Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»முன்னாள் வெளியுறவு செயலர் உட்பட மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை நியமித்தார் குடியரசு தலைவர்
    தேசியம்

    முன்னாள் வெளியுறவு செயலர் உட்பட மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை நியமித்தார் குடியரசு தலைவர்

    adminBy adminJuly 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முன்னாள் வெளியுறவு செயலர் உட்பட மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை நியமித்தார் குடியரசு தலைவர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

    மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் 233 பேர் மாநிலங்கள், யூனியன் பிரதேச எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய 12 எம்.பி.க்களை மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் குடியரசு தலைவர் நியமிக்கிறார். இலக்கியம், அறிவியல், சமூக சேவை,பொது வாழ்க்கை என பல துறைகளில் நாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வருபவர்கள் எம்.பி.க்களாக நியமிக்கப்படுகின்றனர்.

    இதில் முதல் கட்டமாக மூத்த அரசு வழக்கறிஞர் உஜ்வல் தியோரா நிகம், முன்னாள் வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, சமூக சேவகர் சி.சதானந்தன், வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகிய 4 பேரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார். இத்தகவலை உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோடி வாழ்த்து: இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் மோடி தனது வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: தீவிரவாத, கிரிமினல் வழக்குகளை திறம்பட நடத்தியவர் வழக்கறிஞர் உஜ்வல் நிகம். முக்கிய வழக்குகளில் நீதியை பெற்று தருவதில் அவரது பங்கு மிகப் பெரியது. வெளியுறவு துறை செயலராக, தூதராக செயல்பட்டவர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா. அமெரிக்கா மற்றும் வங்கதேசத்துக்கான இந்திய தூதராக பணியாற்றியவர். கடந்த 2023-ல் ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றபோது, முக்கிய பங்காற்றினார்.

    வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின், பத்மஸ்ரீ விருது பெற்றவர்.இந்திய வரலாறு, கல்வி, கலாச்சாரம் பற்றிய அவரது ஆழ்ந்த அறிவு மற்றும் அவை தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள், நூல்கள் கல்வித் துறையை மேலும் வளப்படுத்தி உள்ளது. கேரள சமூக சேவகர் சி.சதானந்த மாஸ்டர். கடந்த 1994-ல் அரசியல் ரீதியாக அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 கால்களையும் இழந்தார். வன்முறை, மிரட்டல்களுக்கு அஞ்சாமல் சமூக சேவை செய்து வருகிறார். அவரது சேவை மிகவும் பாராட்டுக்குரியது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    சரணடைந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள உதவி

    July 14, 2025
    தேசியம்

    நேபாளம், வங்கதேசத்தை சேர்ந்தவர்களின் பெயர் பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்: தேர்தல் ஆணையம்

    July 14, 2025
    தேசியம்

    ‘உங்களது அரசமைப்பு பற்று போற்றத்தக்கது’ – நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் வாழ்த்து

    July 13, 2025
    தேசியம்

    டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த சொகுசு கார்: நள்ளிரவில் பயங்கர சம்பவம்

    July 13, 2025
    தேசியம்

    பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: வெளிநாட்டினர் அதிகம் கண்டறியப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல்

    July 13, 2025
    தேசியம்

    ஏமனில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணம் தர செவிலியர் நிமிஷா பிரியா குடும்பத்தார் முயற்சி

    July 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நபார்டு வங்​கி​யின் 44-வது ஆண்டு தொடக்க விழாவில் ஏராளமான திட்டங்கள் அறிவிப்பு
    • கோவிட் முதல் நியூமோனிக் பிளேக் வரை: எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி 100% செயல்திறனுடன் மற்றொரு வெற்றியைப் பெறுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சரணடைந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள உதவி
    • சங்க கட்டிடத்தை நிர்வகிப்பது யார் என்பதில் தகராறு: விருதுநகரில் அரசு ஊழியர் சங்கத்தினரிடையே மோதல்
    • பாஜகவுக்கு வேதாந்தா வழங்கிய நன்கொடை 4 மடங்காக உயர்வு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.