Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மத்திய வக்பு இணையதளத்தில் பதிவு செய்யப்படாத சொத்துகள் சேர்க்கப்படாது: அரசு வட்டாரங்கள் தகவல்
    தேசியம்

    மத்திய வக்பு இணையதளத்தில் பதிவு செய்யப்படாத சொத்துகள் சேர்க்கப்படாது: அரசு வட்டாரங்கள் தகவல்

    adminBy adminMay 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மத்திய வக்பு இணையதளத்தில் பதிவு செய்யப்படாத சொத்துகள் சேர்க்கப்படாது: அரசு வட்டாரங்கள் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: விரைவில் தொடங்கப்பட உள்ள மத்திய வக்பு போர்ட்டலின் தரவுத் தளத்தில் பதிவு செய்யப்படாத வக்பு சொத்துகள் விலக்கி வைக்கப்படும். இவை மத்திய தரவுத் தளத்தில் சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவு தளம், “ தயாரிப்பு-சரிபார்ப்பு-அனுமதி” ஆகிய மூன்று அடுக்கு சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பை உள்ளடக்கியதாக இருக்கும்.

    இந்த போர்ட்டல் வரும் ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போர்ட்டல் தற்போதைய வக்பு தரவு களஞ்சியமான இந்திய வக்பு சொத்து மேலாண்மை (டபிள்யூஏஎம்எஸ்ஐ) அமைப்புக்கு மாற்றாக இருக்கும்.

    இந்திய வக்பு சொத்து மேலாண்மை அமைப்பில் பதிவு செய்துள்ள அனைவரும் தற்போது உருவாக்கப்படும் மத்திய வக்பு போர்ட்டலில் புதிதாக பதிவு செய்ய வேண்டும் என்று சிறுபான்மை விவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    புதிய செயல்முறையின்படி கவனிப்பாளர் (முத்தவல்லி) சொத்து விவரங்களை பதிவிட்டு தயாரிப்பாளராக பணியாற்றுவார். வக்பு வாரிய அதிகாரிகள் அதனை சரிபார்ப்பவராக செயல்படுவர். இறுதியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி அனுமதிப்பவராக செயல்படுவார். பதிவுகள் இறுதி செய்யப்படுவதற்கு முன்பாக அந்த அதிகாரி சொத்துகளுக்கான முழு சரிபார்ப்பை உறுதி செய்வார்.

    பதிவு செய்யப்படாத மற்றும் இந்த மூன்று அடுக்கு சரிபார்ப்பில் தகுதி பெறாத அனைவரும் போர்ட்டலில் இணைய பதிவு முறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

    போர்ட்டலின் அம்சங்கள் குறித்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதன்மை பயிற்சியாளர் குழுவுக்கு வழங்கப்பட்ட பயிற்சி அமர்வுக்குப் பிறகு சிறுபான்மை விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ இந்த கட்டமைப்பு செயல்முறை முரண்பாடுகளை கணிசமாகக் குறைக்கும், வக்பு சொத்து பதிவு மற்றும் கண்காணிப்பில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும்” என்று தெரிவித்துள்ளது.

    மாநிலங்கள் சிறுபான்மை அமைச்சகத்துடன் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி நாட்டில் 8.7 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் வக்பு சொத்துகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 4.2 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் முறையான ஆவணங்கள் இன்றி வக்பு சொத்துகளாக நீண்டாக காலமாக இருந்துவருகின்றன. வக்பு சொத்துகள் நாடு முழுவதும் 39 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விரவிக்கிடக்கின்றன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்பு

    July 16, 2025
    தேசியம்

    கேரளாவில் 2 என்சிபி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: அஜித் பவார் தரப்பு கடிதம்

    July 15, 2025
    தேசியம்

    ஒடிசா மாணவி உயிரிழந்த விவகாரம்: உண்மை கண்டறியும் குழுவை அமைத்த யுஜிசி

    July 15, 2025
    தேசியம்

    பிரதமர், ஆர்எஸ்எஸ் குறித்து சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வரைந்தவரின் மனு மீதான உச்ச நீதிமன்ற உத்தரவு சொல்வது என்ன?

    July 15, 2025
    தேசியம்

    அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது லக்னோ நீதிமன்றம்

    July 15, 2025
    தேசியம்

    பூமிக்கு திரும்பிய ஷுபன்ஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு – குடும்பத்தினர் நெகிழ்ச்சி

    July 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘தலைவன் தலைவி’ உருவான கதை: இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம்
    • மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின் ‘ரோடு ஷோ’ – கொட்டும் மழையிலும் மக்கள் உற்சாக வரவேற்பு
    • டெஸ்லா முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு
    • கோலஸ்ட்ரோலை வெட்டும் நான்கு பழங்கள் (மற்றும் இதயத்தை வலிமையாக்குகின்றன) – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.