Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மசோதாக்களை செயலற்றதாக்க சட்டப்பேரவைக்கு மட்டுமே அதிகாரம்; ஆளுநருக்கு இல்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
    தேசியம்

    மசோதாக்களை செயலற்றதாக்க சட்டப்பேரவைக்கு மட்டுமே அதிகாரம்; ஆளுநருக்கு இல்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

    adminBy adminSeptember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மசோதாக்களை செயலற்றதாக்க சட்டப்பேரவைக்கு மட்டுமே அதிகாரம்; ஆளுநருக்கு இல்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஏகமன​தாக நிறைவேற்​றப்​படும் மசோ​தாக்​களை செயலற்​ற​தாக்​கும் அதி​காரம் சட்​டப்​பேர​வைக்​குத்​தான் உள்​ளது என்​றும் ஆளுநருக்கு அந்த அதி​காரம் இல்லை என்​றும் உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வாதிட்​டது. சட்ட மசோ​தாக்​களுக்கு ஒப்புதல் அளிக்​கும் விவ​காரத்​தில் ஆளுநருக்​கும், குடியரசு தலை​வருக்​கும் கால நிர்​ண​யம் செய்து உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டது.

    இதுதொடர்​பாக குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்.க​வாய், சூர்​ய​காந்த் உள்​ளிட்ட 5 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

    அப்​போது தமிழக அரசு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் அபிஷேக் மனுசிங்​வி, சட்​டப்​பேர​வை​யில் அமைச்​சர​வை​யின் ஒப்​புதல்​படி ஏகமன​தாக நிறைவேற்​றப்​பட்ட ஒரு மசோ​தாவை செயலற்​ற​தாக்​கும் அதி​காரம் சட்​டப்​பேர​வைக்​குத்​தான் உள்ளதேயன்றி, ஆளுநருக்கு அந்த அதி​காரம் கிடை​யாது.

    இதனால் மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிப்​பது தொடர்​பாக ஆளுநருக்​கும், குடியரசுத் தலை​வருக்​கும் கால நிர்​ண​யம் செய்து உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வில் எந்த தவறும் இல்​லை.

    இந்த விவ​காரத்​தில் எப்​போது தலை​யிட வேண்​டும், எப்​போது தலை​யிடக்​கூ​டாது என்​பது உச்ச நீதி​மன்​றத்​துக்கு நன்​றாகத் தெரியும். ஆளுநர்​கள், குடியரசுத் தலை​வரின் முடிவு​களை நீதி​மன்ற விசா​ரணைக்கு உட்​படுத்த முடி​யாது என்ற மத்​திய அரசின் வாதம் ஏற்​புடையதல்ல.

    மசோ​தாக்​கள் மீது இறுதி முடிவு எடுக்​கும் நீதிப​தி​யாகவோ அல்​லது சூப்​பர் முதல்​வ​ராகவோ ஆளுநர் செயல்பட முடி​யாது. நிறைவேற்​றப்​படும் மசோதா சட்​டத்​துக்கு முரணானது என்​றால் அதை நீதி​மன்​றம் பார்த்​துக்​கொள்​ளும். அது​தான் அதி​காரப்​பிரி​வினை.

    மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​காமல் ஆளுநர் கிடப்​பில் போடு​வதை எதிர்த்து ஒவ்​வொரு முறை​யும் சம்​பந்​தப்​பட்ட மாநில அரசு உச்ச நீதி​மன்​றத்தை நாடி பாி​காரம் தேட முடி​யாது. எந்த மசோ​தாக்​களை​யும் தனித்​தனி​யாக பிரித்​துப் பார்க்க முடி​யாது. இதுதொடர்​பாக அரசி​யலமைப்பு சட்​டத்​தி​லும் உரிய திருத்​தங்​களைக் கொண்டு வர வேண்​டும்.

    அது​போன்ற திருத்​தங்​கள் இல்லை என்​ப​தால் தான் உச்ச நீதி​மன்​றமே தனக்​குரிய அதி​காரத்​தைப் பயன்​படுத்தி இது​போன்ற காலநிர்​ண​யத்தை செய்​துள்​ளது. ஒரு​வேளை குறிப்​பிட்ட கால அளவைத்​தாண்டி ஆளுநர் கிடப்​பில் போட்​ட​டால் அந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளித்​த​தாக கருதப்பட வேண்​டும், என வாதிட்​டார்.

    அப்​போது நீதிபதி விக்​ரம்​நாத் குறுக்​கிட்​டு, இந்த விவ​காரத்​தில் ஆளுநருக்​குள்ள மூன்று வாய்ப்​பு​கள் குறித்து உச்ச நீதி​மன்​றமே ஏன் ஆராயக்​கூ​டாது என்​றார். அதற்கு தமிழக அரசு தரப்​பில், ‘‘மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கக்​கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்​கல் செய்​தால் விசா​ரித்து தீர்ப்​பளிக்க ஓராண்​டாகி​விடும். உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தால் 3 ஆண்டுகளாகிவிடும்.

    இந்த கால அவகாசம் ஆளுநருக்கு வீட்டோ அதி​காரத்தை தரும். இதன்​மூலம் உச்ச நீதி​மன்​றம் காலக்​கெடு விதித்து பிறப்​பித்த உத்​தர​வால் பலன் இல்​லாமல் போய்​விடும், என வாதிடப்​பட்​டது. இதே​போல மேற்​கு​வங்க மாநிலம் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் கபில்​சிபில் ஆஜராகி, நாட்​டின் எதிர்​காலத்தை இந்த விவ​காரத்தை விசா​ரிக்​கும் உச்ச நீதி​மன்ற அரசி​யல் சாசன அமர்வு தீர்​மானிக்க வேண்​டும்.

    ஆளுநருக்கு அளிக்​கப்​பட்​டிருக்​கும் அதி​காரத்தை விருப்​புரிமை​யாகக் கொள்​ளாமல் பொறுப்​புடைமை​யாகக் கருத வேண்​டும். மசோ​தாவை மாதக்​கணக்​கில் நிறுத்தி வைக்​கும் ஆளுநருக்​கான அதி​காரம் கட்​டற்​றது என்​றால் அபத்​த​மாகி​விடும் என வா​திட்​டார். அதையடுத்​து நீதிப​தி​கள்​ இந்​த வழக்​கு வி​சா​ரணை​யை இன்​றைக்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அமெரிக்காவின் வரிவிதிப்பு உயர்வால் சுயசார்பு இந்தியா சபதம் ஏற்கும் பிரச்சாரத்தை தொடங்கும் பாஜக

    September 3, 2025
    தேசியம்

    ஜார்​க்கண்​டில் ‘இந்த வார சிறந்த காவலர்’ திட்டத்தின் கீழ் போலீஸாருக்கு விருது வழங்கி ஊக்​குவிக்​கும் எஸ்​.பி.

    September 3, 2025
    தேசியம்

    ‘கன்னடம் தெரியுமா?’ – என்ற  சித்தராமையா கேள்விக்கு முர்மு பதில்

    September 3, 2025
    தேசியம்

    ​பாலியல் வன்​கொடுமை வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்​எல்ஏ ஹர்​மீத்: துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பியோட்​டம்

    September 3, 2025
    தேசியம்

    மராத்தா சமுதாயத்தின் 6 கோரிக்கைகள் ஏற்பு: உண்ணாவிரதத்தை முடித்தார் ஜாரங்கே

    September 3, 2025
    தேசியம்

    பிஆர்எஸ் கட்​சியிலிருந்து மேலவை உறுப்பினர் கவிதா சஸ்பெண்ட்: மகள் மீது கே.சந்திரசேகர ராவ் ஒழுங்கு நடவடிக்கை

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ’கட்டா குஸ்தி 2’ படப்பூஜையுடன் பணிகள் துவக்கம்
    • மின்வாரிய ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு
    • சிறந்த ஆக்ஸிஜன் ஓட்டத்திற்கு நடக்கும்போது முயற்சிக்க 5 சுவாச நுட்பங்கள்
    • அமெரிக்காவின் வரிவிதிப்பு உயர்வால் சுயசார்பு இந்தியா சபதம் ஏற்கும் பிரச்சாரத்தை தொடங்கும் பாஜக
    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.