நாசிக்: மகாராஷ்டிராவில் கார், பைக் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், டிண்டோரி நகருக்கு அருகே புதன்கிழமை நள்ளிரவு சாலையில் சென்று கொண்டிருந்த காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதையடுத்து இரு வாகனங்களும் அருகில் இருந்த கால்வாயில் விழுந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்வப இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்ற போலீஸாரும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 7 பேரை சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் படுகாயமடைந்த 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.