Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“மக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியும்” – காஷ்மீர் பேரவையில் உமர் பேச்சு
    தேசியம்

    “மக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியும்” – காஷ்மீர் பேரவையில் உமர் பேச்சு

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “மக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியும்” – காஷ்மீர் பேரவையில் உமர் பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஸ்ரீநகர்: “பயங்கரவாதத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்தை எனது அரசு வலுப்படுத்தும். ஏனெனில் பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே அதை தோற்கடிக்க முடியும். துப்பாக்கியால் பயங்கரவாதியை கட்டுப்படுத்த முடியாது, ஆனால் மக்கள் நம்முடன் இருந்தால் பயங்கரவாத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும். அதற்கான நேரம் வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன்” என்று ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா, “பயங்கரவாதத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்தை எனது அரசு வலுப்படுத்தும். ஏனெனில் பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே அதை தோற்கடிக்க முடியும்.

    மக்கள் நம்முடன் இருக்கும்போது தீவிரவாதமோ அல்லது பயங்கரவாதமோ நிச்சயம் முடிவுக்கு வரும். பயங்கரவாதத்துக்கு எதிரான மக்களின் கோபத்தைக் கருத்தில் கொண்டு, நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், அதுவே அதன் முடிவின் தொடக்கமாகும். மக்களை அந்நியப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் நாம் எடுக்கக் கூடாது. துப்பாக்கியால் பயங்கரவாதியை கட்டுப்படுத்த முடியாது; ஆனால், மக்கள் நம்முடன் இருந்தால் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும். அதற்கான நேரம் வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன்.

    ஜம்மு காஷ்மீர் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தன்னிச்சையான போராட்டங்கள் நடந்தன. வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் ஸ்ரீநகரின் ஜாமியா மசூதியில் முதல் முறையாக இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த மாற்றத்தை வலுப்படுத்த முயற்சிப்போம்” என்று தெரிவித்தார்.

    தீர்மானம்: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் துணை முதல்வர் சுரிந்தர் சவுதரி, ஏப்.22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதல் பற்றி ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அந்தத் தீர்மானத்தில், “பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல் குறித்து இந்த அவை தனது அதிர்ச்சியையும், கவலையையும் வெளிப்படுத்துகிறது. இந்தக் கோழைத்தனமான கொடுமையான தாக்குதலை இந்த அவை கடுமையாக கண்டிக்கிறது.

    இந்த பயங்கரவாத தாக்குதல் காஷ்மீரின் தனித்துவமான கலாச்சார அடையாளம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலாகும். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இந்த அவை ஆறுதலாக நிற்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுகிறவர்களுக்கு அவை தனது இரங்கலையும், வருத்தத்தையும் பகிர்ந்து கொள்கிறது.

    பங்கரவாதிகள் தாக்குதலின் போது அவர்களுடன் துணிச்சலுடன் போராடி சுற்றுலா பயணிகளைக் காக்க தனது இன்னுயிரை இழந்த சைது அடில் ஹுஸைன் ஷாவின் தியாகத்தை இந்த அவை போற்றுகிறது. அவரின் துணிச்சல் மற்றும் தன்னலமில்லாத தன்மை காஷ்மீரின் உண்மையான உணர்வினை வெளிப்படுத்துகிறது. மேலும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு உத்வேகமாக செயல்படும்.

    ஏப்.23-ம் தேதி நடந்த பாதுக்காப்பு அமைச்சரவைக் குழு கூட்டத்துக்கு பின்பு, மத்திய அரசு அறிவித்துள்ள தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை இந்த அவை அங்கீகரிக்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாஜக செய்வது மொழி பயங்கரவாதம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

    July 21, 2025
    தேசியம்

    நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    July 21, 2025
    தேசியம்

    நாடாளுமன்றம் ஒன்றும் ராகுல் காந்தியின் வரவேற்பறை கிடையாது: தர்மேந்திர பிரதான் காட்டம்

    July 21, 2025
    தேசியம்

    எம்.பிக்களுக்கு மதச்சார்பின்மை வார்த்தை இடம்பெறாத அரசியலமைப்பு புத்தகம்: மக்களவைத் தலைவருக்கு கி.வீரமணி கண்டனம்

    July 21, 2025
    தேசியம்

    ‘ட்ரம்ப்புக்கு மோடியின் பதில் என்ன?’ – எதிர்க்கட்சிகளின் அமளியில் முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை!

    July 21, 2025
    தேசியம்

    கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆகஸ்ட் மாதத்துக்குள் ஏசி மயமாகிறது புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்!
    • “மார்க்சிஸ்ட் கட்சிக்கு இளைஞர்களை ஈர்த்தவர் அச்சுதானந்தன்” – முத்தரசன் புகழஞ்சலி
    • ஆப்டிகல் மாயை: வெறும் 15 வினாடிகளுக்குள் படத்தில் மறைக்கப்பட்ட குதிரையைக் கண்டறியவும்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாஜக செய்வது மொழி பயங்கரவாதம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
    • 50 பதக்கங்கள் பெற்ற தமிழக காவல்துறை அணியை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி சங்கர் ஜிவால்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.