Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மத்திய அமைச்சகங்களுக்கான கர்தவ்ய பவனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
    தேசியம்

    மத்திய அமைச்சகங்களுக்கான கர்தவ்ய பவனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

    adminBy adminAugust 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மத்திய அமைச்சகங்களுக்கான கர்தவ்ய பவனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: தலைநகர் டெல்​லி​யில் கடமை பாதை (கர்​தவ்யா பாத்) அருகே கட்​டப்​பட்​டுள்ள புதிய கர்​தவ்யா (கடமை) பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கட்​டிடத்​துக்கு மத்​திய அமைச்​சகங்​கள், துறை அலு​வல​கங்​கள் மாறுகின்​றன.

    டெல்​லி​யில் முக்​கிய பகு​தி​யாக விளங்​கிய ராஜ் பாத் (ராஜ பாதை) பகு​தி​யின் பெயரை கர்​தவ்யா பாத் (கடமை பாதை) என மத்​திய அரசு பெயர் மாற்​றம் செய்​தது. இப்​பகுதி சென்ட்​ரல் விஸ்டா திட்​டத்​தின் கீழ் மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. கர்​தவ்யா பாத் அருகே கர்​தவ்யா பவன்​கள் என்ற பெயரில் நவீன வசதி​களு​டன் அரசு அலு​வல​கங்​களை மத்​திய அரசு அமைத்து வரு​கிறது.

    டெல்லி ராய்​சினா ஹில்ஸ் பகு​தி​யில் நார்த் பிளாக் மற்​றும் சவுத் பிளாக் கட்​டிடங்​களில் கடந்த 90 ஆண்​டு​களாக செயல்​பட்டு வந்த மத்​திய அமைச்​சகங்​கள் மற்​றும் பிற துறை அலு​வல​கங்​கள் எல்​லாம் கர்​தவ்யா பவன்​களுக்கு மாற்​றப்​படு​கின்​றன. இதற்​காக 10 புதிய கர்​தவ்யா பவன்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    1950 முதல் 1970 வரையிலான காலகட்டங்களில் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களான சாஸ்திரி பவன், கிரிஷி பவன், உத்யோக் பவன், நிர்மன் பவன் போன்ற கட்டிடங்களில் தற்போது மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இயங்கி வருகின்றன. இந்த கட்டிடங்கள் அமைப்பு ரீதியில் காலாவதியானவை என்றும் போதுமான வசதிகள் இல்லாதவை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

    எனவே, புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கான திட்டங்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மேற்கொண்டது. 10 கர்த்தவ்ய பவன்களை கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இவற்​றில் ஓர் அலு​வலக கட்​டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

    கர்​தவ்யா பவன் – 3 கட்​டிடத்​துக்கு மத்​திய உள்​துறை அமைச்​சகம், பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வா​யு, வெளி​யுறவுத்​துறை மற்​றும் ஊரக மேம்​பாடு, மத்​தி​யப் பணி​யாளர் நலத்​துறை மற்​றும் நில வளத்​துறை அமைச்​சகங்​கள் உட்பட பல அமைச்​சகங்​கள் மாற்​றம் செய்​யப்​படு​கின்​றன. இன்​னும் 2 கட்​டிடங்​களின் கட்​டு​மான பணி​கள் அடுத்த மாதம் முடிவடை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

    இன்​னும் சில மாதங்​களில் மத்​திய நிதித்​துறை அமைச்​சகம் நார்த் பிளாக் கட்​டிடத்​தில் இருந்து மற்​றொரு கர்​தவ்யா பவனுக்கு மாறவுள்​ளது. பாது​காப்​புத்​துறை அமைச்​சகம் மற்​றும் பிரதமர் அலு​வல​க​மும் சவுத் பிளாக் கட்​டிடத்​தில் இருந்து மாற்​றம் செய்​யப்​பட​வுள்​ளன.

    இதுகுறித்து பிரதமர் அலு​வல​கம் விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘1.5 லட்​சம் சதுர மீட்​டரில் 2 தரை தளங்​கள், 7 அடுக்​கு​மாடிகளு​டன் நவீன தொழில்​நுட்​பங்​களை பயன்​படுத்தி கர்​தவ்யா பவன்​கள் கட்​டப்​பட்​டுள்​ளன. 30 சதவீத மின்​சார செலவை குறைக்​கும் வகை​யில் இந்த கட்​டிடம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

    இந்த புதிய கட்​டிடங்​கள், மத்​திய அரசு அலு​வல​கங்​களின் பராமரிப்பு செலவை குறைக்​கும். பணிச் சூழல் மற்​றும் ஊழியர்​களின் நலன், சேவை ஆகிய​வற்றை மேம்​படுத்​தும். நவீன கட்​டிடங்களுக்கு உதா​ரண​மாக தி​கழும் கர்​தவ்யா பவன்​களில், ஊழியர்​கள் அடை​யாள அட்​டை மூலம்​ மட்​டுமே உள்​ளே நுழைய முடியும்​.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு

    August 6, 2025
    தேசியம்

    ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டலை சமாளிக்க ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.20,000 கோடியில் திட்டம்

    August 6, 2025
    தேசியம்

    1971-ல் பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கிய அமெரிக்கா: இந்திய ராணுவத்தின் பதிவு வைரலாக பரவுகிறது

    August 6, 2025
    தேசியம்

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்

    August 6, 2025
    தேசியம்

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சந்தேகம்: டிஆர்டிஓ விருந்தினர் மாளிகை மேலாளர் கைது

    August 6, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தில் எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்

    August 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘கிங்டம்’ படத்துக்கு பாதுகாப்பு கோரிய மனு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    • கோவை காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட நபரால் பரபரப்பு: ஆணையர் விளக்கம்
    • இரண்டாவது காபியைத் தவிர்க்கவும்: பிற்பகல் சரிவை வெல்ல 5 ஆற்றல் அதிகரிக்கும் பானங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு 12 மைல் நகரும்’: நியூயார்க் நகரத்திற்கு அருகில் நகரும் ஒரு சூப்பர்ஹாட் ஜெயண்ட் ‘குமிழ்’ என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வெளிநாடுகளில் அதிக வசூல் செய்து சாதனை படைத்த ‘சையாரா’ படம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.