Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»போக்சோ வழக்கிலிருந்து விடுவிப்பு: 100 கார், 10,000 ஆதரவாளர்களுடன் பாஜக முன்னாள் எம்.பி. வெற்றி வலம்
    தேசியம்

    போக்சோ வழக்கிலிருந்து விடுவிப்பு: 100 கார், 10,000 ஆதரவாளர்களுடன் பாஜக முன்னாள் எம்.பி. வெற்றி வலம்

    adminBy adminMay 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    போக்சோ வழக்கிலிருந்து விடுவிப்பு: 100 கார், 10,000 ஆதரவாளர்களுடன் பாஜக முன்னாள் எம்.பி. வெற்றி வலம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அயோத்தி: போக்சோ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 100 எஸ்யுவி கார்கள், 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷண் சிங் வெற்றி வலம் வந்தார். பாஜக மூத்த தலைவரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமாக இருந்தவர் பிரிஜ் பூஷண் சிங்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷண் இருந்த காலத்தில், பல பெண் மல்யுத்த வீரர்கள் தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்றும், பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல வீரங்கணைகள் இரவு பகலாக பல நாட்கள் டெல்லியில் போராடினர்.

    மேலும், இவர் மீது மைனர் பெண் ஒருவர், பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்ததால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2023-ல் நீதிமன்றத்தில் ஆஜரான அவர்கள் காவல்துறை அறிக்கைக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. தனது மகள் பொய் கூறிவிட்டதாக மைனர் பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரிஜ் பூஷணுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கைத் தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷண் சிங், நேற்று அயோத்தியில் 100 எஸ்யுவி கார்கள், 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் வெற்றி வலம் வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். நகர் முழுவதும் கார்களில் வலம் வந்து, வழக்கிலிருந்து விடுதலையானதை அவர் கொண்டாடினார். அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    அப்போது பிரிஜ் பூஷண் சிங் கூறும்போது, “என் மீது பொய்யான புகார்களை சுமத்தினர். ஆனால், சட்டத்தின் மீது, நீதியின் மீதும் நான் நம்பிக்கை வைத்திருந்தேன். எனது நம்பிக்கை ஒருநாளும் பொய்க்காது என்று நம்பினேன். அதற்கு இப்போது பலன் கிடைத்துவிட்டது. உண்மை வென்றுவிட்டது. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

    நான் அனுமன் மீது உண்மையான பக்தியை உடையவன். அவர் மீது பாரத்தைப் போட்டு விட்டு வழக்கு விசாரணையில் பங்கேற்றேன். தற்போது விடுதலை அடைந்துவிட்டேன்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அமர்நாத் யாத்திரையில் பேருந்துகள் மோதல்: 36 பக்தர்கள் காயம்

    July 6, 2025
    தேசியம்

    “புத்த மதம், திபெத் மக்களுக்கு சேவையாற்ற 130 வயது வரை வாழ விரும்புகிறேன்” – தலாய் லாமா

    July 6, 2025
    தேசியம்

    மருத்துவ கல்லூரி அங்கீகாரம் புதுப்பிக்க கோடிக்கணக்கில் லஞ்சம்: மடாதிபதி உட்பட 35 பேர் மீது சிபிஐ வழக்கு

    July 6, 2025
    தேசியம்

    “ஒன்றிணைத்த பெருமையை எனக்கு அளித்ததற்கு நன்றி!” – ராஜ் தாக்கரேவுக்கு ஃபட்னாவிஸ் பதில்

    July 5, 2025
    தேசியம்

    பிஹார் தொழிலதிபரும், பாஜக பிரமுகருமான கோபால் கெம்கா சுட்டுக் கொலை

    July 5, 2025
    தேசியம்

    ‘வரிவிதிப்பு விவகாரத்தில் ட்ரம்ப்பிடம் மோடி அடிபணிவாரா?’ – ராகுல் காந்திக்கு பியூஷ் கோயல் பதில்

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அத்துமீறி செயல்படும் காவல் துறை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு
    • ஆக்சியம் -4: பெங்களூரு ‘நீர் கரடிகள்’ விண்வெளியில் அவற்றின் நோக்கத்தை வழங்குகின்றன | இந்தியா செய்தி – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வழக்கறிஞரிடம் ரூ.96 லட்சம் மோசடி: அதிமுக ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கைது
    • ஆப்டிகல் மாயை: “வெவ்வேறு” டைனோசரை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அமர்நாத் யாத்திரையில் பேருந்துகள் மோதல்: 36 பக்தர்கள் காயம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.