Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சோதனையில் 328 துப்பாக்கிகள், 10,600 குண்டுகள் மீட்பு
    தேசியம்

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சோதனையில் 328 துப்பாக்கிகள், 10,600 குண்டுகள் மீட்பு

    adminBy adminJune 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சோதனையில் 328 துப்பாக்கிகள், 10,600 குண்டுகள் மீட்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சோதனையில் 328 துப்பாக்கிகள், 10,600 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி மற்றும் குகி பழங்குடியினத்தவர்கள் இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறி பலர் கொல்லப்பட்டனர். அங்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன.

    போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கலவரக்காரர்கள் வன்முறைக்கு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், அனைத்து தரப்பினரும் கொள்ளையடிக்கப்பட்ட சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா கடந்த பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டார். இதன்படி, மைதேயி சமுதாய அமைப்பைச் (ஆரம்பை டெங்கோல்) சேர்ந்தவர்கள் 307 ஆயுதங்களை ஒப்படைத்தனர். ஆனால் குகி சமுதாய அமைப்பினர் ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை.

    இதனிடையே, ஆரம்பை டெங்கோல் அமைப்பின் தலைவர் அசிம் கனன் உள்ளிட்ட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 8-ம் தேதி கைது செய்யதனர். இதனால் மீண்டும் கலவரம் வெடித்தது. இந்த சூழ்நிலையில், பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர்.

    இதுகுறித்து போலீஸார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சில இடங்களில் ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் ஜூன் 13-ம் தேதி இரவு சோதனை நடத்தினர். இரவு முழுவதும் நடைபெற்ற சோதனையில் ஏஸ்எல்ஆர் (151), ஐஎன்எஸ்ஏஎஸ் (65), எல்எம்ஜி (12), ஏ.கே. (6) ரகம் உட்பட 328 துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. இதுபோல, எஸ்எல்ஆர் (3,534), ஐஎன்எஸ்ஏஎஸ் (2,186), கையெறி குண்டுகள் (10) உட்பட 10,600 குண்டுகள் மீட்கப்பட்டன. இதுவரை ஒட்டுமொத்தமாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் லட்சக் கணக்கான குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி

    July 1, 2025
    தேசியம்

    மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி கட்டுப்பாடு எதிரொலி: மசூதிகளின் பாங்கு ஒலிக்கும் ‘செயலி’க்கு வரவேற்பு!

    July 1, 2025
    தேசியம்

    பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?

    July 1, 2025
    தேசியம்

    வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 1, 2025
    தேசியம்

    பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?

    July 1, 2025
    தேசியம்

    பயணிகளின் அனைத்து தேவைகளுக்குமான ரயில்ஒன் செயலி – ரயில்வே அமைச்சர் அறிமுகம்

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 63.6% மின் கட்டணம் உயர்வு” – தொழில்முனைவோர் கூட்டமைப்பினர் விரக்தி
    • மூளை ஆரோக்கிய பூஸ்ட் உதவிக்குறிப்புகள்: மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்கவும் நரம்பியல் நிபுணர் 5 பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்
    • ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி
    • அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
    • புற்றுநோய்: முழுமையான இருளில் தூங்குவது: புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்க இது எவ்வாறு உதவுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.