Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»முகநூலில் நட்பாக பழகிய 4 பெண்களிடம் மும்பையில் 2 ஆண்டுகளில் ரூ.9 கோடியை இழந்த முதியவர்
    தேசியம்

    முகநூலில் நட்பாக பழகிய 4 பெண்களிடம் மும்பையில் 2 ஆண்டுகளில் ரூ.9 கோடியை இழந்த முதியவர்

    adminBy adminAugust 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முகநூலில் நட்பாக பழகிய 4 பெண்களிடம் மும்பையில் 2 ஆண்டுகளில் ரூ.9 கோடியை இழந்த முதியவர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: ​முகநூலில் நட்​பாக பழகிய பெண்​ணிடம், மும்​பையைச் சேர்ந்த 80 வயது முதி​ய​வர் ஒரு​வர் 2 ஆண்​டு​களில் ரூ.8.7 கோடி பணத்தை இழந்​துள்​ளார். மும்​பை​யில் வசிக்​கும் 80 வயது முதி​ய​வருக்​கு, கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் முகநூலில் சார்வி என்ற பெண் நட்​பாக பழகு​வதற்கு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

    இதை ஏற்​றுக் கொண்​ட​வுடன் இரு​வரும் போன் எண்​களை பரி​மாறி வாட்ஸ் அப் மற்​றும் முகநூலில் தொடர்ந்து தகவல்​களை பரி​மாறி​யுள்​ளனர். கணவரை விட்டுப் பிரிந்து பிள்​ளை​களு​டன் வசிப்​ப​தாக சார்வி கூறி​யுள்​ளார். அதன்​பின் பிள்​ளை​களுக்கு உடல்​நிலை பாதிப்பு என கூறி முதி​ய​வரிடம் பணம் கேட்​டுள்​ளார். அவரும் அவ்​வப்​போது யுபிஐ மூலம் பணம் அனுப்பி உதவி​யுள்​ளார்.

    சில நாட்​கள் கழித்து கவிதா என்ற பெயரில் ஒரு​வர் வாட்ஸ் ஆப் மூலம் முதி​ய​வரை தொடர்பு கொண்டு சார்​வி​யின் தோழி என அறி​முக​மாகி​யுள்​ளார். சில நாட்​களில் அவர் ஆபாச தகவல்​களை அனுப்பி பணம் கேட்க தொடங்​கி​யுள்​ளார். சில மாதங்​கள் கழித்து தினாஸ் என்ற பெண் சார்​வி​யின் சகோ​தரி என கூறி அறி​முக​மாகி​யுள்​ளார்.

    அவர் மருத்​து​வ​மனை​யில் சார்வி இறந்து விட்​ட​தாக கூறி பணம் கேட்​டுள்​ளார். சார்​வி​யும், முதி​ய​வரும் சாட்​டிங்​கில் பகிர்ந்து கொண்ட தகவல்​களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து முதி​ய​வருக்கு அனுப்பி தினாஸ் பணம் பறித்​துள்​ளார். முதி​ய​வர் பணத்தை திருப்பி கேட்​ட​போது, தினாஸ் தற்​கொலை செய்​யப்​போவ​தாக மிரட்​டி​யுள்​ளார்.

    அதன்​பின் ஜாஸ்​மின் என்ற பெண் முதி​ய​வரிடம் வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்​யத் தொடங்​கி​யுள்​ளார். அவர் தினாஸ் தோழி என கூறி முதி​ய​வரிடம் பணம் பெற்​றுள்​ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரல் முதல் 2025 ஜனவரி வரை முதி​ய​வர் 734 பணப் பரிமாற்றங்கள் மூலம் ரூ.8.7 கோடி பணத்தை இழந்​துள்​ளார்.

    அவரது சேமிப்பு முழு​வதும் தீர்ந்​த​தால், மரு​மகளிடம் ரூ.2 லட்​சம் பெற்று தன்​னிடம் தொடர்பு கொண்​ட​வர்​களுக்கு கொடுத்துள்ளார். பிறகு தனது மகனிடம் ரூ.5 லட்​சம் கடன் தரும்​படி முதி​ய​வர் கேட்​டுள்​ளார். இதனால் சந்​தேகம் அடைந்த மகன் எதற்​காக பணம் வேண்​டும் என கேட்டபோது நடந்த சம்​பவங்​களை கூறி​யுள்​ளார்.

    சைபர் மோசடி​யில் சிக்கி ஏமாந்​து​விட்​டோம் என்​பதை முதி​ய​வர் அறிந்​தவுடன், அவருக்கு உடல்​நிலை பாதிப்பு ஏற்​பட்​டது. இதனால் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அப்​போது​தான் அவருக்கு நினை​வாற்​றல் பாதிப்பு இருப்​பது தெரிய​வந்​தது. இச்​சம்​பவம் தொடர்​பாக சைபர் குற்​றப் பிரி​வில் கடந்த மாதம் 22-ம் தேதி புகார் கொடுக்​கப்​பட்​டது. இந்த வழக்கை வி​சா​ரித்து வரும் போலீ​ஸார், ஒரே பெண்​ணே, நான்கு பேரின் பெயரில் மு​தி​ய​வரை ஏமாற்​றி பணம்​ பறித்​திருக்​கலாம்​ என சந்​தேகிக்கின்றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    எல்லையில் மக்கள்தொகையை மாற்றும் சதியை முறியடிக்க விரைவில் நடவடிக்கை – பிரதமர் மோடி

    September 14, 2025
    தேசியம்

    அசாமில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம்: பூடானில் நில அதிர்வு

    September 14, 2025
    தேசியம்

    பாகிஸ்தான் பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

    September 14, 2025
    தேசியம்

    இந்தி, இந்திய மொழிகளின் நண்பன்; போட்டி அல்ல: அமித் ஷா

    September 14, 2025
    தேசியம்

    பஹல்காமில் பலியான 26 பேரை விட பணம் முக்கியமா? – இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டி குறித்து ஒவைசி விமர்சனம்

    September 14, 2025
    தேசியம்

    ”நயன்தாரா வந்தால் இதைவிட இரண்டு மடங்கு கூட்டம் வரும்” – விஜய்யை சீண்டிய சீமான்

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சீருடை பணியாளர்கள் 193 பேருக்கு அண்ணா பதக்கம்
    • பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் இன்று தொடக்கம்
    • தமிழகத்தில் நாளை முதல் செப்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
    • முதுநிலை மேலாண்மை படிப்புக்கான ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.20 வரை அவகாசம் நீட்டிப்பு
    • இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: 2026 மார்ச்சில் பொதுத் தேர்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.