ஃப் நீர்: எந்த காலை பானம் ஆரோக்கியமானது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இரட்டை வாக்காளர் அட்டை விவகாரம்: தேஜஸ்வி யாதவ் மீது போலீஸில் புகார்
    • ’கிங்டம்’ ஓடிடி வெளியீட்டில் மாற்றம்
    • கலங்கரை விளக்கம் – திருமயிலை மெட்ரோ 2 சுரங்க இயந்திரங்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தம்
    • புதிய இந்தியா: சபியாசாச்சி தனது மிக சக்திவாய்ந்த திருமண சேகரிப்பை இன்னும் கைவிட்டார், அது நீங்கள் எதிர்பார்ப்பது அல்ல | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.