Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மத நிகழ்ச்சியில் பங்கேற்காத ராணுவ அதிகாரி பணி நீக்கத்தை உறுதி செய்தது நீதிமன்றம்
    தேசியம்

    மத நிகழ்ச்சியில் பங்கேற்காத ராணுவ அதிகாரி பணி நீக்கத்தை உறுதி செய்தது நீதிமன்றம்

    adminBy adminJune 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மத நிகழ்ச்சியில் பங்கேற்காத ராணுவ அதிகாரி பணி நீக்கத்தை உறுதி செய்தது நீதிமன்றம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்த ராணுவ அதிகாரியின் பணி நீக்கத்தை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. ராணுவத்தில் கடந்த 2017-ம் ஆண்டு லெப்டினன்ட்டாக பணியில் சேர்ந்தவர் சாமுவேல் கமலேசன். இவர் சீக்கியர் படைப்பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    இந்தப் படைப்பிரிவினர் தங்கியிருக்கும் முகாமில் கோயில் ஒன்றும், குருதுவாரா ஒன்றும் இருந்தது. இங்கு வீரர்கள் பங்கேற்கும் வழிபாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சாமுவேல் கமலேசன் மறுப்பு தெரிவித்தார். தான் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர் என்றும், சீக்கியர் படைப்பிரிவு முகாமில் தேவாலயம் மற்றும் அனைத்து மதத்தினரும் வழிபாடு நடத்தும் சர்வ தர்ம ஸ்தலம் போன்றவை இல்லை என எதிர்ப்பு தெரிவித்தார்.

    இவருக்கு பல கவுன்சலிங் நிகழ்ச்சிகளுக்கும் ராணுவம் ஏற்பாடு செய்தது. ஆனால் லெப்டினன்ட் சாமுவேல் கமலேசன் பிடிவாதமாக இருந்ததால் அவர் ராணுவ ஒழுங்கு விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் சலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 30-ம் தேதி அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

    நமது ராணுவத்தில் அனைத்து மதத்தினரும், சாதியினரும் உள்ளனர். அவர் தங்கள் சீருடையால் ஒன்று பட்டவர்கள். மதத்தாலோ, சாதியாலோ வேறுபட்டவர்கள் அல்ல. ராணுவத்தில் மதம் மற்றும் மண்டலத்தின் பெயருடன் சீக்கியர், ஜாத், ராஜ்புத் போன்ற பல படைப்பிரிவுகள் பாரம்பரியமாக உள்ளன. ஆனாலும், இந்தப்பிரிவில் நியமிக்கப்படும் நபர்களின் மதச்சார்பற்ற கொள்கைகளை குறைத்து மதிப்பிடுவதில்லை.

    ராணுவத்தில் பணியாற்றும் நபர்களின் மத நம்பிக்கைகளுக்கும் உரிய மரியாதையை ராணுவம் அளிக்கிறது. ஆனால், தனது மேல் அதிகாரியின் உத்தரவுக்கு மேலாக தனது மதத்துக்கு சாமுவேல் கமலேசன் முக்கியத்துவம் அளிக்கிறார். இது ஒழுங்கீனம் என்பது தெளிவாக தெரிகிறது.

    பாதுகாப்பு படைக்கு தேவையான ஒழுங்கு, மதச்சார்பற்றதன்மை அவரிடம் இல்லை. இவரது ஒழுங்கீனமான நடவடிக்கை, இந்திய ராணுவத்தின் மதச்சார்பற்ற விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. இது ராணுவ படைப்பிரிவில் அதிகாரிகள் மற்றும் படைப்பிரிவினருக்கு இடையேயான பாரம்பரிய நட்புறவை கடுமையாக பாதிக்கிறது. அவரது பதவிநீக்கம் சரியானதுதான். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    உ.பி.யில் போலியாக தூதரகம் அமைத்து மோசடி செய்த நபர் கைது

    July 24, 2025
    தேசியம்

    உலகளவில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 77-வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா!

    July 24, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் பற்றி மாநிலங்களவையில் பிரதமர் மோடி 29-ம் தேதி உரையாற்றுகிறார்

    July 24, 2025
    தேசியம்

    நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடக்கம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    July 24, 2025
    தேசியம்

    நீதிபதி யஷ்வந்த் வர்மா மேல்முறையீட்டை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம்: தலைமை நீதிபதி கவாய் விலகல்

    July 24, 2025
    தேசியம்

    முழு அரசு மரியாதையுடன் கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் தகனம்!

    July 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜோஷ் இங்லிஷ் அதிரடியில் ஆஸி. வெற்றி
    • பட்டியலின மக்களுக்கு துணையாக இருப்பேன்: துரை வைகோ உறுதி
    • மேகேதாட்டுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா பகுதிகள் பாலைவனமாகிவிடும்: இபிஎஸ் கருத்து
    • “திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன்!” – குஷ்பு ‘சேலஞ்ச்’ நேர்காணல்
    • லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.