Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ‘SACHET’ மொபைல் செயலி: பயன் என்ன?
    தேசியம்

    மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ‘SACHET’ மொபைல் செயலி: பயன் என்ன?

    adminBy adminApril 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ‘SACHET’ மொபைல் செயலி: பயன் என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 121-வது அத்தியாத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது ‘SACHET’ என்ற மொபைல் செயலி குறித்து குறிப்பிட்டிருந்தார்.

    “நண்பர்களே, இப்போது நாம் பேரிடர் மேலாண்மை பற்றிப் பேசி வந்தோம். எந்த ஒரு இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ளவும் மிகவும் முக்கியமானது எது என்றால் அது உங்களுடைய எச்சரிக்கையுணர்வு, விழிப்போடு இருத்தல். இந்த எச்சரிக்கையுணர்வுக்கு உதவிகரமாக, உங்களுடைய செல்பேசியில் ஒரு விசேஷமான செயலி உங்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கும்.

    இந்தச் செயலியானது நீங்கள் எந்தவொரு இயற்கைப் பேரிடரிலும் சிக்காதவாறு காப்பாற்றுகிறது, இதன் பெயரும் கூட SACHET (சசேத்). சசேத் செயலியை, இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியிருக்கிறது. வெள்ளம், சூறாவளி, நிலச்சரிவு, ஆழிப்பேரலை, காட்டுத்தீ, பனிச்சரிவு, புயல், புழுதிக்காற்று அல்லது மின்னல் தாக்குதல் போன்ற பேரிடர்கள் ஏற்படும் வேளையில், இந்த சசேத் செயலி உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அளித்து, பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.

    இந்தச் செயலியால் நீங்கள் வானிலை ஆய்வுத் துறைசார் அண்மைத் தகவல்களைப் பெறலாம். குறிப்பாக, இந்த சசேத் செயலி, மாநில மொழிகளிலும் கூட பல தகவல்களை அளிக்கிறது. இந்தச் செயலியால் நீங்களும் பயனடையுங்கள், உங்கள் அனுபவங்களைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

    SACHET செயலி: பேரிடர் பாதிப்பு குறித்த முன்னறிவுப்புகளை இந்த செயலி வழங்கும். இந்த தகவல் அரசு தரப்பில் வழங்கப்படுகிறது. இதோடு வானிலை சார்ந்த அறிவிப்புகளை இந்திய வானிலை மையத்தின் துணையோடு இந்த செயலியில் பயனர்கள் பெற முடியும். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்த முடியும். (தமிழில் நாம் பயன்படுத்தி பார்த்தபோது அது அப்படியே ஆங்கிலத்தில் இருந்து நேராக இணையம் மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது போல இருந்தது. ஹோம் பேஜ் என்பது தமிழில் ‘வீடு’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அது முகப்பு என்று இருக்க வேண்டும்). இதில் அவசர கால உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

    கடந்த 2023-ம் ஆண்டில் இந்த செயலி வெளியிடப்பட்டது. ஆண்ட்ராய்டு 8 மற்றும் அதற்கடுத்த ஆண்ட்ராய்டு பதிப்புகளில் இந்த செயலியை பயனர்களை பயன்படுத்த முடியும். கூகுள் பிளே ஸ்டோரில் மட்டும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆப்பிள் ஐபோன்களிலும் இந்த செயலியை பயன்படுத்த முடியும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிஹாரில் ராகுல் காந்தியின் ’வாக்காளர் அதிகார நடைபயணம்’ நாளை தொடக்கம்!

    August 16, 2025
    தேசியம்

    ஆர்எஸ்எஸ் பெருமை பேசிய பிரதமர் மோடி – சுதந்திர தின உரையும், சில ரியாக்‌ஷன்களும்!

    August 16, 2025
    தேசியம்

    ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் தான் இந்திய பிரிவினைக்கு காரணம்: என்சிஇஆர்டி

    August 16, 2025
    தேசியம்

    சீன வெளியுறவு அமைச்சர் அடுத்த வாரம் இந்தியா வருகை!

    August 16, 2025
    தேசியம்

    ட்ரம்ப் – புதின் சந்திப்புக்கு இந்தியா வரவேற்பு: பேச்சுவார்த்தையே தீர்வு தரும் என கருத்து

    August 16, 2025
    தேசியம்

    1999-ல் சவுதியில் நடந்த கொலைக்காக டெல்லியில் ஒருவரை கைது செய்த சிபிஐ – பின்னணி என்ன?

    August 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளிக்கு ரூ.2 கோடி இடத்தை இலவசமாக வழங்கிய தொழிலதிபர்!
    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக வருமானம் 2023-24ல் 5 மடங்கு அதிகரிப்பு: அரசு
    • இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 5 பயிற்சிகள், மேலும் ஒருவர் நீண்ட காலம் வாழ உதவும்
    • கைவிடப்பட்டதா ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா 2’?
    • “திமுக கூட்டணிக்கு எதிரான சதி திட்டங்கள் நிறைவேறாது” – சேலம் கம்யூ. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.