Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மகாராஷ்டிர மாநிலத்தில் முறைகேடு: மகளிர் உரிமைத் தொகை பெறும் 14,000 ஆண்கள்
    தேசியம்

    மகாராஷ்டிர மாநிலத்தில் முறைகேடு: மகளிர் உரிமைத் தொகை பெறும் 14,000 ஆண்கள்

    adminBy adminJuly 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மகாராஷ்டிர மாநிலத்தில் முறைகேடு: மகளிர் உரிமைத் தொகை பெறும் 14,000 ஆண்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: மகாராஷ்டிராவில் மகளிர் உரிமைத் தொகையை 14 ஆயிரம் ஆண்​கள் பெற்று வரு​வது தணிக்​கை​யில் தெரிய வந்துள்ளது மகா​ராஷ்டி​ரா​வில் கடந்த ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்​றது. தேர்​தல் நடை​பெறு​வதற்கு சில மாதங்களுக்கு முன்​பு, மகளிர் உரிமைத் தொகை திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது.

    இதன்​படி 21 முதல் 65வயதுக்​குட்​பட்ட, ஆண்டு வரு​மானம் ரூ.2.5 லட்​சத்​துக்​குட்​பட்ட பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்​கப்​படு​கிறது. இதனிடையே, தேர்​தலில் பாஜக கூட்​டணி ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது. இதற்கு இந்த திட்டம் முக்​கிய பங்கு வகித்​த​தாக கூறப்​படு​கிறது.

    இந்​நிலை​யில், இந்த திட்​டம் குறித்து பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மேம்​பாட்டு துறை சார்​பில் தணிக்கை செய்​யப்​பட்​டது. இதில், 14,298 ஆண்​களுக்கு இந்த திட்​டத்​தின் கீழ் ரூ.21.44 கோடி வழங்​கப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​துள்​ளது. இந்த திட்​டத்​துக்கு இணைய வழி​யில் விண்​ணப்​பம் பெறப்​பட்​டது.

    அப்​போது, ஆண்​கள், பெண்​களின் பெயரில் விண்​ணப்​பம் செய்து இத்​தகைய முறை​கேட்​டில் ஈடு​பட்​டிருப்​பது அம்​பல​மாகி உள்​ளது. இந்த திட்​டம் அமலுக்கு வந்து 10 மாதங்​கள் கடந்த நிலை​யில் இந்த மோசடி வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது.

    இதுகுறித்து துணை முதல்​வர் அஜித் பவார் கூறும்​போது, “மகளிர் உரிமைத் தொகை திட்​டம் ஏழை பெண்​களின் நலனுக்​காக அறி​முகம் செய்​யப்​பட்​டது. இதில் ஆண்​கள் பயன்​பெறு​வதை ஏற்க முடி​யாது. அவ்​வாறு உதவித் தொகையை பெற்​றவர்​களிட​மிருந்து திரும்ப வசூலிக்​கப்​படும். இதற்கு அவர்​கள் ஒத்​துழைக்​கா​விட்​டால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்’’ என்​றார்.

    மேலும் தகு​தி​யில்​லாத 26.34 லட்​சம் பெண்​கள் இந்த திட்​டத்​தில் பயனடைந்து வந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவர்களுக்கான நிதி​யுதவி நிறுத்​தப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

    குறிப்​பாக, ஒரு குடும்​பத்​தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால் 7.97 லட்​சம் பெண்​கள் 3-வ​தாக பதிவு செய்து பயனடைந்து வரு​வது தெரிய​வந்​துள்​ளது. இதனால் அரசுக்கு ரூ.1,196 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

    இது​போல, விதி​களை மீறி உச்​சவரம்​பான 65 வயதுக்கு மேற்​பட்ட 2.87 லட்​சம் பெண்​கள் நிதி​யுதவி பெற்று வரு​கின்​றனர். இதனால் ரூ.431.7 கோடி கூடு​தல் செலவு ஏற்​பட்​டுள்​ளது. மேலும் 4 சக்கர வாக​னம் வைத்​திருக்​கும் குடும்​பத்​தைச் சேர்ந்த 1.62 லட்​சம் பெண்​கள் நிதி​யுதவி பெற்று வரு​வது தெரிய​வந்​துள்​ளது. இத்​திட்​டத்​தில் பல்​வேறு முறை​கேடு​கள் இருப்​ப​தால் முறை​யாக வி​சா​ரணை நடத்த வேண்​டும்​ என்​ற கோரிக்​கை எழுந்​துள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    நிலையான பொருளாதார வளர்ச்சியே இலக்கு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

    July 28, 2025
    தேசியம்

    உ.பி. கோயிலில் குரங்குகள் அட்டகாசத்தால் கூட்ட நெரிசல்: 2 பேர் பலி

    July 28, 2025
    தேசியம்

    “பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக ஏன் நினைக்கிறீர்கள்?” – ப.சிதம்பரம் கேள்வியால் சர்ச்சை

    July 28, 2025
    தேசியம்

    மகாராஷ்டிராவில் 2 மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பள்ளி காவலாளி கைது

    July 28, 2025
    தேசியம்

    மவுலானா சஜித் ரஷிதி பேச்சுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

    July 28, 2025
    தேசியம்

    ‘மவுன விரதம்’ – ஆபரேஷன் சிந்தூர் விவாதம் குறித்த கேள்விக்கு சசி தரூரின் பதில்

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நெல்லையில் இளைஞர் ஆணவக் கொலையா? – இரு உதவி ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் மீது வழக்கு
    • பருவமழை வெள்ளம் மற்றும் மோசமான சுகாதாரம் ஆகியவற்றின் மத்தியில் மும்பையில் மூளை-சேதப்படுத்தும் நாடாப்புழு ஆபத்து அதிகரித்துள்ளது; அதன் அறிகுறிகள், தடுப்பு உதவிக்குறிப்புகள் மற்றும் பிற தகவல்களை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நிலையான பொருளாதார வளர்ச்சியே இலக்கு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
    • கம்போடியா – தாய்லாந்து இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தை: மலேசியாவில் இன்று நடக்கிறது
    • பாஜக சூழ்ச்சியால் ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.