Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, October 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
    தேசியம்

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

    adminBy adminOctober 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தசரா பரிசாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நாட்டில் பணவீக்கம், விலைவாசியை கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) மத்திய அரசு அறிவிக்கிறது.

    அதன்படி, கடந்த ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை மார்ச் மாதம் 2 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இந்த உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப் படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரித்தது. தற்போது அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 58 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    ஜூலை 1 முதல் அமல்: “இந்த அறிவிப்பு தசரா மற்றும் தீபாவளி பரிசாக இருக்கும். இந்த 3 சதவீத அகவிலைப்படி உயர்வு முன் தேதியிட்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்” என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்த அகவிலைப்படி உயர்வால் 1.15 கோடி மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயன் பெறுவார்கள்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அறுவை சிகிச்சை: பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

    October 3, 2025
    தேசியம்

    5 ஆண்டுகளுக்கு பிறகு அக்.26 முதல் மீண்டும் இந்தியா – சீனா இடையே விமான சேவை – முழு விவரம்

    October 3, 2025
    தேசியம்

    இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: அக்.26 முதல் தொடக்கம்!

    October 2, 2025
    தேசியம்

    இந்திய ஜனநாயக கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது பாஜக: கொலம்பியாவில் ராகுல் காந்தி பேச்சு

    October 2, 2025
    தேசியம்

    4 பேர் உயிரிழப்பு, பாஜக அலுவலகம் சூறை: லடாக் வன்முறை குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவு

    October 2, 2025
    தேசியம்

    குஜராத்தின் சர் க்ரீக் எல்லையில் பாக். ராணுவ கட்டமைப்புகள் அதிகரிப்பு: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

    October 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலர்’ விருது அறிவிப்பு
    • காஞ்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
    • மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
    • டிச.5-ல் ‘அகண்டா 2: தாண்டவம்’ ரிலீஸ்!
    • தீபாவளி பண்டிகைக்கு 108 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.