Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மகாராஷ்டிராவில் நெரிசல் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு
    தேசியம்

    மகாராஷ்டிராவில் நெரிசல் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு

    adminBy adminJune 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மகாராஷ்டிராவில் நெரிசல் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகளில் 4 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று காலை 9.30 மணி அளவில் ரயில் கசாரா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திவா மற்றும் கோபர் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரயில்கள் எதிரெதிர் திசைகளில் சென்றபோது, இரண்டு ரயில்களிலும் நெரிசல் காரணமாக படிகளில் பயணித்த ​​பயணிகளின் முதுகுப்பைகள் உரசிக் கொண்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரயில் ஓடிக்கொண்டிருந்தபோது, ​​குறைந்தது 10 பயணிகள் கீழே விழுந்ததாகவும், இது குறித்து கசாரா நோக்கிச் செல்லும் ரயிலின் காவலர், ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததாகவும் அவர்கள் கூறினர். ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. கீழே விழுந்த பயணிகள் அனைவரும் கல்வாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களில் நான்கு பேர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “இந்தப் பாதையில் தினமும் காலையில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இது மிகவும் சோகமான சம்பவம். இறந்தவர்களின் குடும்பங்களின் துயரத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

    காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் விரைவாக வழங்கப்பட்டுள்ளன. அவசர மற்றும் விரிவான சிகிச்சையை வழங்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ரயில்வே விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம், விபத்துக்கான சரியான காரணம் இந்த விசாரணையின் மூலம் விரைவில் தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.

    விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா, “கசாரா செல்லும் ரயிலின் காவலர், தண்டவாள ஓரத்தில் காயமடைந்த பயணிகள் குறித்து காலை 9.30 மணியளவில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். பயணிகள் எந்த ரயிலில் இருந்து விழுந்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. விபத்து எப்படி நடந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், தெற்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் (CSMT) இருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்ட லக்னோ செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பயணிகள் விழுந்ததாக வெளியான செய்திகளை அவர் மறுத்தார்.

    மும்பையில் நடந்த மும்ப்ரா ரயில் விபத்தைத் தொடர்ந்து, மும்பை புறநகர் ரயில் நிலையத்திற்காக உற்பத்தி செய்யப்படும் அனைத்து ரயில் பெட்டிகளிலும் தானியங்கி கதவு மூடும் வசதிகள் இருக்கும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து ரயில் பெட்டிகளும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, கதவு மூடும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    டி.கே.சிவகுமார்தான் அடுத்த முதல்வர் என்று கூறிய எம்எல்ஏவுக்கு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ்!

    August 17, 2025
    தேசியம்

    அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர்

    August 17, 2025
    தேசியம்

    ‘பிஹார் தேர்தலை திருட புதிய சதி’ – வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ராகுல் குற்றச்சாட்டு

    August 17, 2025
    தேசியம்

    பிஹாரில் ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார நடைபயணம்: தொடங்கி வைக்கும் லாலு பிரசாத் யாதவ்!

    August 17, 2025
    தேசியம்

    ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் மேக வெடிப்பு, நிலச்சரிவு: 7 பேர் உயிரிழப்பு

    August 17, 2025
    தேசியம்

    மும்பை மருத்துவமனையில் இருந்து வங்கதேச கர்ப்பிணி கைதி தப்பியோட்டம்

    August 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
    • சிறிய விவரங்களை நினைவுபடுத்த முடியவில்லையா? நினைவகத்தைப் பயிற்றுவிக்க 5 வழிகள் இங்கே
    • டி.கே.சிவகுமார்தான் அடுத்த முதல்வர் என்று கூறிய எம்எல்ஏவுக்கு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ்!
    • பாமக தலைவரானார் நிறுவனர் ராமதாஸ் – சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
    • உங்கள் 9-5 வேலைக்கு ஒரு மேசையுடன் பிணைக்கப்பட்டுள்ளதா? இருதயநோய் நிபுணர் அங்கீகரிக்கப்பட்ட பழக்கவழக்கங்கள் உங்கள் மேசை வேலையை ஆரோக்கியமாக மாற்றும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.