Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மும்பையில் 34 மனித வெடிகுண்டுகள் வெடிக்கும் என வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்த நபர் கைது
    தேசியம்

    மும்பையில் 34 மனித வெடிகுண்டுகள் வெடிக்கும் என வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்த நபர் கைது

    adminBy adminSeptember 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மும்பையில் 34 மனித வெடிகுண்டுகள் வெடிக்கும் என வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்த நபர் கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டுகள் வெடிக்க உள்ளதாகவும், 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும், 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட உள்ளதாகவும் வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்த நபர் நொய்டாவில் கைது செய்யப்பட்டார்.

    மும்பை போக்குவரத்துப் போலீசாரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு சமீபத்தில் ஒரு மிரட்டல் செய்தி வந்திருந்தது. ஃபிரோஸ் என்பவரின் பெயரில் வந்த அந்த மிரட்டல் செய்தியில், “மும்பை நகரத்தின் பல்வேறு இடங்களில் 34 மனித வெடிகுண்டுகள் வெடிக்க உள்ளன. லஷ்கர் இ ஜிஹாதி அமைப்பைச் சேர்ந்த 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இந்த வெடிவிபத்துக்கு 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட இருக்கிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வாட்ஸ்அப் செய்தியை அடுத்து நேற்று மும்பை முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று நீரில் கரைக்கப்பட உள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நேரக்கூடாது எனும் நோக்கில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மேலும், வாட்ஸ்அப் செய்தியை அனுப்பிய நபரை கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், வாட்ஸ்அப் செய்தி மூலம் போலியாக அச்சுறுத்த முயன்ற 51 வயது அஸ்வினி குமார் என்பவரை போலீசார் உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் இன்று கைது செய்தனர்.

    பிஹாரின் பாடலிபுத்ராவைச் சேர்ந்த அஸ்வினி குமார், கடந்த 5 ஆண்டுகளாக நொய்டாவில் வசித்து வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அஸ்வினி குமாரின் நண்பரான ஃபிரோஸ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 2023ம் ஆண்டு இவர் 3 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். இதற்கு பழிவாங்கும் நோக்கில் ஃபிரோஸ் பெயரில் அஸ்வினி குமார் வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் குறுஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கைது செய்யப்பட்டுள்ள அஸ்வினி குமாரை மும்பைக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து 7 மொபல் போன்கள், 3 சிம் கார்டுகள், 6 மெமரி கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசர் தெரிவித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராக லுக்​-அவுட் நோட்டீஸ்

    September 6, 2025
    தேசியம்

    அமெரிக்காவுடனான நல்லுறவை பிரதமர் மோடி மதிக்கிறார்: ஜெய்சங்கர் கருத்து

    September 6, 2025
    தேசியம்

    அதிபர் ட்ரம்ப் விதித்த 50% வரி குறுகிய காலம்​தான் நீடிக்​கும்: பொருளா​தார ஆலோ​சகர் கருத்து 

    September 6, 2025
    தேசியம்

    அபு​தாபி லாட்​டரி​யில் ரூ.36 கோடி வென்ற இந்தியர் தாயகம் திரும்ப விருப்​பம்

    September 6, 2025
    தேசியம்

    சமோசா வாங்கி வராத கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கிய மனைவி மீது வழக்கு

    September 6, 2025
    தேசியம்

    குளிர்பானங்களுக்கு 40 சதவீத வரி விதிப்பு: உடல் பருமன் குறைப்பு நிபுணர்கள் வரவேற்பு

    September 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தனுஷ் ஒப்பந்தமாகியுள்ள புதிய படம்
    • கட்சி ஜனநாயகம் பற்றி மேடையில் மட்டும்தான் எடப்பாடி பேசுகிறார்: செங்கோட்டையன் விமர்சனம்
    • AATPOURE TO NIVI: இந்தியாவில் பிரபலமான சேலை கட்டும் பாணிகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சினிமாவை மிஸ்யூஸ் செய்யாதீர்கள்: தனஞ்ஜெயன்
    • கும்பகோணம்: நாய்கள் சூழ்ந்து கடிக்க முயன்றதில் உடை கிழிந்து உயிர் தப்பிய சிறுமி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.