Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘முஸ்லிம் வாக்கு வங்கியை திருப்திப்படுத்தவே மம்தா ஆபரேஷன் சிந்தூரை எதிர்க்கிறார்’ – அமித் ஷா
    தேசியம்

    ‘முஸ்லிம் வாக்கு வங்கியை திருப்திப்படுத்தவே மம்தா ஆபரேஷன் சிந்தூரை எதிர்க்கிறார்’ – அமித் ஷா

    adminBy adminJune 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘முஸ்லிம் வாக்கு வங்கியை திருப்திப்படுத்தவே மம்தா ஆபரேஷன் சிந்தூரை எதிர்க்கிறார்’ – அமித் ஷா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கொல்கத்தா: முஸ்லிம் வாக்குவங்கியை திருப்திபடுத்துவதற்காக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் வக்பு திருத்தச் சட்டத்தை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

    கொல்கத்தாவில் நடந்த பாஜக கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறுகையில், “முஸ்லிம் வாக்கு வங்கியை திருப்தி படுத்துவதற்காக மம்தா, ஆபரேஷன் சிந்தூரை எதிர்க்கிறார். அவ்வாறு செய்வதன் மூலம் அவர் இந்தநாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை அவமதிக்கிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்கத்தின் தாய்மார்களும் சகோதரிகளும் மம்தா பானர்ஜி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்ததற்காக பாடம் புகட்டுவார்கள்.

    ஏப்ரல் மாதத்தில் முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் சம்மந்தப்பட்டுள்ளனர். அது அரசு ஆதரவுடன் நடந்த ஒரு கலவரம். அக்கலவரத்தின் போது எல்லைப் பாதுகாப்புப் படைகளை நிறுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால், மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு அதற்கு அனுமதிக்கவில்லை. அதனால் வன்முறை தொடர்ந்தது.

    சமாதான அரசியலுக்காக மம்தா பானர்ஜி வக்பு சட்டத்தை எதிர்த்தார். அவர் வங்கதேசத்தினருக்காக மேற்குவங்கத்தின் எல்லைகளைத் திறந்து விட்டார். அவரால் ஊடுருவலை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. பாஜக வால் மட்டுமே ஊடுருவலைத் தடுத்து நிறுத்த முடியும்.

    மேற்கு வங்கத்தில் ஆளும் டிஎம்சி அரசு, பிஎஸ்எஃப் படைகள் நிறுத்துவதற்கு நிலம் வழங்கவில்லை. மேற்குவங்க அரசு பிஎஸ்எஃப் படைகளை நிலைநிறுத்துவதற்கு நிலம் வழங்கியதும் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும். ஆனால், மம்தா பானர்ஜி அரசு நிலம் வழங்காது. அது தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக,ஊடுருவல் தொடர்வதை விரும்புகிறது.” என்று அமித் ஷா தெரிவித்தார்.

    முன்னதாக, ஏப்.22-ல் நடந்த பஹஸ்காம் பயங்கரவாத தாக்குதலுத்கு எதிரான ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொள்வதாக சமீபத்தில் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தால் குழப்பம் ஏற்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

    August 17, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பாஜக ஆலோசனை

    August 17, 2025
    தேசியம்

    பிஹாரில் ராகுல் காந்தியின் ’வாக்காளர் அதிகார நடைபயணம்’ நாளை தொடக்கம்!

    August 16, 2025
    தேசியம்

    ஆர்எஸ்எஸ் பெருமை பேசிய பிரதமர் மோடி – சுதந்திர தின உரையும், சில ரியாக்‌ஷன்களும்!

    August 16, 2025
    தேசியம்

    ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் தான் இந்திய பிரிவினைக்கு காரணம்: என்சிஇஆர்டி

    August 16, 2025
    தேசியம்

    சீன வெளியுறவு அமைச்சர் அடுத்த வாரம் இந்தியா வருகை!

    August 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியா வளர்ந்த நாடாக மாற கல்வி வளர்ச்சி முக்கியம்: விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன் கருத்து
    • நீலகிரி, கோவையில் இன்று கனமழை
    • ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தால் குழப்பம் ஏற்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
    • இளநிலை யோகா மருத்துவ படிப்புக்கு 4,200 பேர் விண்ணப்பம்
    • திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலம்: காவடிகள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.