Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘போதைப் பொருள் இல்லாத இந்தியா’ பிரச்சாரத்தில் இணைவீர்: இளைஞர் ஆன்மிக மாநாட்டில் மத்திய அமைச்சர் அழைப்பு
    தேசியம்

    ‘போதைப் பொருள் இல்லாத இந்தியா’ பிரச்சாரத்தில் இணைவீர்: இளைஞர் ஆன்மிக மாநாட்டில் மத்திய அமைச்சர் அழைப்பு

    adminBy adminJuly 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘போதைப் பொருள் இல்லாத இந்தியா’ பிரச்சாரத்தில் இணைவீர்: இளைஞர் ஆன்மிக மாநாட்டில் மத்திய அமைச்சர் அழைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: போதைப் பொருள் இல்லாத இந்தியாவுக்கான பிரச்சாரத்தில் நாட்டு மக்கள் இணைய வேண்டும் என்றும், மத, சமூகத் தலைவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு இயக்கத்தில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா கேட்டுக்கொண்டுள்ளார்.

    ‘போதைப் பொருள் ஒழிப்பு’ என்ற கருப்பொருளுடன் 2 நாள் இளைஞர் ஆன்மிக உச்சி மாநாடு வாரணாசியில் இன்று தொடங்கியது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டை துறையின் அமைச்சர் மன்சுக் மண்டவியா தொடங்கிவைத்தார். இந்த உச்சி மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 122 ஆன்மிக, சமூக – கலாச்சார அமைப்புகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் பேசிய மன்சுக் மண்டவியா, “போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது நாட்டுக்கு மிகவும் முக்கியம். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டுமானால், இளைஞர்கள் போதைப்ப ழக்கத்துக்கு ஆட்படக் கூடாது. நமது இளம் தலைமுறையினர் அரசு திட்டங்களின் பயனாளிகளாக மட்டும் இல்லாமல், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்து, நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும் செயல்பட வேண்டும்.

    போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக உள்ளது. போதைப்பொருள் நாட்டின் முன்னேற்றத்துக்கு கடுமையான சவாலாக அமைகிறது. இளைஞர்களிடையே போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வைப் பரப்ப மத, சமூகத் தலைவர்கள் தீவிரமாகப் பங்காற்ற வேண்டும். ஒவ்வொரு நபரும் குறைந்தது ஐந்து பேரையாவது போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில் சேர ஊக்குவிக்கும் வகையில் ஒரு மக்கள் இயக்கம் நமக்குத் தேவை.

    இந்த இரண்டு நாள் உச்சி மாநாடு மதிப்புமிக்க விவாதங்களுக்கும் அர்த்தமுள்ள முடிவுகளுக்கும் வழிவகுக்கும் என்று நம்புகிறேன். நாளை (ஜூலை 20) ‘காசி பிரகடனம்’ வெளியிட உள்ளது. இது இளைஞர்கள், ஆன்மிகத் தலைவர்களின் கூட்டுப் பார்வையையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் ஆவணமாக அமையும். இந்த ஆவணம் போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான விரிவான செயல் திட்டத்தை வழங்கும். போதைப் பொருள் ஒழிப்பிலும் மறுவாழ்விலும் பணிபுரிவோருக்கு இது வழிகாட்டும் சாசனமாக செயல்படும்” என தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    டெல்லியில் கணவரை காதலனுடன் இணைந்து கொன்ற மனைவி: சாட் மூலம் சிக்கியது எப்படி?

    July 19, 2025
    தேசியம்

    ‘என் குழந்தைகளை பராமரிக்க விழைகிறேன்’ – குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்ணின் முன்னாள் கணவர் கூறியது என்ன?

    July 19, 2025
    தேசியம்

    டிஆர்எஃப் குறித்த அமெரிக்க அறிவிப்பு இந்தியாவுடனான கருத்து இடைவெளியை குறைக்கும்: சசி தரூர்

    July 19, 2025
    தேசியம்

    ஒடிசாவில் 15 வயது சிறுமியை எரித்துக் கொல்ல முயற்சி

    July 19, 2025
    தேசியம்

    இந்தியா மதச்சார்பற்ற நாடு; இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர்: கிரண் ரிஜிஜு

    July 19, 2025
    தேசியம்

    ‘ட்ரம்ப் குறிப்பிட்ட அந்த 5 ஜெட் விமானங்கள் பற்றிய உண்மை என்ன?’ – மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

    July 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெல்லியில் கணவரை காதலனுடன் இணைந்து கொன்ற மனைவி: சாட் மூலம் சிக்கியது எப்படி?
    • பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
    • ‘என் குழந்தைகளை பராமரிக்க விழைகிறேன்’ – குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்ணின் முன்னாள் கணவர் கூறியது என்ன?
    • அஜித் படத்தை உறுதி செய்த ஆதிக் ரவிச்சந்திரன்!
    • கொடைக்கானல்: சட்டவிரோத தங்கும் விடுதிகள் குறித்து புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.