Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மோடியின் திசைதிருப்பும் பயிற்சி: பஹல்காம் தாக்குதல் சிறப்புக் கூட்டத்தொடர் மீது காங். விமர்சனம்
    தேசியம்

    மோடியின் திசைதிருப்பும் பயிற்சி: பஹல்காம் தாக்குதல் சிறப்புக் கூட்டத்தொடர் மீது காங். விமர்சனம்

    adminBy adminMay 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மோடியின் திசைதிருப்பும் பயிற்சி: பஹல்காம் தாக்குதல் சிறப்புக் கூட்டத்தொடர் மீது காங். விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: அவசரநிலையின் 50-ம் ஆண்டு நிறைவு நாளில், பஹல்காம் தாக்குதல் குறித்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் மோடி அரசின் மற்றுமொரு திசை திருப்பும் முயற்சி என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கடந்த ஏப்.22-ம் தேதி இரவில் இருந்தே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் விளைவுகள் குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. அது இன்னும் நடக்கவில்லை.

    மே 10-ம் தேதி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் இருவரும் இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டத் தொடரைக் கூட்ட வேண்டும், தீர்மானத்தின் வழியாக நாட்டின் கூட்டு உறுதியைக் காட்ட வேண்டும் என்று கோரியிருந்தனர். பிரதமர் அந்தக் கோரிக்கையையும் ஏற்கவில்லை.

    இப்போதோ, அவசரநிலையின் 50-ம் ஆண்டு நிறைவு நாளில், பஹல்காம் தாக்குதல் குறித்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக நாட்டை அறிவிக்கப்படாத அவசரநிலையில் வைத்திருக்கிறது பாஜக. பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் இன்னும் தலைமறைவாக இருக்கிறார்கள். அதையெல்லாம் திசைதிருப்பவே இந்தத் திட்டம்.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏன் அனுமதித்தார், கடந்த 2020 ,ஜூன் 19-ல் சீனாவுக்கு பகிரங்கமாக ஏன் அனுமதி கொடுத்தார் என்பதற்கு பதில் சொல்லாத பிரதமர் மோடியின் உண்மையான, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் பயிற்சிதான்.” இவ்வாறு ஜெய்ராம் தெரிவித்துள்ளார்.

    இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றி அமெரிக்க அதிபர் டொன்ல்ட் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருவது குறித்து பிரதமர் மோடி தனது மவுனத்தைக் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    26/11 தாக்குதலை மேற்பார்வையிட மும்பையில் இருந்த தீவிரவாதி ராணா – விசாரணையில் புதிய தகவல்

    July 7, 2025
    தேசியம்

    “அரசிடம் இருந்து இந்துக்களைவிட அதிக பலன் பெறுவது சிறுபான்மையினரே” – கிரண் ரிஜிஜு

    July 7, 2025
    தேசியம்

    “சிறுபான்மையினருக்கு கிட்டுவது அடிப்படை உரிமை; நன்கொடை அல்ல” – ரிஜிஜுவுக்கு ஒவைசி பதிலடி

    July 7, 2025
    தேசியம்

    கேரளாவில் செவ்வாய்க்கிழமை தனியார் பேருந்துகள் ஸ்டிரைக், புதன்கிழமை பொது வேலை நிறுத்தம்!

    July 7, 2025
    தேசியம்

    கேரள அரசின் சுற்றுலாத்துறை பிரச்சாரத்தில் ஜோதி மல்ஹோத்ரா: காங்கிரஸ், பாஜக கண்டனம்

    July 7, 2025
    தேசியம்

    பிஹாரில் ரூ.31 கோடியை திருடி சூதாடிய கோட்டக் மஹிந்திரா வங்கி கிளை மேலாளர்

    July 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிங்கப்பூர் தமிழ் முரசு – இந்து தமிழ் திசை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
    • செவிலியர் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப நடவடிக்கை: தேசிய நலவாழ்வு குழுமம் அறிவுறுத்தல்
    • தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை 5 டிகிரி உயரும் 
    • சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளின் தமிழாசிரியர்கள் 1,200 பேருக்கு பயிற்சி முகாம்: அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
    • ஜப்பான், தென் கொரிய பொருட்களுக்கு 25% வரிவிதிப்பு: ட்ரம்ப் கடிதம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.