Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மும்பை – அகமதாபாத்துக்கு விரைவில் புல்லட் ரயில்: 500 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் சென்றடையலாம்
    தேசியம்

    மும்பை – அகமதாபாத்துக்கு விரைவில் புல்லட் ரயில்: 500 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் சென்றடையலாம்

    adminBy adminAugust 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மும்பை – அகமதாபாத்துக்கு விரைவில் புல்லட் ரயில்: 500 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் சென்றடையலாம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாவ்நகர்: மும்பை – அகமதாபாத் இடையே விரைவில் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை – குஜராத்தின் அகமதாபாத் நகரங்களுக்கு இடையிலான புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தார். 2017 செப்டம்பரில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஜப்பானிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் புல்லட் ரயில் திட்டத்தின் திட்ட மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடி ஆகும். மும்பை – அகமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்துக்கு அதிநவீன தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 12 ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    இத்திட்டத்துக்காக ஜப்பானில் 2 சின்கான்சென் ரக புல்லட் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் இதன் சோதனை ஓட்டம்நடந்து வருகிறது. இந்த புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை. இந்த சூழலில், குஜராத்தின் பாவ்நகர் ரயில் முனையத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், புல்லட் ரயில் திட்டம் தொடர்பான தகவல்களை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். அவர் கூறியதாவது: நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை, மும்பை – அகமதாபாத் இடையே விரைவில் தொடங்கப்படும். இதற்கான கட்டுமான பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய புல்லட் ரயிலில் மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு 2 மணி நேரம் 7 நிமிடங்களில் செல்ல முடியும்.

    பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் 34,000 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத், அம்ருத் பாரத் எக்ஸ்பிரஸ், நமோ பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 8 அம்ருத் பாரத் ரயில் களின் சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த ரயில்களில், வந்தே பாரத் ரயில்களுக்கு இணையான வசதிகள் உள்ளன. ஆனால், கட்டணம் மிக குறைவு.

    படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை செப்டம்பரில் தொடங்கப்படும். இந்த ரயில்களில் 16 பெட்டிகள் இருக்கும். ஒரு ரயிலில் 1,128 பேர் பயணம் செய்ய முடியும். படுக்கை வசதி கொண்ட புதிய வந்தே பாரத் ரயில்கள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படும் என்பதை ரயில்வே வாரியம் முடிவு செய்யும். இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஜப்பானில் இருந்து சரக்கு கப்பல் மூலம் புல்லட் ரயில்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட உள்ளன. விரைவில் இந்தியாவில் புல்லட் ரயில்களின் சோதனை நடைபெறும். புல்லட் ரயில்களின் இயக்கம், பராமரிப்பு தொடர்பாக இந்திய குழு ஜப்பானில் முகாமிட்டுள்ளது. 360 ரயில்வே ஊழியர்கள், ஜப்பானில் பயிற்சி பெற உள்ளனர். 80 சதவீத கட்டுமான பணிகள்முடிந்துள்ளன. எஞ்சிய 20 சதவீதபணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ​​​​​​​அப்போது ரூ.7,000, இப்போது ரூ.6,755 கோடி: பால் வியாபாரத்தில் கோலோச்சும் சந்திரபாபு

    August 25, 2025
    தேசியம்

    ​​​​​​​இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்: விண்கலத்தை தரையிறக்கும் பாராசூட் சோதனை வெற்றி

    August 25, 2025
    தேசியம்

    ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் சோதனை வெற்றி: ராஜ்நாத் சிங் பாராட்டு

    August 24, 2025
    தேசியம்

    பிஹார் SIR: 98% வாக்காளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர் – தேர்தல் ஆணையம் தகவல்

    August 24, 2025
    தேசியம்

    ககன்யானுக்கான முதல் ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை வெற்றி: இஸ்ரோ

    August 24, 2025
    தேசியம்

    இந்துக்களை அவமதிக்கும் பினராயி விஜயனும் ஸ்டாலினும் ஐயப்ப சங்கமத்தில் பங்கேற்பதா? – பாஜக கண்டனம்

    August 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மேட்டூர் நீர்மட்டம் 5 நாளாக முழு கொள்ளளவில் நீடிப்பு
    • இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் பயணிக்க 10 இடங்கள்
    • ஸ்டார்ஷிப் பின்னடைவு: எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்க்ரப்ஸ் பத்தாவது சோதனை விமானம்; தரை அமைப்புகள் தடுமாற்றம் தொடங்குதல் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ​​​​​​​அப்போது ரூ.7,000, இப்போது ரூ.6,755 கோடி: பால் வியாபாரத்தில் கோலோச்சும் சந்திரபாபு
    • நீதிமன்றம் விடுவித்த படகுகளை மீட்க ராமேசுவரம் மீனவர்கள் குழுவினர் இன்று படகில் இலங்கை பயணம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.