Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறை
    தேசியம்

    மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறை

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சரவை நாளை (ஏப்.30) காலை 11 மணிக்கு கூடுகிறது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த 23-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டம் மட்டுமே நடத்தப்பட்டது. இதில், பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படுகிறது. முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் இந்த எல்லை வழியாக மே 1-ம் தேதிக்கு முன்பாக திரும்ப வேண்டும். சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்’ என்ற 5 முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இதையடுத்து 24-ம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு எடுத்த முடிவுகளின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவால் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து செல்லுபடியாகும் விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்படுகின்றன. பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விசாக்கள் ஏப்ரல் 29, 2025 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

    தற்போது திருத்தப்பட்டபடி, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் விசா காலாவதியாகும் முன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க இந்தியர்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக மத்திய அமைச்சரவை நாளை காலை 11 மணிக்கு கூட இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “இந்த ஆட்சியை ஆதரிப்பது வருத்தமாக இருக்கிறது!” – நிதிஷ் குமார் மீது சிராக் பாஸ்வான் தாக்கு

    July 26, 2025
    தேசியம்

    பிஹாரில் பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்வு: நிதிஷ் உத்தரவு

    July 26, 2025
    தேசியம்

    ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து 8 மாணவர்கள் உயிரிழப்பு; 30 பேர் காயம்

    July 26, 2025
    தேசியம்

    கார்கில் வெற்றி தினம்: போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் புகழஞ்சலி!

    July 26, 2025
    தேசியம்

    ஒடிசா வனத்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.5 கோடி ரொக்கம், தங்க பிஸ்கட் பறிமுதல்

    July 26, 2025
    தேசியம்

    பிரதமர் பதவியில் தொடர்ந்து 4,078 நாட்களை கடந்து இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “இந்த ஆட்சியை ஆதரிப்பது வருத்தமாக இருக்கிறது!” – நிதிஷ் குமார் மீது சிராக் பாஸ்வான் தாக்கு
    • ‘தலைவன் தலைவி’ வசூல் அதிகரிப்பு: படக்குழுவினர் மகிழ்ச்சி
    • பிரதமர் மோடி செல்லும் இடங்களில் காங். கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை தகவல்
    • ‘புஷ்பா 2’ பற்றி நெகட்டிவாக பேசினாரா ஃபகத் பாசில்?
    • “அரசு ஊழியர் நலனில் பின்தங்கிய நிலையில் தமிழகம்” – பழைய ஓய்வூதிய திட்ட இயக்க தேசிய தலைவர் பேச்சு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.