Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»போதைப்பொருள் பறிமுதலுக்கும் தாக்குதலுக்கும் தொடர்பு: உச்ச நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்
    தேசியம்

    போதைப்பொருள் பறிமுதலுக்கும் தாக்குதலுக்கும் தொடர்பு: உச்ச நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    போதைப்பொருள் பறிமுதலுக்கும் தாக்குதலுக்கும் தொடர்பு: உச்ச நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: குஜராத்தில் ரூ.21 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதலுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

    அண்மையில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்த வழக்கை என்ஏஐ போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் என்ஐஏ போலீஸார் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது என்ஐஏ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி கூறியதாதாவது: பஹல்காம் தாக்குதலுக்கும், ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதலுக்கும் தொடர்பு உள்ளது. இந்தத் தீவிரவாதத் திட்டங்களை அரங்கேற்றுவது லஷ்கர் இ தொய்பா (எல்இடி) தீவிரவாத அமைப்புதான். அந்த அமைப்புதான் இந்தியாவுக்குள் குஜராத் வழியாக போதைப் பொருட்களை கடத்தி, இளைஞர்களுக்கு அவற்றை விற்பனை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளது.

    போதைப் பொருட்களை விற்பனை செய்து அதிலிருந்து கிடைக்கும் நிதி மூலம், தீவிரவாத நடவடிக்கைகளை அரங்கேற்றுவது எல்இடி தீவிரவாத அமைப்பின் சதித்திட்டமாகும்.

    இதன்மூலம் இந்தியாவை பலவீனப்படுத்த அந்த அமைப்பு முயல்கிறது. அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பஹல்காமில் தீவிரவாதிகள் எந்த மாதிரியான தாக்குதலை நடத்தி உள்ளார்கள் என்பதை அறிவீர்கள்.

    ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் ஆசாமியின் மூலம், பாகிஸ்தானின் ஐஏஎஸ் உதவியுடன் இந்த போதைப்பொருள் கடத்தப்படடுள்ளது. ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்த 2,988.2 கிலோ எடையுள்ள போதைப்பொருள், டால்கம் பவுடர் என்ற பெயரில் கடத்தப்பட்டுள்ளது.

    இதிலிருந்து கிடைக்கும் பணம் மூலம் தீவிரவாதத் திட்டங்களை அவர்கள் செயல்படுத்துகின்றனர். இவ்வாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது: ராகுல் காந்தி

    August 12, 2025
    தேசியம்

    தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு எத்தகையது? – நிபுணர்கள் கருத்து

    August 12, 2025
    தேசியம்

    பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதை இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி

    August 12, 2025
    தேசியம்

    “காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை” – பிரியங்கா குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தூதர் பதில்

    August 12, 2025
    தேசியம்

    சிராக் பாஸ்வான் முதல் பிரசாந்த் கிஷோர் வரை… பிஹாரில் கோலோச்சும் சிறிய கட்சிகள்!

    August 12, 2025
    தேசியம்

    ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழுவின் அறிக்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு: மக்களவை ஒப்புதல்

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஷோலே 50 ஆண்டுகள் | இதெல்லாம் ஒரு படமா?
    • குன்றத்தூர் அபிராமி மேல்முறையீடு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    • 5 பெண்களை வலிமையாக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் (மேலும் வயதானதை மெதுவாக்கும்)
    • இந்திய-ஆரிஜின் டாக்டர் வினய் பிரசாத் வெளியேறிய சில வாரங்களுக்குப் பிறகு எஃப்.டி.ஏ-க்கு திரும்புகிறார்; லாரா லூமர் இதை ‘மிகச்சிறந்த முடிவு’ என்று அழைக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது: ராகுல் காந்தி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.