Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான மேற்பார்வை குழு பரிந்துரையை அமல்படுத்த உத்தரவு
    தேசியம்

    முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான மேற்பார்வை குழு பரிந்துரையை அமல்படுத்த உத்தரவு

    adminBy adminMay 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான மேற்பார்வை குழு பரிந்துரையை அமல்படுத்த உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணை கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழக பொதுப் பணித் துறை அணையைப் பராமரித்து வருகிறது. முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அணை வலுவாக இருப்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த 2014-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த 2011-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த சூழலில் மத்திய அரசு சார்பில் அணை பாதுகாப்பு சட்டம் 2021 நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை மேற்கோள் காட்டி முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு பணியை கண்காணிக்க மேற்பார்வை குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி தேசிய அணை பாதுகாப்பு அணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் அடங்கிய மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த மார்ச் மாதம் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணையை பராமரிப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்கியது.

    இந்த சூழலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், திபாங்கர் தத்தா, கோடீஸ்வர் சிங் அமர்வு முன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் கூறும்போது, “நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த கேரளா தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறது” என்று தெரிவித்தார்.

    மத்திய அரசு முன்வைத்த வாதத்தில், “முல்லைப் பெரியாறு அணை, பேபி அணையை பலப்படுத்த தமிழகத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேரளாவிடம் மத்திய அரசு கூறியது. முதலில் அனுமதி அளிப்பதாக கூறிய கேரளா, பின்னர் அனுமதி வழங்க மறுத்தது” என்று தெரிவிக்கப்பட்டது.

    கேரள அரசு வழக்கறிஞர் கூறும்போது, “இந்த பிரச்சினை தொடர்ச்சியாக நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கு தீர்வு காண உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என்று கோரப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது: அணை பாதுகாப்பு குறைவாக இருக்கிறது கேரளா குற்றம்சாட்டுகிறது. ஆனால் அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கிறது.

    இப்போதைய சூழலில் அணையின் பாதுகாப்பு மிகவும் அவசியம். எனவே முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு தொடர்பாக மேற்பார்வை குழு அளித்த பரிந்துரைகளை 2 வாரங்களில் அமல்படுத்த வேண்டும். மழை அளவு உள்ளிட்ட விவரங்களை தமிழக, கேரள அரசுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அணை பாதுகாப்பாக இல்லை என்ற கேரளாவின் குற்றச்சாட்டை நீதிபதிகள் நிராகரித்தனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை இடையே மோதல்: ரூ.100 கோடி சாலையின் நடுவே மரங்கள்

    July 1, 2025
    தேசியம்

    தெலுங்கு மாநிலங்களில் பாஜக தலைவர்கள் மாற்றம்: கட்சி எம்எல்ஏ ராஜினாமா

    July 1, 2025
    தேசியம்

    பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: எத்தனை கி.மீ.-க்கு எவ்வளவு அதிகரிப்பு?

    June 30, 2025
    தேசியம்

    நுகர்வு கலாசாரம் கற்பனை செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்: திரவுபதி முர்மு பேச்சு

    June 30, 2025
    தேசியம்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு 6 நாள் பயணம்

    June 30, 2025
    தேசியம்

    மணிப்பூரில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை இடையே மோதல்: ரூ.100 கோடி சாலையின் நடுவே மரங்கள்
    • பாமக நெருக்கடியை சமாளிக்க அன்புமணி டெல்லியில் முகாம்: தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க முயற்சி
    • பளபளப்புக்குப் பின்னால்: போடோக்ஸ், குளுதாதயோன் மற்றும் வயதான எதிர்ப்பு மருந்துகளின் சொல்லப்படாத அபாயங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தெலுங்கு மாநிலங்களில் பாஜக தலைவர்கள் மாற்றம்: கட்சி எம்எல்ஏ ராஜினாமா
    • சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.