Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மிசோரமில் முதல் ரயில் சேவையை தொடங்கினார் பிரதமர்: ரூ.9 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல்
    தேசியம்

    மிசோரமில் முதல் ரயில் சேவையை தொடங்கினார் பிரதமர்: ரூ.9 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல்

    adminBy adminSeptember 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மிசோரமில் முதல் ரயில் சேவையை தொடங்கினார் பிரதமர்: ரூ.9 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அய்சால்: மிசோரமில் முதல் ரயில் சேவையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். இது தவிர ரூ.9 ஆயிரம் கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

    பிரதமர் நரேந்​திர மோடி வடகிழக்கு மாநிலங்​களில் 2 நாள் சுற்​றுப் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். இதன் ஒரு பகு​தி​யாக மிசோரம் மாநிலம் அய்​சால் நகரில் உள்ள விமான நிலை​யத்​துக்கு நேற்று காலை சென்​றடைந்​தார். அங்​கிருந்து லம்​முவல் கிர​வுண்டு பகு​திக்கு ஹெலி​காப்​டரில் செல்ல திட்​ட​மிட்​டார். ஆனால் கனமழை காரண​மாக அங்கு செல்​ல​வில்​லை.

    இதையடுத்​து, பைராபி – சாய்​ராங் இடையி​லான 51.38 கி.மீ. நீள ரயில் பாதையை பிரதமர் மோடி கணொலி மூலம் தொடங்கி வைத்​தார். இந்த பாதை அய்​சால் நகரை​யும் அசாமின் சில்​சர் நகரை​யும் இணைக்​கிறது. அத்​துடன் சாய்​ராங் (மிசோரம்) -ஆனந்த் விஹார் (டெல்​லி) இடையி​லான ராஜ்​தானி எக்​ஸ்​பிரஸ், கொல்​கத்​தா-​சாய்​ராங் இடையி​லான கொல்​கத்தா எக்​ஸ்​பிரஸ் மற்​றும் குவாஹாட்​டி-​சாய்​ராங் இடையி​லான குவாஹாட்டி எக்​ஸ்​பிரஸ் ஆகிய 3 ரயில் சேவை​களை​யும் அவர் காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்​தார். இதன்​மூலம் மிசோரம் மாநிலத்​தில் முதல் முறை​யாக ரயில் சேவை தொடங்​கப்​பட்​டுள்​ளது. மேலும் சாலை கட்​டு​மானம் உட்பட ரூ.9 ஆயிரம் கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டப்​பட்​டது. இதில் முடிவடைந்த சில திட்​டங்​களை பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார்.

    இந்​நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: நாட்​டின் வளர்ச்​சிப் பயணத்​தில் மிசோரம் மாநிலம் இப்​போது முக்​கிய பங்கு வகிக்​கிறது. இது நாட்​டுக்கு குறிப்​பாக மிசோரம் மக்​களுக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாள். இன்று முதல் அய்​சால் நகரம் நாட்​டின் ரயில்வே வரைபடத்​தில் இடம்​பெறுகிறது.

    இந்த புதிய ரயில் வழித்​தடத்​தின் மூலம் மிசோரம் மாநில விவ​சா​யிகளும் வர்த்​தகர்​களும் நாடு முழு​வதும் தங்​கள் பொருட்​களை சுலப​மாக சந்​தைப்​படுத்த முடி​யும். மேலும் மக்​கள் கல்வி மற்​றும் சுகா​தார வசதிக்​காக பிற ஊர்​களுக்கு எளி​தாக செல்​வதற்​கான வாய்ப்​பு​களை பெறு​வார்​கள். மேலும் சுற்​றுலா, போக்​கு​வரத்து மற்​றும் விருந்​தோம்​பல் துறை​களில் கூடு​தல் வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

    172 ஆண்​டு​களுக்கு பிறகு: பிரிட்​டிஷ் ஆட்​சிக் காலத்​தில் இந்​தி​யா​வில் முதல் முறை​யாக ரயில் சேவை தொடங்​கப்​பட்​டது.ஆனால், வடகிழக்கு மாநிலங்​களில் நில அமைப்பு காரண​மாகரயில் சேவை இயக்கப்​படவில்​லை. இந்​நிலை​யில், மத்​தி​யில் பாஜக அரசு அமைந்த பிறகு வடகிழக்கு மாநிலங்​களிலும் ரயில் பாதைகள் படிப்​படி​யாக நிறு​வப்​பட்டு வரு​கின்​றன. அந்த வகை​யில், இந்​தி​யா​வில் ரயில் சேவை தொடங்கி 172 ஆண்​டுக்​குப் பிறகு மிசோரம் மாநிலத்​தில் முதல் முறை​யாக ரயில் சேவை தொடங்​கப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மகாராஷ்டிராவின் கல்யாண், டோம்பிவலி நகரங்களில் ஒரே நாளில் 67 பேர் நாய்க்கடியால் பாதிப்பு

    September 14, 2025
    தேசியம்

    தெலங்கானாவில் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் தலைவர் சுஜாதக்கா சரண்

    September 14, 2025
    தேசியம்

    திருமலையில் காணாமல் போனவர்களை கண்டறிய நவீன தொழில்நுட்பம்

    September 14, 2025
    தேசியம்

    பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

    September 14, 2025
    தேசியம்

    சிறிய பிரச்சினை பெரிதாக வெடிக்கும்: ஆதித்யநாத் எச்சரிக்கை

    September 14, 2025
    தேசியம்

    டெல்லி – மீரட் வழித்தடத்தில் நமோ பாரத் ரயில் 160 கி.மீ வேகத்தில் பயணம்

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் – நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை
    • ஷேக்ஸ்பியரின் 10 காலமற்ற காதல் மேற்கோள்கள்
    • போரை நிறுத்தும் நோக்கிலான பொருளாதார தடைகள் நிலைமையை சிக்கலாக்கும் – சீனா
    • உயர்கல்வித்துறையை சீரழித்தது தான் திமுக அரசின் சாதனை – அன்புமணி கடும் தாக்கு
    • மெதி நீர்: வேகவைத்ததா அல்லது ஊறவைத்ததா? அதிகபட்ச நன்மைகளுக்காக இதை உட்கொள்வதற்கான சிறந்த வழி இது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.